முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவிட்19 குறித்த 700 இந்திய விஞ்ஞானிகளின் தன்னார்வத் தகவல் தளம்

கோவிட்19 குறித்த 700 இந்திய விஞ்ஞானிகளின் தன்னார்வத் தகவல் தளம்




“பொதுமக்களுக்கு நம்பகத்தன்மையான மற்றும் சரியான தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள 700 இந்திய விஞ்ஞானிகள் தாங்களாகவே முன்வந்து கொவிட்-19-க்கு இந்திய விஞ்ஞானிகளின் பதில் (ஐஎஸ்ஆர்சி) என்ற தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.www.indscicov.in என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் பல்வேறு மாநில மொழிகளில் தகவல்களை அறிந்து கொள்ளலாம்” என்று விஞ்ஞான் பிரசார் அமைப்பின் அறிவியல் தொடர்பாளரும், விஞ்ஞானியுமான டாக்டர் டி வி வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், ‘பெருந்தொற்று காலத்தில் சமூக ஊடகங்களின் வாயிலாக அறிவியல் விழிப்புணர்வு பிரச்சாரம்' என்ற தலைப்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த இணையக் கருத்தரங்கில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

உண்மையான மற்றும் அறிவியல் சார்ந்த செய்திகளும், மனநலப் பாதுகாப்பு நோய் தொற்று தொடர்பான சமூகப் பிரச்சினைகள், அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் மருத்துவத் தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதே போல் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையமும், இந்திய அறிவியல் கழகமும் இணைந்து செயல்படுத்தும் கொவிட்கியான் என்ற இணையதளமும் நோய்தொற்று குறித்த பல்வேறு ஆராய்ச்சித் தகவல்களை வழங்குவதாக டாக்டர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

இரட்டை முனைகள் கொண்ட வாளான சமூக ஊடகத்தில் உண்மையான செய்திகளுடன் போலியான செய்திகளும் அதிக அளவில் பரவுகின்றன. பெருந்தொற்றுக் காலத்தில் இதனைக் கருத்தில் கொண்டு பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி), இந்திய அறிவியல் தொலைக்காட்சி,கொவிட்-19 பற்றிய இந்திய விஞ்ஞானிகளின்பார்வை (ஐஎஸ்ஆர்சி), கொவிட்கியான் போன்ற அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மக்களிடையே சரியான தகவல்களை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார்.

கொரோனா நோய்த் தொற்றின் துவக்கக் காலகட்டத்தில் இந்தத் தொற்று குறித்து பொது மக்களிடையே நிலவி வந்த அச்சத்திற்கும், தவறான கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு மாநில மொழிகளில் நோய்த் தொற்றின் அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு மருந்தின் தயாரிப்பு முயற்சி, ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் போன்ற விஷயங்கள் தொடர்பாக ஏராளமான கருத்தரங்குகள் நடைபெற்றதாக அவர் கூறினார்.

 

இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் இந்திய அறிவியல் தொலைக்காட்சி எனும் அறிவியல் சார்ந்த ஓடிடி தளத்தில் கொவிட்-19 நோய் தொற்று குறித்த ஆவணப்படங்களும், வழக்கமான அறிக்கைகளும் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார். செல்போன் போன்ற நவீன சாதனங்களின் மூலம் இந்திய அறிவியல் என்னும் செயலியை தரவிறக்கம் செய்து கொண்டு  பொதுமக்கள் தங்களது ஓய்வு நேரங்களில் இந்த ஆவணப்படங்களைக் காணலாம் என்றார் அவர்.

 

பொதுமக்கள் பொய்யான தகவல்களுக்கு இரையாவதைத் தடுக்கும் வகையில் பத்திரிககை தகவல் அலுவலகத்தின் (பிஐபி) உண்மை சரிபார்ப்பு (Fact check) முயற்சியை டாக்டர் டி வி வெங்கடேஸ்வரன் வெகுவாகப் பாராட்டினார். “பெருந்தொற்றுக் காலத்தில் சமூக ஊடகங்கள், குறிப்பாக வாட்ஸ்அப் போன்ற வளர்ந்து வரும் ஊடகங்கள் பெருவாரியான மக்களைச் சென்றடையும் நிலையில் பிஐபி உண்மை சரிபார்ப்பு முயற்சி, சரியான தகவல்கள் அவர்களுக்குக் கிடைப்பதில் பெரும் உதவியாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

“பொதுமக்களுக்கு நம்பகத்தன்மையான மற்றும் சரியான தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள 700 இந்திய விஞ்ஞானிகள் தாங்களாகவே முன்வந்து கொவிட்-19-க்கு இந்திய விஞ்ஞானிகளின் பதில் (ஐஎஸ்ஆர்சி) என்ற தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.www.indscicov.in என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் பல்வேறு மாநில மொழிகளில் தகவல்களை அறிந்து கொள்ளலாம்”, என்று அவர் குறிப்பிட்டார். உண்மையான மற்றும் அறிவியல் சார்ந்த செய்திகளும், மனநலப் பாதுகாப்பு நோய் தொற்று தொடர்பான சமூகப் பிரச்சினைகள், அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் மருத்துவத் தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதே போல் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையமும், இந்திய அறிவியல் கழகமும் இணைந்து செயல்படுத்தும் கொவிட்கியான் என்ற இணையதளமும் நோய்தொற்று குறித்த பல்வேறு ஆராய்ச்சித் தகவல்களை வழங்குவதாக டாக்டர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

 

பெருந்தொற்று குறித்து அறிவிப்பதற்கு முன்பாகவே கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் கீழ் இயங்கும் ஹைதராபாத்தில் உள்ள இந்திய இரசாயன தொழில்நுட்பக் கழகத்தை முன்னிறுத்தி இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள மருந்துகளை அடிப்படையாகக் கொண்டு புதிய மருந்துகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் 25 மருந்துகளை பரிசோதித்ததாக அவர் மேலும் கூறினார்.

 

கொவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் முயற்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், உலக அளவில் 150 தடுப்பு மருந்துகள் வெவ்வேறு கட்ட சோதனையில் இருப்பதாகவும் பொதுமக்களுக்கு அவற்றை செலுத்தும் முன் தடுப்பு மருந்தின் கொள்முதல் திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார். பொதுவாக ஒரு தடுப்பு மருந்தை உருவாக்க 5 முதல் 8 ஆண்டுகள் வரை தேவைப்படும் என்று கூறிய அவர், நோயின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மூன்றாவது கட்ட சோதனைக்குப் பின்னர் நடைபெறும் அவசரகால பயன்பாட்டை நான்காம் கட்ட சோதனையாக மேற்கொள்ளும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

முன்னதாக இந்தக் கருத்தரங்கில் அறிமுக உரை நிகழ்த்திய சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு மா அண்ணாதுரை, இந்திய அளவிலும், உலக அளவிலும் அறிவியலின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு ‘இந்திய மற்றும் சர்வதேச நலனுக்கு அறிவியல்' என்பது 2020 சர்வதேச அறிவியல் திருவிழாவின் கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

கருத்தரங்கின் நிறைவில், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குநர் திரு குருபாபு பலராமன் நன்றியுரை வழங்கினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த