சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்த தேர்தல் இறுதியில் குலுக்கல் முறை மூலமாக மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்வுசெய்யப்பட்டார்
. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் அதிமுக கூட்டணி 8 வார்டுகளிலும் திமுக கூட்டனி 8 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. இரு தரப்பும் சமநிலையில் இருந்ததால் குலுக்கல் முறையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து திமுக சார்பில் செந்தில் என்பவர் போட்டியிட்டார். தொடர்ந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
கருத்துகள்