முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹவாலா மோசடியில் தொழிலதிபரைக் கடத்திய திருட்டுத் தீவிரவாதிகள்

என் ஐ ஏ அதிகாரிகளைப் போல் நடித்து தொழிலதிபரைக் கடத்தி ரூபாய் 2 கோடி கொள்ளையடித்த பயங்கரவாதிக்கு காவல்துறை வலை ஹவாலா தொழில் போட்டியில் என் ஐ ஏ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரைக் கடத்தி ரூபாய். 2 கோடி பணம் பறித்த குற்றத்தில் தீவிரவாத வழக்கில் தொடர்புடைய அதிராமபட்டினம் தவ்பீக்கை காவல்துறை தேடி வருகின்றனர். சென்னை, ஏழுகிணறு பகுதியில் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் செய்து வரும் திவான் என்ற அக்பர் ஆகஸ்டு 17 ஆம் தேதி முத்தியால்பேட்டை நண்பர் வீட்டுக்குச் சென்று திரும்பிய போது நள்ளிரவு 1.30 மணியளவில் முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லையில் காரில் வந்த ஐந்து மர்ம நபர்கள் அக்பரை மிரட்டி காரில் கடத்தியவர்கள் தாங்களை என் ஐ ஏ அதிகாரிகளெனக் கூறியவர்கள் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள தனியார் ரிசார்ட்டில் இரண்டு நாட்கள் அவரை அடைத்து வைத்து அடித்துத் துன்புறுத்தி ரூபாய் 2 கோடி பணம் பறித்த பின் அவரை வெளியே விட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக கடந்த 24 ஆம் தேதி சென்னை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு காவல்துறை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் படி வடசென்னை இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன், பூக்கடை துணைக்கமிஷனர் கார்த்திக் மேற்பார்வையில் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் கடத்தலில் ஈடுபட்ட தியாகராயநகரைச் சேர்ந்த உமா மகேஸ்வரன், அரியலுார் ஆல்பர்ட் ஆகிய 2 பேர் நேற்று முன்தினம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு த் தகவல்கள் வெளியானது. ‘‘முத்தியால்பேட்டை பிரண்டிங் பிரஸ் அதிபர் கடத்தலில் தஞ்சை, அதிராமப்பட்டினத்தைச் சேர்ந்த தவ்பீக் உள்பட 7 பேர் செயல்பட்டு வந்துள்ளனர். தவ்பீக் இஸ்லாமிய தற்காப்புப்படை, இறைவன் ஒருவனே போன்ற அமைப்புகள் நடத்தி பல இளைஞர்களை அடிப்படைவாத செயல்களுக்கு தவ்பீக் ஈடுபடுத்தியுள்ளார். தவ்பிக் மீது தேசிய புலனாய்வு முகமையான என் ஐ ஏ விலும் வழக்குள்ளது. இந்தியாவையே உலுக்கிய மும்பை வெடிகுண்டு விபத்து சம்பவத்தில் தௌவ்பீக் தொடர்புடையவராவர். தமிழகம் முழுவதும் தீவிரவாத அமைப்பிற்காக நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டதாகவும், ஹவாலா பணப்பரிமாற்றம் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் பணியில் தௌவ்பீக் தலைவனாக இருந்து செயல்பட்டு வந்துள்ளார். அந்த வகையில் தொழிலதிபரான திவான் அக்பர் மற்றும் தவ்பீக் இருவருமே போட்டி போட்டுக்கொண்டு ஹவாலா பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தொழில் போட்டி மோதல் காரணமாக தௌவ்பீக் தனது கூட்டாளிகள் மூலம் தொழிலதிபர் அக்பரைக் கடத்தியது அம்பலமாகியுள்ளது. மேலும் அக்பரை மீட்பதற்காக கொடுக்கப்பட்டது ஹவாலா பணம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ள விவகாரத்தில் அடிப்படைவாத நடவடிக்கைகளில் தொடர்பு உள்ளதால் க்யூ பிரிவு காவல்துறையும் விசாரணைக்களத்தில் இறங்கியுள்ளனர். தௌவ்பீக்கை பிடிப்பதற்கு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ள நிலையில் திருச்சியில் தௌவ்பீக்கின் மனைவி சல்மாவை காவல்துறையினர் போலி பாஸ்போர்ட் வழக்கில் பிடித்துள்ளனர். தௌவ்பீக், சல்மாவைச் சந்தித்து வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து சல்மாவை திருச்சி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகத் திருச்சி வந்ததும் தெரியவந்துள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்த சல்மா, தௌவ்பீக்கை காதலித்து திருமணம் செய்துள்ளார். போலி பாஸ்போர்ட் மூலம் சட்டவிரோதமாக சென்னைக்கு வந்துள்ளனர். அங்கிருந்து கடந்த ஐந்து மாதங்களாக திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட சல்மா மூன்று மாதக் கர்ப்பிணியாக இருப்பதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்து சென்னை கொண்டு செல்ல காவல்துறையில் திட்டமிட்டுள்ளனர். சல்மாவிடம் விசாரணை நடத்தி தௌவ்பிக் பதுங்கியிருக்குமிடம் குறித்துக் கண்டுபிடிக்க தீவிரமாக முனைந்துள்ள நிலையில் கடத்தல் நடந்த இடத்திலும், அக்பரை கடத்தி வைக்கப்பட்ட இடத்திலும் செல்போன் அழைப்புகள் மற்றும் சிக்னலை ஆய்வு செய்து தௌவ்பீக் மற்றும் கூட்டாளிகளை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட தொழிலதிபர் அக்பரும் ஹவாலா பணப்பறிமாற்றத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளதால் முத்தியால்பேட்டை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்