முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமறைக்காடு அலையில் விதைத்த விதைகள் அலையாத்திக் காடுகள்


அலையில் விதைத்த விதைகள் அலையாத்திக் காடுகள் 













இராமாயணத்தில் இராமர் 14 ஆண்டு காலம் வன வாசத்தில் சீதை, இலக்குவனுடன் சில காலம் தண்டகாரண்யத்தில் கழித்தாரெனக் கூறுகிறது. மாரீசன் தங்க மான் வடிவில் உலாவ சீதை,  மானைப்  பிடிக்கக் கேட்டதால், இராமனும் இலக்குவனும் தங்க மானை தேடிச் செல்ல சீதை தனிமையில் இருக்க இராவணன் கவர்ந்து, இந்த ஆரண்யகத்திலிருந்து இலங்கை நுவரேலியா அசோக வனத்தில் சிறை வைத்த நிகழ்வுகள், இராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் கூறப்படுகிறது அப்படி ஒரு வேதம் நிறைந்த ஆரண்யம் தான்  வேதாரண்யம் அது புராண கால திருமறைக்காடு அப்பகுதியில் சுனாமி பாதிப்பு  மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் மாங்குரோவ் எனப்படும் மரங்கள்நிறைந்தது தான்  தான் அலையாத்திக் காடுகள் இதை கோடியக்கரை பகுதியில் ஆரம்பத்தில் அமைத்த புதுக்கோட்டை ரோசி பௌஃண்டேசன் நிறுவனத்துடன் புதுக்கோட்டை பகுதியை பசுமையான பகுதியாக மாற்றி வரும் மரம் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து கடற்கரையோரம் உள்ள படுகைகளில் அலையாத்திக்காடு உருவாக்க. விதை சேகரிப்பு ம் அது தொடர்பான தொடர்பணி கள ஆய்வும் திட்டமிடலுக்கான முதல் ஆயத்தப்பயணம் துவங்கியது.     ஒரு கோடியே 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தியக் கடற்கரைகளில் அலையாத்தி காடுகள் உருவாகி இருக்கலாம் கடல் அலைகளால் நிலம் அரிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதில் அலையாத்தி காடுகள் முக்கியப் பங்காற்றும். கடற்கரையில், ஆறுகளின் முகத்துவாரத்திலிருக்கும். இதில் வளரும் தாவரங்களுக்கு கடும் உவர்ப்புள்ள கடல் நீர் ஆகாது. கொஞ்சம் நன்னீரும், கொஞ்சம் கடல் நீரும் கலந்த கலவையையே  விரும்பும். இதனையே வாழ்வாதாரமாக கொண்ட நன்னீர் மீன்கள், இறால்கள், நண்டுகள், புலி, நரி, முதலை, பாம்பு, ஆமை, ஏராளமான பூச்சியினங்கள் உண்டு. அலையாத்தி காடுகளில் மட்டுமே வாழக்கூடிய 70 வகையான தாவரங்களும் உண்டு. அவை நிலத்தின் வேறெந்தப் பகுதிகளிலும் வாழாது.  பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்க ஏற்ற பாதுகாப்பான இடமாகவும்  திகழ்கிறது.பல கடல்வாழ் நுண்ணுயிரிகள் தோன்றும் இடமுமாகும்.


 அதிக அளவில் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்ச வல்லது. ஒரு ஹெக்டர் பரப்புள்ள அலையாத்தி காடு ஒரு நாளில் நூறு கிலோ அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுமாம். மேலும் நிலப்பரப்பிலிருந்து வெள்ளத்தில் கரைத்து எடுத்துவரப்படும் கழிவுகளில் உள்ள கடுமையான உலோகங்களை அலையாத்தி காடுகளில் உள்ள தாவரங்கள் உறிஞ்சி நீரை தூய்மையாக்குகின்றன. மேலும் கடல் சீற்றத்தை வெகுவாக கட்டுப்படுத்தும் திறனும் உண்டு. இது இருக்கும் இடத்தில் சுனாமி தாக்கும் என்கிற அச்சமில்லை.

அலையாத்தி காடுகள் முழுவதுமே சகதி வாய்ந்த சதுப்பு நிலமாகும். இது மனிதர்களுக்கும்,  பல்லுயிர்களுக்கும் நன்மைகளை மட்டுமே செய்கிறது. இந்தியாவில் ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் ஐரோலி, விக்ரோலி ஆகிய இரண்டு இடங்களில் அலையாத்தி காடுகள் உள்ளன. விக்ரோலியில்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய அலையாத்தி காடு உள்ளது. இதன் பரப்பளவு சுமார் 2000 ஹெக்டரில் 16 வகையான சதுப்பு நிலத் தாவரங்கள், 82 வண்ணத்து பூச்சி இனங்கள், 208 பறவை இனங்கள், 20 மீன் இனங்கள், 13 நண்டு இனங்கள், 7 இறால் இனங்கள், காட்டுப்பன்றி, குள்ளநரி, தேவாங்கு, நீர்நாய், சிறுத்தை ஆகியன வாழ்ந்து வருகின்றன.

விக்ரோலியில் உள்ள அலையாத்திக் காட்டை கோத்ரெஜ் நிறுவனம் பாதுகாக்கிறது. சதுப்பு நிலத்திலிருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் எந்த கட்டுமானமோ, விரிவாக்க பணியோ செய்யக்கூடாதென மும்பை நீதிமன்றமும் தடை விதித்துள்ளது. ஆனால் கோத்ரெஜ் நிறுவனம் சதுப்பு நிலங்களின் ஓரமாக 50 மீட்டர் தள்ளிதான். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு சிறிய வீட்டின் குறைந்தபட்ச விலை 2.8 கோடி.அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்கள் எனப்படுபவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும். இவ்வகைத் தாவரங்கள் செறிந்து வளரும் இடங்களில், அவை உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் இடம் அலையாத்திக் காடு (மாங்ரோவ் காடு) எனப்படும்.கடலோரப்  பகுதிகளில், மண்ணும் நீரும் சேர்ந்த சேற்றுப் பகுதியாகவும், சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். சதுப்பு நிலத்தில் அலையாத்தித் தாவரங்கள் இச் சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இவை வளரும் இடங்கள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.ஆங்கிலத்தில் இவை மாங்குரோவ் காடுகள் எனப்படுகின்றன. மலாய், எசுப்பானியம், போர்ச், சுவிசு மொழிகள் இணைந்த சிறுமரங்கள் எனப்பொருள்படும் மாங்கு என்ற சொல்லில் இருந்தே மாங்குரோவ் காடுகள் என்ற பெயர் ஏற்பட்டது.

இத் தாவரங்கள் செறிந்து வளர்ந்திருக்கும் இடத்தில் நீரானது மரங்களைச் சூழ்ந்து காணப்படுவதனால், அதாவது வெள்ளம் நிறைந்திருக்கும் இடம்போன்று தோற்றம் தருவதனால், வெள்ளக்காடு என்றொரு பெயரும் உண்டு.

முல்லையும் மருதமும் நெய்தலும் சந்திக்கின்ற திணை மயக்கமாக சதுப்புநில வனங்கள் திகழ்கின்றன. கண்டல் மரங்கள் இருக்கும் சதுப்பு நிலப்பகுதியை கண்டல் காடுகள்

இவை பொதுவாக கடலோரப் பகுதிகளில் காணப்படுவதுடன், இவை இருக்கும் இடங்களில், அலை அதிகமான கடல்நீரானது மரங்களினிடையே சென்று, அலைகள் குறையப்பெற்று, மிக மெதுவாக நகரும் ஆறுகள் போன்ற நீர்நிலையாக இருப்பதனால் இவை அலையாத்திக் காடுகள் எனவும் அழைக்கப்படும்.

கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக் காடே உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடாகும்.தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரத்திலுள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகளாகும்.கோடியக்கரையை அடுத்த முத்துப்பேட்டை கண்டல்கள் - இவை தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணையும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.

குஜராத்,, ஆந்திரா மாநிலங்களின் கடற்கரைகளிலும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளிலும் சதுப்பு நிலக்காடுகள் உண்டு 

அலையாத்தித் தாவரங்களில் கிட்டத்தட்ட 80 வேறுபட்ட இனங்கள் இருப்பதுடன், இவை ஆக்சிசன் குறைவான மண்ணில் வளரும் தன்மை கொண்டிருப்பதாகவும், நிலநடுக் கோட்டுக்கு அண்மையாக இருக்கும், வெப்ப மண்டலம் (tropics), அயன அயல் மண்டலம் (subtropics) பகுதிகளிலேயே வளரும் என்றும் அறியப்படுகின்றது. மிகவும் கடினமான, சூழலைத் தாங்கும் தன்மை கொண்ட ஒரு சில இனங்கள் மட்டுமே மிதவெப்ப மண்டலத்தில் வாழும் தன்மை கொண்டிருக்கின்றன. இவற்றில் சிறிய செடி    வகைகள் முதல், கட்டடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் மரங்களான 60 மீட்டர் உயரம்வரை வளரும் மரங்கள் வரை அடங்கும் இத் தாவரங்களின் வேர்கள் நீருக்கு மேலாக அடர்ந்து தெரிவதுடன், கடற்கரை ஓரங்களில், கடலலையினால் ஏற்படக்கூடிய மண்ணரிப்பைத் தடுக்கின்றது.  அலையாத்தித் தாவரத்தில் வித்துக்கள், தாய்மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையிலேயே முளைத்தலைக் காட்டும் படம் உண்டு.           தற்போது மேலும் நரசிங்கம் காவேரியிலிருந்து கட்டுமாவடி வரை விதைகள் போட திட்டமுடன் பணி துவங்கியது.காணொலியில் கருத்து தெரிவித்த மரம்  அறக்கட்டளை மரம் இராஜா, புதுக்கோட்டை ரோசி பவுண்டேசன் நிறுவனங்களின் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பழனிவேல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த