முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் பசல்பீமா பயிர் காப்பீட்டுத் திட்டம் ரூ 1258 கோடி தமிழகத்தில்

பயிர் நஷ்டத்தால் ஏற்படும் விவசாயிகளின் துயரை துடைப்பதற்காக பிரதமரின் பசல் பீமா காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்களுக்கு ரூ 1258 கோடி காப்பீட்டை இந்த திட்டம் வழங்குகிறது கே தேவி பத்மநாபன், கள விளம்பர அலுவலர், திருச்சிராப்பள்ளி பெருந்தொற்று காலத்திலும் கடுமையாக உழைத்து பெருமளவு அறுவடையை உறுதி செய்திருக்கும் விவசாயிகளின் கைகளில் நாட்டின் உணவுப் பாதுகாப்பு பத்திரமாக இருக்கிறது. பயிர் நஷ்டத்தால் ஏற்படும் நிதிச்சுமையால் விவசாயிகள் அவதியுறாத வகையில் பிரதமரின் பசல் பீமா காப்பீட்டு திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சராசரி விளைச்சலை கருத்தில் கொண்டு நிதியின் அளவை மாவட்ட அளவில் முடிவு செய்து கொள்ளும் வாய்ப்பு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனம் இல்லாத பயிர்களுக்கு 30 சதவீதமும், நீர்ப்பசனம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு 25 சதவீதமும் மத்திய மானியம் கிடைக்கும். தானியங்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களது பயிர்களை ஒரு ஏக்கருக்கு ரூ 327-க்கும், வேர்க்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களது பயிர்களை ஒரு ஏக்கருக்கு ரூ 540-க்கும், சோளம் விதைத்துள்ள விவசாயிகள் தங்களது பயிர்களை ஒரு ஏக்கருக்கு ரூ 5215-க்கும், தினை விதைத்துள்ள விவசாயிகள் தங்களது பயிர்களை ஒரு ஏக்கருக்கு ரூ 189-க்கும், செப்டம்பர் 30-க்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். திருச்சிராப்பள்ளியில், கரும்பு விவசாயிகள் அக்டோபர் 31-க்குள் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ 2,650 செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயிர் கடன்களை பெற்றுள்ள விவசாயிகள் தாங்கள் கடன் வாங்கியுள்ள வங்கியிலேயே காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் நெல், தானியங்கள், வேர்க்கடலை, சோளம், தினை ஆகியவற்றுக்கு மொத்த காப்பீட்டு தொகையில் வெறும் 2 சதவீதமும், பருத்திப் பயிர்களுக்கு மொத்த காப்பீட்டு தொகையில் வெறும் 5 சதவீதமும் செலுத்தினால் போதும். தமிழகத்தில் இது வரை 2 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்களுக்கு பிரதமரின் பசல் பீமா காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ 1258 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த பிரிமீயம் தொகையான ரூ 156 கோடியில், மத்திய அரசு ரூ 58 கோடியும், தமிழ் நாடு அரசு ரூ 72 கோடியும், விவசாயிகள் ரூ 26 கோடியும் செலுத்தியுள்ளனர். கட்டுபடியாகக்கூடிய காப்பீட்டின் மூலம் வேளாண் உற்பத்திக்கு ஆதரவு அளிப்பதற்காக 2016 கரீப் பருவத்தில் பிரதமரின் பசல் பீமா காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. எதிர்பாராத நிகழ்வுகளால் பயிர் நஷ்டம்/பாதிப்பை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பதன் மூலம் வேளாண் துறையில் நீடித்த உற்பத்திக்கு ஆதரவு அளிப்பதை பிரதமரின் பசல் பீமா காப்பீட்டு திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. புதுமையான மற்றும் நவீன வேளாண் நடைமுறைகளில் ஈடுபட விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. குறுகிய கால பருவம் சார்ந்த வேளாண் செயல்முறை கடன்கள்/குறிப்பிட்ட பயிர்களுக்கான விவசாயி கடன் அட்டை ஆகியவை வழங்கப்பட்டுள்ள விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டம் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. 2017 கரிப் பருவத்தில் இருந்து பயிர் கடன் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயிர் கடனுக்கான இலக்கு இந்த வருடம் ரூ 400 கோடியாக இருக்கும் நிலையில், திருச்சிராப்பள்ளியில் உள்ள 13,111 விவசாயிகளுக்கு இது வரை ரூ 102 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் எப்போதுமே பாதிக்கப்படுவதால், எந்தவிதமான நெருக்கடியில் இருந்தும் அவர்கள் மீளும் வகையில் திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிலத்தில் பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளுக்கு உறுதியான வருமானத்தை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு வேளாண் சட்டங்கள் சமீபத்தில் இயற்றப்பட்டன.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த