முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொதுத்தேர்தலில் ஆட்சி மலர ஜாதி அரசியல் கைகொடுக்குமா

பொதுத்தேர்தல்களில் சாதி பெரிய அளவில் எடுபடாது என்பதே பலரது 






கருத்து. தி.மு.க வேண்டாம், அ.தி.மு.க வேண்டாம் என மக்கள் முடிவெடுத்து அதற்கேற்பதான் வாக்களிப்பார்கள். சாதி, மதம் போன்ற விஷயங்கள் பின்னுக்குப் போய்விடும். உதாரணமாக, 1991 முதல் 1996 வரை ஜெ. ஜெயலலிதா முதல்வராக இருந்த  ஆட்சியின் மீது கடும் ஊழல் புகார்கள் அது மக்களிடம் மிகப்பெரிய அளவில் ஆட்சியின் மீதான அதிருப்தியை உண்டாக்கியதால் அதை மடை மாற்றி  ஒவ்வொரு சாதியினரையும் தனித்தனியாக மகிழ்விக்கும் வகையில் ஜெ. ஜெயலலிதா பல முன்னெடுப்புகளைச் செய்ததில் ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களின் பெயரில் மாவட்டம், போக்குரத்துக் கழகங்கள், அவர்களுக்குப் பொது இடங்களில் சிலைகள் என ஆனால், என்னவானது. தேர்தல் முடிவுகளில் அது  தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.           தி.மு.க வும் த.மா.கா உடன் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது போலவே, 2001 தேர்தலில், அ.தி.மு.க வும்  காங்கிரஸ், பா.ம.க.,  கம்யூனிஸ்ட்கள் என  வலிமையான கூட்டணி அமைந்து.திமுகவுக்கு வலிமையுள்ள கூட்டணி இல்லாமல்  ஏ.சி.சண்முகத்தின் முதலியார் நெசவாளர் ஜாதிகள் கொண்ட புதிய நீதிக்கட்சி, கண்ணப்பனின் யாதவர் ஜாதி கொண்ட மக்கள் தமிழ்த்தேசம், கு.ப.கிருஷ்ணனின் முத்தரையர் ஜாதி கொண்ட தமிழர் கட்சி  இணைத்துப் போட்டியிட்டு  முடிவுகள் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாகவே வந்தன. அதனால், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் வேண்டுமானால் ஜாதியம் சார்ந்த முன்னெடுப்புகள் எடுபடும்  பொதுத்தேர்தல்களில், குறிப்பிட்ட தொகுதிப் பகுதிகளில் வேண்டுமானால் சேதம்  ஏற்படுத்தும் அதேபோல,தேர்தல் நெருக்கத்தில் ஏதாவது சென்சிட்டிவான சம்பவம் நடந்தால் பாதிப்பு ஏற்படுத்தும். மற்றபடி தாக்கம்  ஏற்படுத்தாது என்பதே கடந்தகால வரலாறு.மேலும் இதுவரை புதிய தமிழகம் கட்சியோ கிருஷ்ணசாமி தவிர வேறு அறிமுகம்  இல்லாத தனி நபர் அரசியல்  நிலை  அல்லது ஜான்பாண்டியன் போன்ற தனிநபர் அரசியல் நிலை   தான் அங்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாததால் அவர்கள் வாரிசுகள் மட்டுமே இருவரும் முன் நிறுத்தி வருவதை நாம் கவனிக்க வேண்டும்.மேலும் இருவரின் கட்சியும் பொதுத் தொகுதிக்கு வரப்போவதில்லை தனித்தொகுதியில் தானே போட்டி அதில் அவர்கள் சார்ந்த ஜாதியை தானே எந்தக்கட்சியும் எதிர்த்து  நிற்கவைக்கும்.இதில் பலன் உண்டா இல்லையா என்பது தேர்தல் முடிவில் தானே தெரியும்.தேவேந்திரகுல வேளாளர் திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நிலையில்

இட ஒதுக்கீட்டால் தங்களுக்கு பெரியளவில் லாபம் இல்லை என்றும், அரசியல் அதிகாரத்தையும் பெற முடியவில்லை என்றும் புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகள் கூறிவந்ததில் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போது முதல்வராக இருந்த மு. கருணாநிதி அவர்கள்  கோரிக்கையை பரிசீலிக்க நீதிபதி ஜனார்த்தனன் குழுவை அமைத்த சில மாதங்களில் ஆட்சி முடிவுக்கு வந்ததால் அது சாத்தியமாகவில்லை.

2015ஆம் ஆண்டே இச்சமூகத்தைச் சேர்ந்த நூறு பேர் பிரதமரைச்  சந்தித்து  வலியுறுத்திய கோரிக்கைக்கு அப்போது  கொங்கு வேளாளக் கவுண்டர்கள், பாண்டிய வேளாளர்கள், சோழிய வேளாளர்கள், கார் காத்த வேளாளர்கள், தொண்டை மண்டல வேளாளர்கள், நெல்லை சைவ வேளாளர்களின் சமூகங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. வேளாளர் என்ற பெயரை தேவேந்திர குல வேளாளர்களுக்குத் தரக்கூடாதென எதிர்ப்புத்  தெரிவித்தனர். இந்த சமூகங்களின் எதிர்ப்பைப் பெற வேண்டுமே என இவ்வளவு காலம் இந்தக் கோரிக்கை செயல் வடிவம் பெறாமுடியாமல் இருந்தத நிலையில் தற்போது முத்தரையர் சமூகத்தின் பல தலைவர்களில் ஒருவரான பெரம்பலூர் கே.கே.செல்வக்குமார் வண்ணியர்களில் ஆன்மீக பணியில் அதிகமான வார வழிபாட்டு மன்றம் வைத்துள்ள  உள்ள பங்காரு அடிகளார்,ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலர் இப்போது பாஜாகவை வைத்து தங்களுடைய அரசியல் பலனை அடைந்து கொண்டதே மிச்சம் அவர்கள் வாக்கு வங்கியாக மாற வாய்ப்பு இல்லைஅரசாணைக்கு பிற சமூகத்திடமிருந்துதான் எதிர்ப்பு வருகிறது.

ஆனால் 

பட்டியல் வெளியேற்றத்திற்கு, அவர்கள் 

உள் சமூகத்திலேயே எதிர்ப்பு 

உதாரணமாக, கிறிஸ்துதாஸ் காந்தி  முருகவேல்  ராஜன், ஸ்ரீதர் 

ஜான் பாண்டியன், மதுரை தங்கராஜ் இக் கோரிக்கை தீவிரமாக முன்னெடுக்கவில்லை அம்

மக்கள் மத்தியில்

தேவேந்திரகுல வேளாளர் என்று சாதிச் சான்றிதழ் கொடுத்தால் அமைதியாக, ஏன் சந்தோசமாக வாங்கிக்கொள்வார்கள் 

ஆனால், எஸ்ஸி இல்லை என்று சொல்வது, மேடையில் சொல்வதைப்போல் அவர்கள் அவ்வளவு  எளிதான சலுகைகள் இழக்கத் தயாரில்லை என்ற நிலை பலருக்கு உண்டு காரணம் அரசியல் வாதியாக இருக்கும் இந்த நபர்கள் இலக்கு தனித்தொகுதி பொதுத்தொகுதி வேண்டும் என்பதல்ல அதுவும் அந்தத் தலைவர்களின் சுயநலம் அடங்கியதாகும்

ஒரு பெயர் மாற்றத்திற்கே, பல வருடம் பல கமிட்டிகள்(ஜனார்த்தனன் கமிட்டி, வர்மா கமிட்டி, பேராசிரியர் சுமதி கள ஆய்வுக்குழு) போட்டு இறுதியில்  நாடாளுமன்ற மசோதா தாக்கல் என்ற நிலைக்கு வருகிறது.

ஆனால்,

பட்டியல் வெளியேற்றத்தை அவ்வளவு எளிதாக அடைந்துவிட முடியாது

ஒட்டுமொத்த சமூகமும் ஒரு முகமாக எழுந்து நிற்க வேண்டும்.தமிழக முதல்வர் 

எடப்பாடி கே.பழனிச்சாமி  வேற லெவல் அரசியலில் இறங்கிட்டார். முக்குலத்தோர் சமுதாய மக்களை ஒதுக்கி,  சின்ன அரசியல் கட்சிகளை ராஜா செய்து ஒட்டு வாங்கப் ‌போகிறார்

பொல்லானுக்கும் இப்போது சிலை நாம் இருவரை கேள்விப்பட்டதில்லை இப்படி ஒருபெயர். நல்ல முயற்சி தான்.

இவ்வளவு நாளா எங்கே யிருந்தார் ஏந்த அரசியல் தலைவருக்கும் அகப்படாமல்  என்ற வினா பலருக்கு உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...