மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நவம்பர் 2020-ல் இறுதி செய்த பணியாளர் தேர்வு முடிவுகள்
கீழ்கண்ட பணியாளர் தேர்வு முடிவுளை மத்திய தேர்வாணையம் கடந்த நவம்பரில் இறுதி செய்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வு முடிவுகள் தபால் மூலம் தனியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகள் முழு விவரத்துக்கு இணையவழியில்
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/List6.pdf அறியலாம். தேர்வர்கள் இதுவரை இரயில்வே, பொதுத்துறை வங்கி இந்திய அரசுப் பணிகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் எழுதிக் கொண்டிருந்ததால் நேரம் மற்றும் பணம் அதிகம் செலவிட்ட நிலை மாறி தற்போது இந்திய அரசின் பல துறைகளுக்கும் சேர்த்து, தேசியப் பணியாளர் தேர்வு முகமை நடத்தும் ஒரு பொதுத் தகுதி தேர்வு மூலம் தேர்வர்கள் ஒரு கட்டணத்தை மட்டும் செலுத்தி தேர்வு எழுதுவதால் நேரமும், பணமும் குறைகிறது. மேலும் தேர்வர்களின் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், தேர்வர்களை இந்திய அரசுப் பணி, இரயில்வே அல்லது வங்கிப்பணியில் அமர்த்தப்படுவர். தற்போது நாடு முழுவதும் 177 மாவட்டங்களில் 1,000 தேர்வு மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை தேர்வர்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண் தேர்வர்களுக்கு அவர்கள் விரும்பும் மையங்களில் தேர்வு எழுத வாய்ப்புகள் உள்ளது.
கருத்துகள்