முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக கேரளாவின் ஷோபா சுரேந்திரன் நியமனம்

இந்தியாவின் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக கேரளத்திலிருந்து திருமதி ஷோபா சுரேந்திரன் நியமனம். பா ஜ க வில் அடிப்படை உறுப்பினராக,காரிய கர்த்தவாக தன் அரசியல் பயணத்தை தொடங்கியவர் கேரளாவில் சேர்ந்த சகோதரி ஷோபா சுரேந்திரன் எந்த வித அரசியல் குடும்பப் பின்னனியுமில்லை, யார் சிபார்சுமில்லை, பெரிய பணக்கார வீட்டுப்பெண்ணுமில்லை. இவரது நாட்டுப்பற்றையும்,பொதுமக்கள் சேவையையும்,கேரளாவில் பா ஜ க வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய அரும்பனியையும் இனம் கண்டு இவரை தேசிய மகளீர் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்ததுள்ளது பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைமை. தன்னலமற்ற நாட்டுபற்று ,சேவை மனப்பான்மை இருந்தால் போதும் பாரதிய ஜனதா கட்சியில் சாதாரண தொண்டனும் , பெரிய அரசாங்கப் பொறுப்புகளில் வந்து மக்கள் சேவையாற்றலாம் என்று மீண்டும் நிருபித்தது பாரதிய ஜனதா கட்சி. அவருக்கு நமது பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வாழ்த்துகள் சேச்சி.🌷பல ஏழைப் பெண்கள் வாழ்வில் நீதி வழங்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. துன்பத்தில் சிக்கியுள்ள பெண்களுக்கு தீர்வு காணும் வகையில் அவர்கள் எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக உதவி மையங்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பாலின உரிமை ஆர்வலர்கள் எப்போதும் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி, மத்திய ,மாநில அரசுகள் பெண்களின் அனைத்துப் புகார்களுக்கும் தீர்வு காணும் ஒரே இடமாக, 181 என்ற பிரத்யேக உதவி மைய எண்ணை உருவாக்கியுள்ளன. பெண்களும், குழந்தைகளும் வீடுகளுக்குள் தங்கியிருக்கும் கட்டாயச் சூழலில், அவர்கள் துன்புறும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. ஊரடங்கின் முதல் வாரத்தில், குடும்ப வன்முறைகள் திடீரென அதிகரித்ததை, தேசிய மகளிர் ஆணையமும்  கருத்தில் கொண்டு, அவற்றுக்கு உடனடியாகத் தீர்வு காண நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்ட அமலாக்கப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது. மாற்று நடவடிக்கையாக, தேசிய மகளிர் ஆணையம் 2020 ஏப்ரல் மாதத்தில், 7217735372 என்ற சிறப்பு வாட்ஸ்அப் எச்சரிக்கை உதவி மைய எண்ணை அறிமுகம் செய்தது. குடும்ப வன்முறைச் சம்பவங்கள் குறித்து உடனடியாக யார் வேண்டுமானாலும் இதில் புகார் செய்யலாம். தேசிய மகளிர் ஆணையத்தின் வலைதளப்படி, இந்த நிதியாண்டில் மொத்தம் 5187 புகார்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து 35 புகார்கள், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.   பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான சிறப்புப்பிரிவுக்குத் தலைமை வகிக்கும் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் திரு. எம். ரவி, கோவை கள விளம்பரத்துறைக்கு அளித்த தகவலில், மாநில காவல்துறை மக்களுக்கு 24 மணி நேரமும் இடைவிடாமல் சேவை புரிந்து வருவதாகவும், பெண்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார். கோவையில், துன்பத்தில் சிக்கியுள்ள பெண்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை, காவல்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. துன்பத்தை அனுபவித்து வரும் பெண்களுக்கு  நிவாரணம் அளிக்கும் ஒரே இடமாக உதவிமைய எண் 181 உருவெடுத்துள்ளது என மாவட்ட ஆட்சியர் திரு. ராஜாமணி கூறியுள்ளார். உதவி பெறுவதற்கு முன்பு போல பல இடங்களுக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை என்பதை இது உறுதி செய்திருக்கிறது. வன்முறைக்கு ஆளான பெண்களுக்கு தங்குமிடமும், சட்ட மருத்துவ உதவியும், ஆலோசனையும் வழங்கப்படுகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த