முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவல் ஆய்வாளர் புகழேந்தி 13 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் போக்சோவில் கைது






பணி செய்த பல இடங்களில் ஊழலும் முறைகேடும் செய்துவந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி என்னூரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில்  போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டார்.

முன்பே இவரைப் பற்றிய செய்தியை வெளியிட்டு இருந்தால் இவனை காப்பாற்றும் முயற்சியாக மேலும்   பொய் வழக்குகள் எனப் பலர் மீது பதிவு     செய்து இருப்பார் இவரது கூட்டாளிக் குற்றவாளிகளுடன்  சேர்ந்து கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் புகழேந்தியை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சபீனா என்பவர்  சென்னை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், தனது 13 வயது மகள் தொடர்பாக ஒரு புகார் அளித்தார். அவரது புகார் மனுவில், மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து எனது 13 வயதான மகளை  கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து, தனது மகளை மீட்டுக் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை ஆய்வாளர்  பிரியதர்ஷினி, விசாரணை நடத்தி பின் 8 பேரைக்  கைது செய்தார். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு ஈடுபட வைத்ததும்,  இதில்,  மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகிய 4 பேர் புரோக்கர்களாகச் செயல்பட்டு, வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்து வந்ததும் தெரிய வந்ததையடுத்து, புரோக்கர்களான    மதன்குமார், ஷாகிதா பானு, சந்தியா, மகேஷ்வரி, வனிதா, விஜயா ஆகியோர் கைது செய்யப்பட்டு, நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  இவர்களுக்கு உடந்தையாக முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக், முஸ்தபா ஆகியோரும் புரோக்கர்களாகச் செயல்பட்டது தெரியவந்தது அவர்களையும் மொத்தமாகக் கைது செய்த காவல்துறை மேலும் விசாரணையை தீவிரப்படுத்தவே,  வடசென்னை வடக்கு மாவட்டத்தில் ஒரு கட்சியின் செயற்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான  ராஜேந்திரன் (வயது 44) என்பவர், தனது தொழில்முறை காரியத்திற்காக, பலமுறை இந்த 13 வயது சிறுமி மற்றும் பல இளம்பெண்களை போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள அடுத்த  அதிர்ச்சிச் தகவலும் வெளியானதையடுத்து,  தொழிலதிபர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்த காவல்துறை  அவரிடம்  நடத்திய விசாரணையில் எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ள சி.புகழேந்தி என்பவருக்காக பலமுறை சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறினார். இதனால் இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் உடனே கைது செய்யப்பட்டார். அவர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதன் காரணமாக, இன்ஸ்பெக்டர் புகழேந்தியை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து காவல் ஆணையர் அகர்வால்  நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் புகழேந்தி மீது ஏற்கெனவே பணிசெய்த இடங்களிலும் இங்கும் ஏராளமான புகார்கள் உள்ளதாகவும், புகார் கொடுக்க பெண்கள் வந்தால் அவர்களது தொலைபேசி  நம்பரை வாங்கிப் போன் செய்து தொல்லை கொடுப்பாராம். பெண்கள் விஷயத்தில் மோசமான நபர். குறிப்பாக, சிறுமிகளுக்கு அதிக அளவில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாராம். சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும்  எண்ணூர் பகுதியில் பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமி விவகாரத்தில் வழக்கின் தொடக்கத்திலேயே, குற்றவாளிகள் பட்டியலில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பெயரும்; புகைப்படமும்; வெளியானதோடு சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் 15 பேரின்  பெயர்களும்; படங்களும்  வெளியாகி இருக்கிறது.  'அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரும் கைது' என இன்னொரு பெயர் வந்தாலும், அவர் படம் மட்டும் இல்லை  இதே வழக்கில் உள்ளூர் நிருபர் ஒருவரும் கைதாகியிருக்கிறார். பொதுவாகவே இது போன்ற மிக முக்கிய வழக்குகளில் தொடர்புள்ளதாக கருதப்படும் நபர்களின் பெயர், ஊர்; புகைப்படங்கள் வெளியாவது;  வழக்கின் இறுதி (க்ளைமாக்ஸ்) யை நீர்த்துப் போக வைக்கும் என்பது; கடந்த காலங்களில் உள்ள  நீதிமன்றத் தீர்ப்புகளும் அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. 'சிறார்' களை காக்க வேண்டிய இதுபோன்ற வழக்குகளில், 'அடையாள அணி வகுப்பு' போன்ற அம்சங்கள் இடம் பெறும்  என்பதை எப்படி மறந்து போனார்கள்?  எண்ணூர் பகுதியில் பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமி விவகாரம்  நிருபர் ஒருவரும் கைதாகி இருக்கிறார். 30.11.2020 ல்  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமி, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்  ஆய்வாளர்  பிரியதர்ஷிணி மற்றும் காவல்துறையினர்  பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி சிறுமியின் சகோதரி உறவினர்கள் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மதன்குமார், அவரின் மனைவி பானு, மதன்குமாரின் அம்மா செல்வி, மதன்குமாரின் தங்கை சந்தியா, திருவொற்றியூரைச் சேர்ந்த மகேஷ்வரி (வயது29), வனிதா (வயது35), பூந்தமல்லியைச் சேர்ந்த விஜயா (வயது45), புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக்கேயன் (வயது25), ஆகிய 8 பேரை 11.11.2020-ல் காவல்துறை  கைது செய்தனர். அவர்களை  காவலில் எடுத்து விசாரித்த போது பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அரசியல்  பிரமுகர் ராசேந்திரன் (வயது 46) என்பவர் கைது செய்யப்பட்டார்.ராசேந்திரன் அளித்த தகவலின்படி காவல்துறை  இன்ஸ்பெக்டர் புகழேந்தி (வயது 45) கைதானார். சிறுமி பாலியல் வழக்கில் எண்ணூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் புகழேந்தி கைதானதால் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து ராயபுரத்தைச் சேர்ந்த காதேஸ்வரராவ் (வயது 33) கைதானார். தொடர்ந்து நடந்த விசாரணையில் சிறுமியை பாலியல் தொழில் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மண்ணடியைச் சேர்ந்த பசுலுதீன் (வயது 32), ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 35) ஆகியோர் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.கோவளத்தைச் சேர்ந்த பெயர் வெளியிடாத  பெண்ணின் மகளுக்கு வயது 15. வடசென்னையிலுள்ள உறவினர் வீட்டில் சில மாதங்களுக்கு முன் அந்தச் சிறுமி தங்கியிருந்தார். சிறுமியின் உறவினர்கள் பாலியல் தொழில் புரோக்கர்களாக இருந்ததனர். அதனால் சிறுமியைக் கட்டாயப்படுத்தி ஒரு வார விற்பனை  பேக்கேஜ் என்ற முறையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கின்றனர். இந்தத் தகவல் தெரிந்ததும் சிறுமியின் அம்மா, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.தனியார் தொலைக்காட்சி நிருபர் வினோபா ஜி இந்த வழக்கில் சிக்கியது எப்படி என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை  உயரதிகாரி ஒருவரிடம் விசாரிக்க  ``சிறுமியின் உறவினரான பெண் ஒருவருக்கும் நிருபருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இந்தச் சமயத்தில்தான் சிறுமி குறித்த தகவல் நிருபருக்கு கிடைத்திருக்கிறது. அதன்பிறகே சிறுமியை நிருபர் சந்தித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமியும், நிருபர் வினோபா ஜியை அடையாளம் காட்டியதை யடுத்து அவரைக் கைது செய்திருக்கிறோம். நிருபர் வினோபா ஜியும் சிறுமியின் உறவுக்கார பெண்ணும் செல்போனில் பேசியதற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கிறது.சிறுமி வழக்கில் தோண்ட தோண்டப்  பல தகவல்கள் வெளியானதால் துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் டீம் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் வடசென்னையில் தனியார் தொலைகாட்சி ஒன்றின் நிருபராக வேலைப்பார்த்த வினோபா ஜி (வயது 39) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அரசியல்  பிரமுகர், போலீஸ் இன்ஸ்பெக்டர், சிறுமியின் உறவினர்கள், பத்திரிகையாளர் ஒருவரும் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான கவுன்சலிங் மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறோம். இந்த வழக்கில் சிறுமி மற்றும் அவரின் அம்மா ஆகியோருக்கு கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திருக்கிறோம். சிறுமி கூறிய தகவல்களின் படி கடந்த 2 மாதங்களில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குறித்த பட்டியலைச் சேகரித்தன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றார்.சிறுமியின் பாலியல் வழக்கு சென்னை அயனாவரம் சிறுமி வழக்கைவிட விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த