முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்க்கரை (சீனி) க்கான அட்டையை அரிசிக்கான அட்டையாக மாற்ற இன்று கடைசி நாள்

உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில்  சர்க்கரை (சீனி) க்கான அட்டையை அரிசிக்கான அட்டையாக இணையதளம்




  (https://tnpds.gov.in/login.xhtml) வாயிலாக   மாற்றிக் கொள்ள விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர்.21 ஆம் தேதி முதல் தொடங்கி பணிகளை டிசம்பா் இறுதிக்குள் முடிக்க உணவுப் பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது. அரிசி அட்டையாக மாற்றப்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூபாய்.2,500   வழங்கப்படும்இந்தப் பரிசு சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்வதற்கு ஏராளமானோர் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளநிலையில்  அட்டை மாற்ற இன்று டிசம்பர் 20 கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் ஏதிர்பாராத நிலையில் குடிமக்களுக்கு அரசு பொங்கல் பரிசை உயர்த்தி வழங்கியது சட்டமன்றத் தேர்தலுக்காக சுய நலத்திற்காக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பா என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளதற்கு, பதிலலித்த முதல்வர் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் புயலால் பாதித்த தமிழக மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது தவறா? ஏழைக் குடும்பத்தில் பிறந்த எனக்கு அவர்களின் கஷ்டம் புரியும். அதனால் தான் அவர்களது துயர்துடைக்க பொங்கல் பரிசை அறிவித்ததாக முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார் 2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக மொத்தம் 5,150 கோடி அரசுக்குச் செலவாகும் 

2,500 ரூபாய் பணம் நிச்சயமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்தச் சமயத்தில் பேருதவியாக இருக்கும், ஆனால் இந்த 2,500 கொடுக்காவிட்டாலும் அவர்கள் பொங்கல் கொண்டாடத் தான் போகிறார்கள், 58 வயதில் ஓய்வு பெற வேண்டிய அரசு ஊழியர்களுக்கு ரிட்டையர்ட்மெண்ட் பணம் கொடுக்க வழி இல்லாமல் ஓய்வு பெறும் வயதை 59 என ஆக்கியது தமிழ்நாடு அரசு..

5,150 கோடி இருந்தால் அத்தனை பேருக்கும் ஓய்வு கொடுத்துருக்கலாம் என்ற ஆதங்கமும்.  வளர்ச்சிப்பணிகளுக்கான சட்டமன்ற உறுப்பினர்கள் நிதி முதல் அனைத்து பணிகளுக்குமான நிதியையும் குறைத்தாகி விட்டது (ஒரு சில அதிக கமிஷன் கிடைக்கும் பணிகளைத் தவிர),

5,150 கோடி இருந்தால் வளர்ச்சிப்பணிகளுக்கான நிதியை குறைக்க வேண்டிய அவசியம் இருந்துருக்காது எனவும், அரசாங்கத்தில் ஒப்பந்தப்பணிகளை எடுத்து வேலை செய்த ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகை 6 மாதங்களுக்கு மேல் பாக்கியுள்ளதாகவும்

சில துறைகளில் ஒரு வருடங்களுக்கு மேல் பாக்கி எனவும்  இதனால் பல ஒப்பந்ததாரர்கள் பணம் இல்லாமல் மேற்கொண்டு பணிகளைத் தொடர முடியாமல் திணறுவதாகவும், ஒப்பந்ததார்ரகளில் பெரிய முதலாளிகளல்ல, சிறிய நிறுவனம்  போன்றவர்கள்  சிறிய சிறிய ஒப்பந்ததாரர்கள்.

5,150 கோடி இருந்தால் ஓரளவுக்கு அவர்களுக்கான நிலுவைத்தொகையை செட்டில் செய்து விடலாம்.என்ற கூப்பாடு ஒருபக்கம்  இவையெல்லவற்றையும் விட தமிழ்நாடு அரசு ஏற்கனவே 4,50,000  கோடி வரை கடனிலிருக்கிறது,

இந்த நிதியாண்டிலும் கூட சுமார் ரூ 50,000 கோடி வரை கடன் வாங்கியுள்ளதாக உள்ள தகவல்கள்  மத்தியில் கடன் வாங்கிக் கொடுக்கிற அளவுக்கு 2,500 ரூபாய் மக்களுக்கு முக்கியமா என்றால் நிச்சயமாக இல்லை..

பணம் கொடுக்காவிட்டாலும் மக்களால் சமாளிக்க முடியும். அப்படி கண்டிப்பாக மக்களுக்கு கொடுக்க வேண்டுமென அரசாங்கம் நினைக்க மக்களும் ஒரு காரணம், ஜனங்களின் எதிர்பார்ப்புக்கு அரசும்

குடும்பத்துக்கு 2,500 ரூபாய் கொடுத்தாலவது ஓட்டு கிடைக்கும்.என்ற. இப்படி ஒரு நிலைக்கு வந்துவிட்டது.. மக்களும் இந்த இலவசங்களை  எதிர்பார்க்கிறார்கள்..

ஆனால் எல்லா மக்களும் இதை வரவேற்கிறார்கள் என எடுத்துக்கொள்ள வேண்டாம். இதனால் அவர்கள் சராசரியாக இழக்கும் தொகை அதிகம் என்பது உணரவில்லை எனத் தெரிகிறது.

பொதுநலமாக சிந்திப்பவர்கள், நாட்டு நலன் மீது நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்கள் இந்த இலவசங்களுக்கு எதிராக குமுறிக்கொண்டு தான் இருக்கிறார்கள் காலகாலமாக, மக்களிடம்  வரிவசூல் செய்கின்றன.  எத்தனை பேர் வேறு வழியில்லாமல் குமுறிக்கொண்டு வரிகள் செலுத்துகின்றனர்.. இலவசங்களை வாரி வழங்குவதால் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இப்போது மகிழ்ச்சியாக தான் தெரியும்.. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இதற்கான பாதிப்பு அவர்களுக்கும் உண்டு. பணக்காரர்கள் மட்டும் தான் வரி செலுத்துகிறார்கள் என எண்ண வேண்டாம். நாம வாங்குற ஒவ்வொரு பொருளுக்கும் GST கட்டுரோம்..

ஆகையால் வரிகட்டாதவர்கள் என்று  எவரும் இருக்க முடியாது. இப்படி மக்களிடம் கெடுபிடி செய்து பெற்ற வரி என ஆதங்கப்பட்டால் நீங்கள் ஒரு பொதுநலவாதி..2,500 ரூபாய் வழங்கிய வள்ளலே என நீங்கள் போற்றிப்புகழ்ந்தால்.. நாட்டு வளர்ச்சி மீது அக்கறை இல்லாமல் அடுத்த தலைமுறை பற்றி கவலை கொள்ளாத சாதாரண மனிதராக தான் நீங்கள் கருதப்படுவீர்கள் என புலம்பிக்கொண்டே அந்த 2,500 ரூபாய்க்கான டோக்கனை பெற நடையைகட்டும்  இந்த நடுத்தரக் குடும்பவாதிகள் நம் நாட்டில்  அதிகம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த