முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான   பூட்டா சிங் காலமானதாக


அவருடைய மகன் பதிவு செய்துள்ளார். பூட்டா சிங் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார்.  வயது 86. அரசியல்  பொதுவாழ்க்கையில் 8 முறை எம்.பியாகவும் , 4 பிரதமர்களின் ஆட்சியில் அமைச்சராகவும், பல முக்கியப் பொறுப்பிலும் இருந்தவராவார், முதுமை  காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட பூட்டா சிங், 2021 அக்டோபர் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் கோமாவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில்  இன்று காலை 7.10 மணிக்கு காலமானார். இன்று மாலை டெல்லி லோதி சாலையில் உள்ள இடுகாட்டில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

பூட்டா சிங் மறைவு குறித்து குடியரசுத் தலைவரின் ட்விட்டரில் பதிவு இரங்கல் செய்தி,: சிறந்த நிர்வாகத்திறன் கொண்ட, நீண்டகாலம் எம்.பி.யாக இருந்த பூட்டா சிங்கை தேசம் இழந்துவிட்டது.ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களுக்காக குரல்கொடுத்தவர் பூட்டா சிங். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன்” எனவும்

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவு இரங்கல் செய்தி “பூட்டா சிங் மிகச்சிறந்த அனுபவம் கொண்ட நிர்வாகி, ஏழை மக்கள், விளிம்புநிலை மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமாகக் குரல் கொடுத்தவர். அவரின் மறைவு வேதனையளிக்கிறது. அவரின் குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள்” எனவும்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவில்                 “ விசுவாசமான தலைவரையும், மக்களுக்கு உண்மையாக சேவையாற்றியவருமான பூட்டா சிங்கை இந்த தேசம் இழந்துவிட்டது. தனது வாழ்க்கையையே இந்த தேசத்துக்காகவும், மக்களின் நலனுக்காகவும் அர்ப்பணித்தவர் பூட்டா சிங். அவரை என்றென்றும் நினைவு கூர்வோம். இந்தத் துயரமான நேரத்தில் அவரின் குடும்பத்தாருக்கு எனது வருத்தங்களைத் தெரிவிக்கிறேன்”எனவும் மேலும்

மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பூட்டாசிங்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் 1934 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  21 ஆம்தேதி பிறந்து 1962 ஆம் ஆண்டில் முதலில் ராஜஸ்தானின் ஜலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்டார். சிரோன்மணி அகாலிதளம் கட்சியிலிருந்த  பின் காங்கிரஸ் கட்சிக்கு 1960 ஆம் ஆண்டில் மாறி ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுத்த மிகப்பெரிய தலைவர்  காங்கிரஸ் கட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவை 1973-74களில் உருவாக்கிய பூட்டாசிங் 1978 ஆம் ஆண்டில்  பொதுச்செயலாளர்

கடந்த 1974 ஆம் ஆண்டில் இரயில்வே இணையமைச்சராக  நியமிக்கப்பட்டபின் 1976 ஆம் ஆண்டில் வர்த்தக இணையமைச்சர் பின்பு 1980 ஆம் ஆண்டில் கப்பல் மற்றும் போக்குவரத்து துறை இணையமைச்சர் 1982 ஆம் ஆண்டில் விளையாட்டுத்துறை அமைச்சர்.

முன்னால் பிரதமர் இந்திரா காந்திக்கு நெருக்கமானவராக 1983 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக உயர்ந்தார். பின் 1984 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி அமைச்சர் என உயர்ந்தார். ராஜீவ் காந்தி பிரதமரான காலத்தில்  உள்துறை அமைச்சராகவும்.

பி.வி.நரசிம்ம ராவ் பிரதமரான போது, நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராகவும் 1995 முதல் 1996 வரை  இருந்தார். மன்மோகன் சிங் ஆட்சியில் 2007 ஆம் ஆண்டில் தேசிய பட்டியலினத்தவர்களின் ஆணையத் தலைவராகவும், 2010 ஆம்  ஆண்டு வரை இருந்தார்.

1984 ஆம் ஆண்டு அமிர்தரஸ் பொற்கோயிலில் ப்ளூஸ்டார் ஆப்ரேஷனுக்குப்பின் கோயிலை சீரமைக்கும் குழுவுக்கும், பல்வேறு குருதுவாராக்களை சீரமைக்கும் குழுவுக்கும் தலைவராக  இருந்தார். டெல்லி சீக்கிய கலவரத்துக்குப்பின் பல குருதுவாராக்களை சீரமைத்ததில்  முக்கியப் பங்கு வகித்தவர்.

காங்கிரஸ் கட்சி 1978-ம் ஆண்டு இரண்டு பிரிவாக உடைந்தபின், காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னத்தைத் தேர்வு செய்த குழுவில் பூட்டா சிங் பங்கு  முக்கியமானவர். 1998-ல் தகவல்தொடர்பு துறை அமைச்சராக பூட்டா சிங் இருந்தபோது ஜேஎம்எம் ஊழல் வழக்கு காரணமாக  பதவியை ராஜினாமா செய்தார். 2005 ஆம் ஆண்டில் பிஹார் ஆளுநராக பூட்டா சிங் நியமிக்கப்பட்டபின், ஆட்சியைக் கலைக்க பரி்ந்துரை செய்ததால் உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சிக்கவே பின் பதவியை  இராஜினாமா செய்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த