முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவிற்கான வெளிநாட்டு நன்கொடை திருத்தச்சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல்

இந்தியாவில் என்.ஜி.ஓக்கள் வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறுவதற்கான சட்டத் திருத்தங்களுக்கு (FCRA Amendment Act 2020) க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார் எப்போது அமலாகுமென்ற விவரமில்லை. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடவும், ஹிந்து மதத்தை அழிக்கும் விதத்தில் பாரம்பரியத்தை தடுக்கும் வழக்குகள் போடவும், இந்தியாவை உடைக்கவும் வெளிநாடுகளிலிருந்து மதமாற்றம் செய்யவும் என்.ஜி.ஓ வில் சில கைக்கூலிகளும், எதிர்க்கட்சிகளும் எடுத்த முயற்சிகளணைத்தும் தோல்வி. என்.ஜி.ஓக்களின் நிர்வாகிகள் ஆதார் எண்களைப் பகிர வேண்டும், 20 சதத்திற்கும் அதிகமாக நிர்வாகச் செலவுகள் செய்யக்கூடாது, நன்கொடை பெற்ற காரணத்துக்காக மட்டுமே செலவிட வேண்டும், பிற என்.ஜி.ஓக்களுக்கு பணம் வழங்க முடியாது இனி - எனப் பல கட்டுப்பாடுகள். அரசிதழ். The Gazette of India CG-DL-E-28092020-222069 MINISTRY OF LAW AND JUSTICE (Legislative Department) New Delhi, the 28th September, 2020 வெளிவந்தது. சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் என்.ஜி.ஓக்கள் கதறுவது இப்போது காதில் விழுகிறது.. விவரம் கீழே. 2010 ல் வந்த வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தில் (Foreign Contribution (Regulation) Act, FCRA 2010) லோக் சபாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது FCRA 2020. அதிலிருந்து சில அம்சங்கள். "அரசு ஊழியர்" என அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்ட எவரும் இந்த வெளிநாட்டுப் பணம் பெற முடியாது இனிமேல் வெளிநாட்டிலிருந்து நன்கொடைப் பணம் பெறுபவர் (தனி மனிதர், குழு, நிறுவனம்) இனி வேறெவருக்கும் அந்தப் பணத்தைப் பகிர அல்லது மாற்ற (Transfer) முடியாது. முன்பெல்லாம் ஒரு என்.ஜி.ஓ தொண்டு நிறுவனம் பணம் வாங்கி, மற்ற உபரி சில்லரை என்.ஜி.ஓக்களுக்கு பணத்தை Transfer செய்ய, அந்த சில்லரைகள் சில கலவர வேலைகள் செய்து வந்தன. அது இனி நடக்காது. அப்படிஒ் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்தால், உரிமம் ரத்து. இனி வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் என்.ஜி.ஓக்கள் (உரிமத்துக்காக விண்ணப்பிக்கும் போதோ அல்லது புதுப்பிக்கும் போதோ) அந்த என்.ஜி.ஓவின் நிர்வாகிகள் உள்ளிட்டோரின் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாட்டவர் தங்கள் கடவுச் சீட்டு அதாவது பாஸ்போர்ட் எண்ணைப் பகிர வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டுக்கு எதிர்க்கட்சிகளும், என்.ஜி.ஓக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததிலிருந்தே இதன் முக்கியத்துவம் தெளிவாகிறது. இனி வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் என்.ஜி.ஓக்கள் டில்லியில் இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியாவின் குறிப்பிட்ட கிளை ஒன்றில் FCRA கணக்குத் துவங்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே பணத்தைப் பெறலாம். இந்தக் கணக்கில் வெளிநாட்டுப் பணம் மட்டுமே செலுத்தலாம். வேறெந்தப் பணமும் செலுத்த முடியாது. உரிமம் முடிந்து 6 மாதங்கள் வரை அதைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களுக்கு உரிமைச் சான்றிதழ் வழங்குமுன், அவர்களது பினாமி (சொத்து) விவரங்கள், அவர்கள் மதமாற்றம் மற்றும் இனவாதக் கலவரங்கள் உள்ளிட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டார்களா என்ற விவரம், பெற்ற நன்கொடையை வேறு காரணங்களுக்காக செலவிட்டார்களா போன்றவற்றை விசாரிக்கும் உரிமையை அரசு கண்காணித்து பின் வழங்கும். நன்கொடைப் பயன்பாட்டில் (utilization) விதிகள்: எந்தக் காரணத்தை காட்டி மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டதோ, அந்த காரணத்துக்காக மட்டுமே இந்த வெளிநாட்டு நன்கொடை செலவிடப்பட வேண்டும். பணம் தவறாக உபயோகிக்கப்பட்டதாக அரசு நம்பினால், மேலும் பணம் எடுக்க இயலாத வகையில் அந்தக் கணக்கை அரசு முடக்கலாம். (கணக்கில் மீதமிருக்கும் பணம் அரசு எடுத்துக் கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஆனால், பெற்ற பணத்தை வெளிநாட்டுக்கு திரும்ப அனுப்ப முடியாது. இது வரை பெற்ற பணத்தில் பல ஆயிரம் கோடி வங்கிகளில் உள்ளது என்பது சிறப்பு! அநேகமாக அரசு எடுத்துக் கொள்ளும் என்கிறார்கள். மேலும் விவரங்கள் பின்னர். இந்த 5 & 6 கண்டிஷனுக்கு என்.ஜி.ஓ நிறுவனம் கவலைப்பட அதுவே காரணம் வெளிநாட்டுப் பணத்தில் இது வரை 50 சதம் நிர்வாகக் காரணங்களுக்காக (administrative purposes) செலவிட அனுமதி இருந்தது. அதை 20 சதம் என குறைத்து விட்டது (இதன் காரணமாக இனி பெரிய ஹோட்டல்களில் உணவு, கேளிக்கை, பயண செலவு எல்லாவற்றையும் குறைக்க வேண்டிய நிலையில் தவறிழைக்கும் என்.ஜி.ஓக்கள் பதிவை 180 நாட்களுக்கு இடை நீக்கம் செய்யுமாம் அரசு. அதை மேலும் 180 நாட்களுக்கு நீட்டிக்கவும் முடியுமாம். 2014 முதல் பல என்.ஜி.ஓ உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், மீதமிருக்கும் என்.ஜி.ஓக்கள் வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுவதில் எந்த குறைபாடும் இருப்பதாக தெரியவில்லை. 2018-19 காலக் கட்டத்தில் ரூ 20,011.21 கோடி பணம் வந்துள்ளது 'இந்தியாவை உடைக்கும்' நோக்கத்துடன் செயல்படும் ஆக்ஸ்ஃபாம் என்.ஜி.ஓ தலைவன், "இது என்.ஜி.ஓக்களுக்கு பேரழிவு தரும் அடி" எனும் கதறல் காதுகளுக்கு இனிமை. இதில் முக்கியமான விஷயம்: என்.ஜி.ஓ எதுவும் மதமாற்றத்தில் ஈடுபடக்கூடாது என்பது. யாராவது அவர்கள் மீது மதமாற்றத்தில் ஈடுபட்டார்கள் என்று புகாரளித்தாலும் போதும், அவர்கள் என்.ஜி.ஓ கணக்கு முடக்கப்படும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த