முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப்போக்குவரத்து முறை எனும் தொலைநோக்குத் திட்டம்

எப்ஏஎம்இ இந்தியா திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொது போக்குவரத்து முறை என்னும் தொலைநோக்கை எட்டும் இத்திட்டத்தின் கீழ் திருச்சிக்கு 25 மின்-பேருந்து மின்னூட்ட நிலையங்கள் ஒதுக்கீடு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொது போக்குவரத்து என்னும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கை நனவாக்கும் ம் வகையில், மத்திய அரசு, பாஸ்டர் அடாப்சன் அன்ட் மனுபாக்சரிங் ஆப் ஹைபிரிட் எலக்டிரிக் வெகிகிள்ஸ் ( எப்ஏஎம்இ) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருச்சியில், 25 மின்சாரப் பேருந்துகளுக்கான மின்னூட்ட நிலையங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா, கோவா, குஜராத், சண்டிகார் ஆகிய மாநிலங்களில் 670 மின்சார பேருந்துகளுக்கு மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.  தமிழகம், மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத், போர்ட்பிளேர் ஆகிய இடங்களில் எப்ஏஎம்இ திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ், 241 மின்னூட்ட நிலையங்களை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கோவா, மகாராஷ்டிரா, நவி மும்பை, ராஜ்கோட், ஆகியவற்றுக்கு தலா 100 மின் பேருந்துகளும், சூரத்திற்கு 150 பேருந்துகளும், சண்டிகருக்கு 80 பேருந்துகளும், பெஸ்ட் மும்பைக்கு 40 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, கனரகத் தொழில் துறை 64 நகரங்களுக்கு 5595 மின் பேருந்துகளை ஒதுக்கி அனுமதி வழங்கியது. இதில், திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு தலா 100 மின் பேருந்துகளும், ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் ஆகிய நகரங்களுக்கு தலா 50 பேருந்துகளும், தஞ்சைக்கு 25 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டதும் அடக்கம். மின்சாரப் பேருந்துகளை ஊக்குவிக்கும் வகையில், கனரகத் தொழில் துறை, இந்த எப்ஏஎம்இ திட்டத்தை 2015 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தி வருகிறது. முதல் கட்ட திட்டம் 2019 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. 2019 ஏப்ரல் 1 முதல் மூன்றாண்டுகளுக்கு திட்டத்தின் இரண்டாவது கட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 10,000 கோடி. திட்டத்தின் இந்தக் கட்டம் 7000 மின் பேருந்துகள், 5 லட்சம் மின் மூன்று சக்கர வாகனங்கள், 55000 மின் நான்கு சக்கர பயணிகள் வாகனங்கள், 10 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. திட்டத்தின் முதல் கட்டத்தில், 2.8 லட்சம் துரித மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.359 கோடி வழங்கப்பட்டது. கனரக தொழில் துறை, நாடு முழுவதும், பல்வேறு நகரங்களுக்கான 425 மின்சார பேருந்துகளுக்கு ரூ. 300 கோடி மதிப்பில் அனுமதி வழங்கியது. நாடு முழுவதும் ஏற்கனவே, 30,000 மின்சார வாகனங்கள் விற்பனை ஆகியிருப்பதாக தேசிய ஆட்டோமோடிவ் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களைப் பயன்படுத்துவதால், 87.8 லட்சம் லிட்டர் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது. சுமார் 74,000 கிலோ கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 4,000 மின்சார இருசக்கர வாகனங்கள் உள்பட 4049 மின்சார வாகனங்களை வாங்கி தமிழகம் மாநிலங்களிலேயே முதலிடத்தில் உள்ளது. ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த திருமதி சுஜாதா, மின்சாரப் பேருந்துகள் நிச்சயமாக திருச்சி நகரில் காற்று மாசை வெகுவாகக் குறைக்கும் என்று கூறினார். குளிர் காலங்களில், ஶ்ரீரங்கத்தை திருச்சியுடன் இணைக்கும் காவிரி பாலம் பனிப்படலத்தால் சூழப்பட்டிருக்கும். இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும், மேலும் மின்சார பொது போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்பட்டால், கார்பன்டை ஆக்சைடு உமிழ்வையும், புகையையும் வெகுவாகக் குறைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.   சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்கள் நிச்சயமாக கார்பன் உமிழ்வைக் குறைத்து நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதிலாக, கூடுதலாக மின்சார வாகனங்கள் குறிப்பாக இருசக்கர வாகனங்கள்  இயக்கப்படுவதன் மூலம், எப்ஏஎம்இ இந்தியா திட்டம், காற்று மாசைக் குறைக்க பெரிதும் உதவும் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த