பாமகவிலிருந்து விலகிய காடுவெட்டி குருவின் மனைவி
தனது மகன் கைது செய்யப்பட்டதற்கு பாமகவின் தூண்டுதலே காரணம் எனக் குற்றச்சாட்டு
அரியலூர் மாவட்டம் படாநிலை அஞ்சல் காடுவெட்டியில் மறைந்த வன்னியர் சங்கத்தின் தலைவர் முன்னால் சட்டப்பேரவை உறுப்பினர் காடுவெட்டி குருவின் மனைவி சுவர்ணலதா செய்தியாளர்களைச் சந்தித்த போது தனது கணவர் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளின் போது காவல்துறை அவரது நினைவிடத்திற்கு வருவதற்கு அனுமதிக்காமல் 144 தடை உத்தரவு போடுவது ஏன் என்றும்
ஜெயலலிதா கருணாநிதியின் நினைவிடத்திற்கு 144 தடை உத்தரவு போடாத நிலையில் என் கணவரின் நினைவிடத்திற்கு வருவதற்கு மட்டும் தடை உத்தரவு போடுவது கண்டிக்கத்தக்கதெனவும்
எனது மகன் கைது செய்யப்பட்டதற்கு பாமகவின் தூண்டுதலே காரணம் உடனே விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் அவரிடத்தில் நான் இருந்து மாவீரன் மஞ்சள் படை இயக்கத்தின் கொடிகளை கிராமங்கள்தோறும் ஏற்றுவேன் என கூறியதுடன் பாமக விற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் கடந்த ஒரு வருடமாக இல்லை எனவும் தெரிவித்தார்.
கருத்துகள்