முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்க்கரை (சீனி) க்கான அட்டையை அரிசிக்கான அட்டையாக மாற்ற இன்று கடைசி நாள்

உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில்  சர்க்கரை (சீனி) க்கான அட்டையை அரிசிக்கான அட்டையாக இணையதளம்




  (https://tnpds.gov.in/login.xhtml) வாயிலாக   மாற்றிக் கொள்ள விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர்.21 ஆம் தேதி முதல் தொடங்கி பணிகளை டிசம்பா் இறுதிக்குள் முடிக்க உணவுப் பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது. அரிசி அட்டையாக மாற்றப்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூபாய்.2,500   வழங்கப்படும்இந்தப் பரிசு சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்வதற்கு ஏராளமானோர் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளநிலையில்  அட்டை மாற்ற இன்று டிசம்பர் 20 கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் ஏதிர்பாராத நிலையில் குடிமக்களுக்கு அரசு பொங்கல் பரிசை உயர்த்தி வழங்கியது சட்டமன்றத் தேர்தலுக்காக சுய நலத்திற்காக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பா என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளதற்கு, பதிலலித்த முதல்வர் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் புயலால் பாதித்த தமிழக மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது தவறா? ஏழைக் குடும்பத்தில் பிறந்த எனக்கு அவர்களின் கஷ்டம் புரியும். அதனால் தான் அவர்களது துயர்துடைக்க பொங்கல் பரிசை அறிவித்ததாக முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார் 2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக மொத்தம் 5,150 கோடி அரசுக்குச் செலவாகும் 

2,500 ரூபாய் பணம் நிச்சயமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்தச் சமயத்தில் பேருதவியாக இருக்கும், ஆனால் இந்த 2,500 கொடுக்காவிட்டாலும் அவர்கள் பொங்கல் கொண்டாடத் தான் போகிறார்கள், 58 வயதில் ஓய்வு பெற வேண்டிய அரசு ஊழியர்களுக்கு ரிட்டையர்ட்மெண்ட் பணம் கொடுக்க வழி இல்லாமல் ஓய்வு பெறும் வயதை 59 என ஆக்கியது தமிழ்நாடு அரசு..

5,150 கோடி இருந்தால் அத்தனை பேருக்கும் ஓய்வு கொடுத்துருக்கலாம் என்ற ஆதங்கமும்.  வளர்ச்சிப்பணிகளுக்கான சட்டமன்ற உறுப்பினர்கள் நிதி முதல் அனைத்து பணிகளுக்குமான நிதியையும் குறைத்தாகி விட்டது (ஒரு சில அதிக கமிஷன் கிடைக்கும் பணிகளைத் தவிர),

5,150 கோடி இருந்தால் வளர்ச்சிப்பணிகளுக்கான நிதியை குறைக்க வேண்டிய அவசியம் இருந்துருக்காது எனவும், அரசாங்கத்தில் ஒப்பந்தப்பணிகளை எடுத்து வேலை செய்த ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகை 6 மாதங்களுக்கு மேல் பாக்கியுள்ளதாகவும்

சில துறைகளில் ஒரு வருடங்களுக்கு மேல் பாக்கி எனவும்  இதனால் பல ஒப்பந்ததாரர்கள் பணம் இல்லாமல் மேற்கொண்டு பணிகளைத் தொடர முடியாமல் திணறுவதாகவும், ஒப்பந்ததார்ரகளில் பெரிய முதலாளிகளல்ல, சிறிய நிறுவனம்  போன்றவர்கள்  சிறிய சிறிய ஒப்பந்ததாரர்கள்.

5,150 கோடி இருந்தால் ஓரளவுக்கு அவர்களுக்கான நிலுவைத்தொகையை செட்டில் செய்து விடலாம்.என்ற கூப்பாடு ஒருபக்கம்  இவையெல்லவற்றையும் விட தமிழ்நாடு அரசு ஏற்கனவே 4,50,000  கோடி வரை கடனிலிருக்கிறது,

இந்த நிதியாண்டிலும் கூட சுமார் ரூ 50,000 கோடி வரை கடன் வாங்கியுள்ளதாக உள்ள தகவல்கள்  மத்தியில் கடன் வாங்கிக் கொடுக்கிற அளவுக்கு 2,500 ரூபாய் மக்களுக்கு முக்கியமா என்றால் நிச்சயமாக இல்லை..

பணம் கொடுக்காவிட்டாலும் மக்களால் சமாளிக்க முடியும். அப்படி கண்டிப்பாக மக்களுக்கு கொடுக்க வேண்டுமென அரசாங்கம் நினைக்க மக்களும் ஒரு காரணம், ஜனங்களின் எதிர்பார்ப்புக்கு அரசும்

குடும்பத்துக்கு 2,500 ரூபாய் கொடுத்தாலவது ஓட்டு கிடைக்கும்.என்ற. இப்படி ஒரு நிலைக்கு வந்துவிட்டது.. மக்களும் இந்த இலவசங்களை  எதிர்பார்க்கிறார்கள்..

ஆனால் எல்லா மக்களும் இதை வரவேற்கிறார்கள் என எடுத்துக்கொள்ள வேண்டாம். இதனால் அவர்கள் சராசரியாக இழக்கும் தொகை அதிகம் என்பது உணரவில்லை எனத் தெரிகிறது.

பொதுநலமாக சிந்திப்பவர்கள், நாட்டு நலன் மீது நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்கள் இந்த இலவசங்களுக்கு எதிராக குமுறிக்கொண்டு தான் இருக்கிறார்கள் காலகாலமாக, மக்களிடம்  வரிவசூல் செய்கின்றன.  எத்தனை பேர் வேறு வழியில்லாமல் குமுறிக்கொண்டு வரிகள் செலுத்துகின்றனர்.. இலவசங்களை வாரி வழங்குவதால் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இப்போது மகிழ்ச்சியாக தான் தெரியும்.. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இதற்கான பாதிப்பு அவர்களுக்கும் உண்டு. பணக்காரர்கள் மட்டும் தான் வரி செலுத்துகிறார்கள் என எண்ண வேண்டாம். நாம வாங்குற ஒவ்வொரு பொருளுக்கும் GST கட்டுரோம்..

ஆகையால் வரிகட்டாதவர்கள் என்று  எவரும் இருக்க முடியாது. இப்படி மக்களிடம் கெடுபிடி செய்து பெற்ற வரி என ஆதங்கப்பட்டால் நீங்கள் ஒரு பொதுநலவாதி..2,500 ரூபாய் வழங்கிய வள்ளலே என நீங்கள் போற்றிப்புகழ்ந்தால்.. நாட்டு வளர்ச்சி மீது அக்கறை இல்லாமல் அடுத்த தலைமுறை பற்றி கவலை கொள்ளாத சாதாரண மனிதராக தான் நீங்கள் கருதப்படுவீர்கள் என புலம்பிக்கொண்டே அந்த 2,500 ரூபாய்க்கான டோக்கனை பெற நடையைகட்டும்  இந்த நடுத்தரக் குடும்பவாதிகள் நம் நாட்டில்  அதிகம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...