முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பூட்டா சிங் காலமானதாக
அவருடைய மகன் பதிவு செய்துள்ளார். பூட்டா சிங் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். வயது 86. அரசியல் பொதுவாழ்க்கையில் 8 முறை எம்.பியாகவும் , 4 பிரதமர்களின் ஆட்சியில் அமைச்சராகவும், பல முக்கியப் பொறுப்பிலும் இருந்தவராவார், முதுமை காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட பூட்டா சிங், 2021 அக்டோபர் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் கோமாவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை 7.10 மணிக்கு காலமானார். இன்று மாலை டெல்லி லோதி சாலையில் உள்ள இடுகாட்டில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பூட்டா சிங் மறைவு குறித்து குடியரசுத் தலைவரின் ட்விட்டரில் பதிவு இரங்கல் செய்தி,: சிறந்த நிர்வாகத்திறன் கொண்ட, நீண்டகாலம் எம்.பி.யாக இருந்த பூட்டா சிங்கை தேசம் இழந்துவிட்டது.ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களுக்காக குரல்கொடுத்தவர் பூட்டா சிங். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன்” எனவும்
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவு இரங்கல் செய்தி “பூட்டா சிங் மிகச்சிறந்த அனுபவம் கொண்ட நிர்வாகி, ஏழை மக்கள், விளிம்புநிலை மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமாகக் குரல் கொடுத்தவர். அவரின் மறைவு வேதனையளிக்கிறது. அவரின் குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள்” எனவும்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவில் “ விசுவாசமான தலைவரையும், மக்களுக்கு உண்மையாக சேவையாற்றியவருமான பூட்டா சிங்கை இந்த தேசம் இழந்துவிட்டது. தனது வாழ்க்கையையே இந்த தேசத்துக்காகவும், மக்களின் நலனுக்காகவும் அர்ப்பணித்தவர் பூட்டா சிங். அவரை என்றென்றும் நினைவு கூர்வோம். இந்தத் துயரமான நேரத்தில் அவரின் குடும்பத்தாருக்கு எனது வருத்தங்களைத் தெரிவிக்கிறேன்”எனவும் மேலும்
மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பூட்டாசிங்
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் 1934 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம்தேதி பிறந்து 1962 ஆம் ஆண்டில் முதலில் ராஜஸ்தானின் ஜலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். சிரோன்மணி அகாலிதளம் கட்சியிலிருந்த பின் காங்கிரஸ் கட்சிக்கு 1960 ஆம் ஆண்டில் மாறி ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுத்த மிகப்பெரிய தலைவர் காங்கிரஸ் கட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவை 1973-74களில் உருவாக்கிய பூட்டாசிங் 1978 ஆம் ஆண்டில் பொதுச்செயலாளர்
கடந்த 1974 ஆம் ஆண்டில் இரயில்வே இணையமைச்சராக நியமிக்கப்பட்டபின் 1976 ஆம் ஆண்டில் வர்த்தக இணையமைச்சர் பின்பு 1980 ஆம் ஆண்டில் கப்பல் மற்றும் போக்குவரத்து துறை இணையமைச்சர் 1982 ஆம் ஆண்டில் விளையாட்டுத்துறை அமைச்சர்.
முன்னால் பிரதமர் இந்திரா காந்திக்கு நெருக்கமானவராக 1983 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக உயர்ந்தார். பின் 1984 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி அமைச்சர் என உயர்ந்தார். ராஜீவ் காந்தி பிரதமரான காலத்தில் உள்துறை அமைச்சராகவும்.
பி.வி.நரசிம்ம ராவ் பிரதமரான போது, நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராகவும் 1995 முதல் 1996 வரை இருந்தார். மன்மோகன் சிங் ஆட்சியில் 2007 ஆம் ஆண்டில் தேசிய பட்டியலினத்தவர்களின் ஆணையத் தலைவராகவும், 2010 ஆம் ஆண்டு வரை இருந்தார்.
1984 ஆம் ஆண்டு அமிர்தரஸ் பொற்கோயிலில் ப்ளூஸ்டார் ஆப்ரேஷனுக்குப்பின் கோயிலை சீரமைக்கும் குழுவுக்கும், பல்வேறு குருதுவாராக்களை சீரமைக்கும் குழுவுக்கும் தலைவராக இருந்தார். டெல்லி சீக்கிய கலவரத்துக்குப்பின் பல குருதுவாராக்களை சீரமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.
காங்கிரஸ் கட்சி 1978-ம் ஆண்டு இரண்டு பிரிவாக உடைந்தபின், காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னத்தைத் தேர்வு செய்த குழுவில் பூட்டா சிங் பங்கு முக்கியமானவர். 1998-ல் தகவல்தொடர்பு துறை அமைச்சராக பூட்டா சிங் இருந்தபோது ஜேஎம்எம் ஊழல் வழக்கு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். 2005 ஆம் ஆண்டில் பிஹார் ஆளுநராக பூட்டா சிங் நியமிக்கப்பட்டபின், ஆட்சியைக் கலைக்க பரி்ந்துரை செய்ததால் உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சிக்கவே பின் பதவியை இராஜினாமா செய்தார்.
கருத்துகள்