முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரவல் கட்சிக்கு பெயர்மாற்றம் செய்த மக்கள் சேவை கட்சி

ரஜினிகாந்தின்  ‘மக்கள் சேவை கட்சி’ அலு





வலகமாக சென்னை எர்ணாவூர் ரசிகர் மன்ற நிர்வாகியின்  முகவரியில் உள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டில் பதிவு செய்த  அரசியல் கட்சியை அதன் நிர்வாகிகளிடம் பேசி நடிகர் ரஜினிகாந்த் பெற்று பெயர் மாற்றம் செய்ததாகத்  தெரிகிறது. அரசியல் கட்சி  மேற்பார்வை யாளராக தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி ஆகியோர்   நியமித்த

ரஜினியின் அறிவிப்புக்குப் பின் புதிய கட்சி  குறித்து தலைமை தேர்தல் ஆணை யத்தில் ரஜினி விண்ணப்பித்தாரா என்ற வினா வந்த சூழலில்

புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து டெல்லி பிரபல வழக் கறிஞரிடம் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி டெல்லி டாக்டர் அப்துல் கலாம் சாலையாக மாற்றமான பழைய ஔவுரங்கசீப் சாலையிலுள்ள பங்களாவில் ஆலோசித்து     ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து  முடிவான பிறகு டெல்லியின் இருதயப் பகுதியில் உள்ள இந்த பங்களா அவருக்காக வாங்கப்பட்டதாகவும் தெரிகிறது.

 ‘‘புதிதாக அரசியல் கட்சி பதிவு செய்வதில் அமைப்புச் சட்டம், துணை விதிகள்  மற்றும்  சுமார் 300 பக்கத்துக்கு சமர்ப் பிக்கப்படும் நிர்வாகிகளின் பிரமாணப் பத்திரங்களில் அவர்களின் சொத்து விபரம்  உள்ளிட்டவைகள் தாக்கல் செய்யப்பட வேண்டுய சூழ்நிலை உள்ளதால் சிவாஜி படப் பாணியில் "நீங்க வந்தாமட்டும் போதும் ,வாங்க பழகலாம்" எனபது போல  ஏற்கெனவே பதிவு செய்துள்ள ஒரு கட்சியைப் வாங்கி பெயர் மாற்றம் செய்வதெளிது என்பதால், அந்த வழியை நாடியதாகவும் தகவலிது முன்கூட்டியே வெளியில் வந்துவிடக் கூடாது என்பதற்காக தனது நம்பிக்கைக்குரிய மகாராஷ்டிராவின் வழக்கறிஞர்  ஒருவர் இதற்கான பணியில் அமர்த்தி 2018 ஆம் ஆண்டு  இறுதியில், ‘அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்’ எனும் பெயரில் பதிவான ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகிகளிடம் அந்த வழக்கறிஞர் பேச்சுவார்த்தை நடத்தி இப்போது மக்கள் சேவை கட்சியாக மாறியது.

ஒரு கட்சி பதிவாகி அதன் பெயர் அல்லது நிர்வாகிகளை மாற்ற குறைந்தது ஒரு வருடம் அவகாசமாவது ஆகும் ஆகவே சிலரை நிர்வாகிகளாகப் போட்டு, கட்சியின் பெயரை ‘மக்கள் சேவை கட்சி’ என மாற்றியதன் தலைவராக எஸ்.பி.ஜேம்ஸ், பொதுச்செயலாளராக ஆண்டனி ஜோ ராஜா, பொருளாளராக மரியா ஜான் அகஸ்டின் ஆகியோர் இவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளராக இருந்த ஏ.பி. ஜோசப் ஸ்டாலின் குடும்பத்தினராகும் இவர் பல வருடங் களுக்கு முன்பு தூத்துக்குடியிலிருந்து மகராஷ்டிராவுக்கு புலம் பெயர்ந்து அங்கு சுரங்கம் உள்ளிட்ட பல தொழில்களைச் செய்து வந்தவருடன் பணியாற்றிய ஜோசப் ஸ்டாலின்,  கோடீஸ்வரராகும்.

அவ்வப்போது தூத்துக்குடிக்கு வந்து ரஜினி ரசிகர் மன்றத்தின் பொறுப்பு களையும்  கவனித்து வருவதாகத் தெரிகிறது. நிர்வாகிகள் பட்டியலில் ரஜினியின் பெயர் இடம் பெறவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூட அதன் நிர்வாகிகள் பட்டியலில் தனது பெயரை குறிப்பிடவில்லை என்பதும் இங்கே  கவனிக்கப்பட. வேண்டியதாகும்.

மக்கள் சேவை கட்சியின் 2018-19 ஆண் டுக்கான வரவாக குறிப்பிடப்பட்ட தொகை  ரூபாய் .34 ஆயி ரத்தைச்  செலவாக தேர்தல் ஆணையத்திடம் ஆடிட் ரிப்போர்ட்டாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியில் பெயர் மாற்றப்பட்டதாகச் செய்தி மக்கள் சேவை கட்சியின் அலுவலக முகவரியாக சென்னை எர்ணாவூர் பாலாஜி நகர் ஜோசப் ஸ்டாலின் வீட்டு முகவரி உள்ளது. மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது  பொதுச் சின்னங்கள் பட்டியலில் உள்ளது. இக் கட்சி இச்சின்னத்தில் போட்டியிட்டு குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றியோ அல்லது பதிவாகும் மொத்த வாக்குகளில் 5 சதவீத வாக்குகளைப் பெற்றால் மட்டுமே  அவரது கட்சிக்கு ஆட்டோ சின்னம் நிரந்தரமாகும். முன்பே பதிவான கட்சியை ரஜினி பேசி பெறுகிறார் என்ற செய்தி ஊடகங்களில் கசிந்ததையடுத்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் பெயரில் வெளியான அந்த அறிக்கையில்,

‘இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி அதில் இடம்பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி

வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக செய்திகளை மறுக்காமல், தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கும்படி மட்டும் அறிக்கையில் வேண்டுகோளாக விடப்பட்டுள்ளது. எனவே, நடிகர்  ரஜினிகாந்த்  கூறியபடி டிசம்பர் 31 க்கு முன்பாகவே அவரது கட்சியின் பெயர் குறித்த விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த