முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேரளத்தில் மகன்களால் கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு வந்த துன்பம்

கேரளத்தில்





மகன்களால் கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு வந்த துன்பம். இரண்டு மகன்களின் தனிப்பட்ட நடவடிக்கையால் பதவி விலகும் முடிவுக்கு தள்ளப்பட்டவர், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராண கொடியேரி பாலகிருஷ்ணன். தான் வகித்த பதவியிலிருந்து தற்காலிகமாக விலகிய பின் உடல்நிலை சரியில்லை எனக் கூறி விலகல் கடிதம் கொடுத்ததையடுத்து, இடைக்காலத் தலைவராக விஜயராகவன்  அறிவிக்கப்பட்டார் கேரள சி.பி.எம் மாநிலச் செயலாளராக 2015 ஆம் ஆண்டில்  முதலாவதாகப் பதவியேற்ற பின் இரண்டாம் முறையாக 2018 ஆம் ஆண்டு  மீண்டும் மாநிலச் செயலாளரானார்.அதிக செல்வாக்கு மிகுந்த நபராக வலம் வந்தவர் 2015 ஆம் ஆண்டில் சி.பி.எம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், பினராயி முதல்வரானதற்குப் பின்னால் இருக்கும் இவரின் பங்கு பெரியது.  பினாரயுடன் அதிக நெருக்கமானவராதலால்.  2018 ஆம் ஆண்டில் மீண்டும் மாநிலச் செயலாளர். உடல்நிலை காரணமாக பதவி விலகியிருக்கிறார் சில நாட்களாக கொடியேரியையும், அவரின் குடும்பத்தையும் சுற்றி என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். இது அனைத்தும் அவரின் மகன்களால் வந்தது  தொடர் சோதனைகளைச் சந்தித்தும் வருகிறார்.

கொடியேரி பாலகிருஷ்ணன் - வினோதினிக்கு இரண்டு மகன்களில் ஒருவர்  பினோய் கொடியேரி, மற்றொருவர் பினிஷ் கொடியேரி. இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல, வழக்குகளில் மாட்டிக்கொண்டு தந்தையின் பெயருக்கு களங்கம் விளைவித்து வருகிறார்கள். இதில் முதலில் சிக்கலை தந்தவர், கொடியேரியின் இரண்டாவது மகன் பினோய் கொடியேரி.

கேரள  முதலமைச்சர் பினராயி விஜயனுக்குப் பிறகு சி.பி.எம் கட்சியில் இரண்டாவது தலைவரும் கேரள சி,.பி.எம் மாநிலச் செயலாளருமான கோடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தனது பதவியில் இருந்து விலகினார். அவருடைய பதவி சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எஃப்) ஒருங்கிணைப்பாளர் விஜயராகவனுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் போதைப் பொருள் வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நிதியளித்த குற்றச்சாட்டில் அவரது இளைய மகன் பினீஷ் கோடியேரி அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதையடுத்து, பாலகிருஷ்ணன் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவியிலிருந்து விலகிய நிலையில்  சிறப்பு நீதிமன்றம் பினீஷின் ஜாமீன் மனுவை நிராகரித்த நவம்பர் 25ம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதால் 

கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக கருதப்படும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள 1200 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு முன்னதாக, கொடியேரி பாலகிருஷ்ண பதவி விலகியிருப்பது, அவருடைய மகன் போதைப் பொருள் வழக்கில் கைதாகியிருப்பதும்.

சில ஆண்டுகளுக்கு முன் துபாயில் இருந்த பினோய், அங்கு குடிப்பதற்காக பாருக்கு செல்வது வழக்கம். தினமும் அங்கு செல்லும்போது, அங்கு டான்சராக இருந்த இளம்பெண்ணுடன் பழகி, அவருடன் தனிக்குடித்தனம் நடத்தியுள்ளார். இதில் இருவருக்கும் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இந்தக் குழந்தைக்கு தற்போது 10 வயதாகும் நிலையில், அந்தப் பெண்ணை பினோய் ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பந்தப்பட்ட அந்தப் பெண் பீகாரைச் சேர்ந்தவர் என்பதால் சென்ற ஆண்டு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சம்பந்தப்பட்ட பெண் டி.என்.ஏ பரிசோதனைக்கு தயாராக இருக்கிறேன் எனக் கூற, பினோய் தலைமறைவானார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் குடைச்சல் மேல் குடைச்சலாக கொடுத்து கொடியேரியை ஒருவழி பண்ணியது.

எனினும், ``என் மகன் பினோய் தனிக் குடித்தனமாக வாழ்கிறார். நான் தினமும் அவனை கண்காணிக்கவில்லை. அப்படி கண்காணித்திருந்தால் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டிருக்காது. பாலியல் புகாருக்கு பின் என் மகனை நான் சந்திக்கவில்லை. அவன் தனியாக இந்த வழக்கை சந்தித்து வருகிறான். அதனால் கட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பினோய் வழக்கில் சமரசம் பேச யாரும் முயற்சி செய்யவில்லை. இது சம்பந்தமாக எந்த உதவியும் நான் செய்யமாட்டேன் என்று என் மனைவியிடம் தெரிவித்துவிட்டேன்" என்று ஸ்டேட்மென்ட் விட்ட பின்பு தான் இந்த விவகாரம்  ஓய்ந்தது. இதற்கிடையே, இதே பினோய் பண மோசடி வழக்கில் ஒன்றில் சிக்கியது தனிக்கதை!

இந்த விசாரணையின்போது பினீஷ்க்கு பணம் கொடுத்த விவகாரத்தை சொல்ல, அமலாக்கத்துறை பினீஷை கொத்தாக தூக்கி விசாரித்த விசாரணைக்கிடையே,  பினீஷை அதிரடியாக கைதும் செய்து சிறையில் அடைத்தது அமலாக்கத்துறை. இந்த நிலையில்தான், கொடியேரி பாலகிருஷ்ணன் தனது பதவியில் இருந்து விலகினார்.  கேரள முதல்வர் பினராயி விஜயன் 17 ஆண்டுகளாக கட்சியின் செயலாளராக இருந்த போது ஒருமுறை கூட கட்சியின் பொறுப்பு அவரது கட்சியின் சக ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. அதேபோல் கொடியேரி 2019 ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம்  அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார், ஆனால் அவர் இல்லாத நேரத்தில் வேறு யாரையும் மாநிலச் செயலாளராக நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த