முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவிட்19 குறித்த 700 இந்திய விஞ்ஞானிகளின் தன்னார்வத் தகவல் தளம்

கோவிட்19 குறித்த 700 இந்திய விஞ்ஞானிகளின் தன்னார்வத் தகவல் தளம்




“பொதுமக்களுக்கு நம்பகத்தன்மையான மற்றும் சரியான தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள 700 இந்திய விஞ்ஞானிகள் தாங்களாகவே முன்வந்து கொவிட்-19-க்கு இந்திய விஞ்ஞானிகளின் பதில் (ஐஎஸ்ஆர்சி) என்ற தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.www.indscicov.in என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் பல்வேறு மாநில மொழிகளில் தகவல்களை அறிந்து கொள்ளலாம்” என்று விஞ்ஞான் பிரசார் அமைப்பின் அறிவியல் தொடர்பாளரும், விஞ்ஞானியுமான டாக்டர் டி வி வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், ‘பெருந்தொற்று காலத்தில் சமூக ஊடகங்களின் வாயிலாக அறிவியல் விழிப்புணர்வு பிரச்சாரம்' என்ற தலைப்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த இணையக் கருத்தரங்கில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

உண்மையான மற்றும் அறிவியல் சார்ந்த செய்திகளும், மனநலப் பாதுகாப்பு நோய் தொற்று தொடர்பான சமூகப் பிரச்சினைகள், அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் மருத்துவத் தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதே போல் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையமும், இந்திய அறிவியல் கழகமும் இணைந்து செயல்படுத்தும் கொவிட்கியான் என்ற இணையதளமும் நோய்தொற்று குறித்த பல்வேறு ஆராய்ச்சித் தகவல்களை வழங்குவதாக டாக்டர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

இரட்டை முனைகள் கொண்ட வாளான சமூக ஊடகத்தில் உண்மையான செய்திகளுடன் போலியான செய்திகளும் அதிக அளவில் பரவுகின்றன. பெருந்தொற்றுக் காலத்தில் இதனைக் கருத்தில் கொண்டு பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி), இந்திய அறிவியல் தொலைக்காட்சி,கொவிட்-19 பற்றிய இந்திய விஞ்ஞானிகளின்பார்வை (ஐஎஸ்ஆர்சி), கொவிட்கியான் போன்ற அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மக்களிடையே சரியான தகவல்களை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார்.

கொரோனா நோய்த் தொற்றின் துவக்கக் காலகட்டத்தில் இந்தத் தொற்று குறித்து பொது மக்களிடையே நிலவி வந்த அச்சத்திற்கும், தவறான கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு மாநில மொழிகளில் நோய்த் தொற்றின் அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு மருந்தின் தயாரிப்பு முயற்சி, ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் போன்ற விஷயங்கள் தொடர்பாக ஏராளமான கருத்தரங்குகள் நடைபெற்றதாக அவர் கூறினார்.

 

இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் இந்திய அறிவியல் தொலைக்காட்சி எனும் அறிவியல் சார்ந்த ஓடிடி தளத்தில் கொவிட்-19 நோய் தொற்று குறித்த ஆவணப்படங்களும், வழக்கமான அறிக்கைகளும் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார். செல்போன் போன்ற நவீன சாதனங்களின் மூலம் இந்திய அறிவியல் என்னும் செயலியை தரவிறக்கம் செய்து கொண்டு  பொதுமக்கள் தங்களது ஓய்வு நேரங்களில் இந்த ஆவணப்படங்களைக் காணலாம் என்றார் அவர்.

 

பொதுமக்கள் பொய்யான தகவல்களுக்கு இரையாவதைத் தடுக்கும் வகையில் பத்திரிககை தகவல் அலுவலகத்தின் (பிஐபி) உண்மை சரிபார்ப்பு (Fact check) முயற்சியை டாக்டர் டி வி வெங்கடேஸ்வரன் வெகுவாகப் பாராட்டினார். “பெருந்தொற்றுக் காலத்தில் சமூக ஊடகங்கள், குறிப்பாக வாட்ஸ்அப் போன்ற வளர்ந்து வரும் ஊடகங்கள் பெருவாரியான மக்களைச் சென்றடையும் நிலையில் பிஐபி உண்மை சரிபார்ப்பு முயற்சி, சரியான தகவல்கள் அவர்களுக்குக் கிடைப்பதில் பெரும் உதவியாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

“பொதுமக்களுக்கு நம்பகத்தன்மையான மற்றும் சரியான தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள 700 இந்திய விஞ்ஞானிகள் தாங்களாகவே முன்வந்து கொவிட்-19-க்கு இந்திய விஞ்ஞானிகளின் பதில் (ஐஎஸ்ஆர்சி) என்ற தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.www.indscicov.in என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் பல்வேறு மாநில மொழிகளில் தகவல்களை அறிந்து கொள்ளலாம்”, என்று அவர் குறிப்பிட்டார். உண்மையான மற்றும் அறிவியல் சார்ந்த செய்திகளும், மனநலப் பாதுகாப்பு நோய் தொற்று தொடர்பான சமூகப் பிரச்சினைகள், அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் மருத்துவத் தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதே போல் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையமும், இந்திய அறிவியல் கழகமும் இணைந்து செயல்படுத்தும் கொவிட்கியான் என்ற இணையதளமும் நோய்தொற்று குறித்த பல்வேறு ஆராய்ச்சித் தகவல்களை வழங்குவதாக டாக்டர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

 

பெருந்தொற்று குறித்து அறிவிப்பதற்கு முன்பாகவே கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் கீழ் இயங்கும் ஹைதராபாத்தில் உள்ள இந்திய இரசாயன தொழில்நுட்பக் கழகத்தை முன்னிறுத்தி இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள மருந்துகளை அடிப்படையாகக் கொண்டு புதிய மருந்துகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் 25 மருந்துகளை பரிசோதித்ததாக அவர் மேலும் கூறினார்.

 

கொவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் முயற்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், உலக அளவில் 150 தடுப்பு மருந்துகள் வெவ்வேறு கட்ட சோதனையில் இருப்பதாகவும் பொதுமக்களுக்கு அவற்றை செலுத்தும் முன் தடுப்பு மருந்தின் கொள்முதல் திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார். பொதுவாக ஒரு தடுப்பு மருந்தை உருவாக்க 5 முதல் 8 ஆண்டுகள் வரை தேவைப்படும் என்று கூறிய அவர், நோயின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மூன்றாவது கட்ட சோதனைக்குப் பின்னர் நடைபெறும் அவசரகால பயன்பாட்டை நான்காம் கட்ட சோதனையாக மேற்கொள்ளும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

முன்னதாக இந்தக் கருத்தரங்கில் அறிமுக உரை நிகழ்த்திய சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு மா அண்ணாதுரை, இந்திய அளவிலும், உலக அளவிலும் அறிவியலின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு ‘இந்திய மற்றும் சர்வதேச நலனுக்கு அறிவியல்' என்பது 2020 சர்வதேச அறிவியல் திருவிழாவின் கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

கருத்தரங்கின் நிறைவில், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குநர் திரு குருபாபு பலராமன் நன்றியுரை வழங்கினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...