பிரதமர் அலுவலகம் இமாச்சலப் பிரதேச மாநிலம் உருவான நாள் : முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
இன்று இமாச்சலப் பிரதேச மாநிலம் உருவான 50வது நாளை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில், ‘‘இமாச்சலப் பிரதேச மாநிலம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு, அம்மாநில மக்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள். இயற்கை அழகுக்கும், அழகான சுற்றுலாத் தலங்களுக்கும் பெயர் போன இந்த மாநிலம், புதிய தரத்தில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, நாட்டின் முன்னேற்றத்துக்கு தனது பங்களிப்பை அளிக்கிறது " எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்