முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளர் என்பது நீக்கப்படாது சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் விளக்கம்

சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் இனத்தை நீக்குவது குறித்த செய்தி: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் விளக்கம்

பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் இனத்தை நீக்குவது தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முழுவதும் தவறானவை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான செய்திகள் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஏழு பட்டியல் பிரிவு இனங்களை தேவேந்திரகுல வேளாளர்களாக வகைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், தமிழ்நாட்டின் பட்டியல் இனங்களில் ஒன்றாக இது இருக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.எனவே, பட்டியல் பிரிவில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாற்றப்படுவார்கள் என்பது முழுவதும் தவறானது என்றும், உண்மை நிலையை அது பிரதிபலிக்கவில்லை என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் பட்டியல் பிரிவில் தேவேந்திரகுல வேளாளர்களாக  வகைப்படுத்தப்பட்டிருக்கும்  7 பிரிவுகளை சேர்ப்பதற்கான மசோதா மக்களவையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று பிரதமர் அறிவித்த நிலையில் இன்று இந்த விளக்கம் வெளிவந்துள்ளது.    கள்ளர் மறவர் அகமுடையா் இணைந்து  தேவர் இனம்’ என 1994 ஆம் ஆண்டு ஹரிபாஸ்கர் தலைமைச் செயலாளராக இருந்தபோது அப்போதய  முதல்வர் காலம்சென்ற ஜெ. ஜெயலலிதா தேவர் வாங்குவங்கியை தக்கவைக்க தந்திரமாக அவரது  ஆட்சியின் போது தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது ஆனால் அதை பிற்பட்ட சமூகம் மிகவும் பிற்பட்ட சமூகம் சீர்மறபினர் என மூன்று வகையானது எண்பதால் அது சட்டமாகாமல் போனது. அது யாரால் சட்டமாகாமல் போனதோ அவர்கள் அதை அப்போது அமல்படுத்த அசுரபலம் இருந்த காலத்தில் அமல் படுத்தி இருந்தால் இன்று அவர்களுக்கு வந்த அரசியல் பின்னடைவு தவிர்க்கப்பட்டிருக்கும் ,அவர்கள் செய்த ஆடம்பரமும் ஊழலும் முன்னின்றது அவர்கள் சார்ந்த அரசியலால் சமூகம் பின் சென்றது. இப்போது அவர்களை ஆட்டிப் படைக்கும் நிலைக்கும் அதுவே காரணம் . இன்னும் அதை கணக்கெடுப்பு அதிகாரிகள் நடைமுறைபடுத்தாத காரணமும் அதுதான் 

கணக்கெடுப்பு ஊழியர்கள் பலரும் தேவர் இனத்தில் உள்ள உட்பிரிவுகளை மட்டும் பதிவு செய்வதால் எதிர்கால சந்ததிகளின் கல்வி, வேலை வாய்ப்பு, போன்ற சலுகைகளில் அது பாதிப்பை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில் வாழும் முக்குலத்தோர் சார்ந்த  இன மக்கள் மறவர்  கள்ளர்,  அகமுடையார் ஆகிய பிரிவு தேவர் சமுதாயம் என்று பதிவு செய்திருக்கிறார்களா இல்லை. என்பதே உண்மை.

சென்னை போன்ற புறநகர்களில் கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடுகளுக்கு மே முதல் தேதி முதல் சென்று பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். கோடை மாதம் பள்ளி விடுமுறைக்காக பலரும் தங்கள் சொந்த ஊருக்கு விடுமுறையில் சுற்றுலா செல்வர் பல வீடுகளில் ஆள் இல்லாமல் இருப்பார்கள். அவர்களும் இதில் முழுமையாக சேர மாற்று ஏற்பாடு திட்டத்தை வகுத்து, பட்டியலில் தேவர் சமுதாயத்தை சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ள் நிலை .   வாய்ப்புகள் இருந்த காலத்தில் கைநழுவியது யாரால் என்பது சிந்திக்க வேண்டும் தற்போது  தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்ற பள்ளர் எனும்  இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற அச் சமூகத்தினர் பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17) குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35) பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49) பண்ணாடி பட்டியல் சாதிகள் (எண் 54)  மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72) காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35) காலாடி, சீர்மரபினர் (எண் 28) போக மாற்றுப் பெயராக கல்வெட்டுகளில் மள்ளர்,  நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்களும் உள்ளன. இந் நிலையில் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 2020 டிசம்பரில் தெரிவித்த நிலையில், தமிழக அரசின்  பரிந்துரையை ஏற்று, 7 பட்டியலின உட்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பொதுப் பெயரிட வழி செய்யும் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இருப்பினும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்படும் இந்த திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த மசோதா, பட்ஜெட் கூட்டத் தொடரின் அடுத்த அமர்வில் விவாதத்திற்கு வருமென எதிபார்க்கப்படுகிறது அத்துடன், மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின் சட்டம் அரசிதழ் வந்து அமல்படுத்தப்படும் என்பது நிலை அதுபோல தற்போது பிற்பட்ட வகுப்பில் உள்ள  அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் கொண்டுள்ளனர்.  ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்களுக்குத் தேவர் பட்டமே கொண்டுள்ளனர். தஞ்சாவூர் காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” கோவில் வன்னி அல்லது வென்னிப்பறநதலை பூர்வீகம் கொண்ட  குலப்பிரிவைச் சார்ந்துள்ளனர் மற்றும், ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” போன்றவையும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்கள் கொண்டுள்ளனர்.

அகமுடைய முதலியார் என்பது போர்ப்படை தளபதிகளைக் குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமை தாங்குகின்ற முதன்மையான தளபதி எனப் பொருள்  தமிழகத்தில் வடக்கே வாழும் அகமுடையார்கள் அனைவருக்கும் பட்டம் என்பது உடையார், பிள்ளை என இருந்த போதிலும், அவர்கள் தங்களை அகமுடையார்களாகவே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அகமுடையத் தேவர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில்தேவர் என்ற பட்டப் பெயரை கொண்டு  காணப்படுகின்றனர்.

இராமநாதபுரம், சிவகங்கை,    மதுரை, தேனி, திண்டுக்கல்,  புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில்சேர்வை மற்றும் பிள்ளை என்ற பட்டப் பெயரை கொண்டு அகமுடையார் குலத்தினர் காணப்படுகின்றனர்.

அகமுடைய முதலியார், துளுவவேளாளர், உடையார் மற்றும் பிள்ளை

காஞ்சிபுரம்,   வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சென்னை, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முதலியார், துளுவ வேளாளர், உடையார் என்ற பட்ட பெயர்களைக் கொண்டு அகமுடையார் குலத்தினர் காணப்படுகின்றனர்.












Madras (India : State); B. S. Baliga (1967). Madras District Gazetteers: Salem. by Ramaswami, A. Printed by the Superintendent, Govt. Press. பக்கம். 124.ன்படி
இது நிரூபணம் ஆகிறது.  அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சியைத் துவக்கிய போது காலஞ்சென்ற  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தேவர் சமுதாயத்தினர் மீது, தனி அக்கறை உண்டு. 1985 ஆம் ஆண்டு, சிவகங்கை மாவட்டத்திற்கு, பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் மாவட்டமாக பெயரையே சூட்டினார். அவ்வளவு ஈடுபாட்டுடன், அச்சமுதாய முன்னேற்றத்திற்குத் துணை நின்றார். அதன்பின் காலம்சென்ற முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் கையில் கட்சி வந்ததும், தேவர் ஜெயந்தி விழா மட்டுமே  வெகு விமரிசையாக, ஆண்டுதோறும், அக்டோபர் 30ம் தேதி, கொண்டாடப்பட்டது .தேவர் சமுதாயத்தினர் மீது, எம்.ஜி.ஆர்., அக்கறை காட்டியதால், அச்சமுதாயத்தின் நலனுக்காக, 

இடைப்பட்ட ஆண்டுகளில்,ஜெ. ஜெயலலிதாவுடன் இருந்த உடன்பிறவா சகோதரி வி.கே.சசிகலாநடராஜன் , அச்சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில், அவர்களுக்கு என்ன செய்தார் என்பது குறித்து த் தான்

அனைத்து தரப்பினரும் தற்போது  கேள்வி எழுப்புகின்றனர். நம்முடைய வினாவும் அதுவே.

அச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சோர்ந்து விட்டனரா என்றால், இல்லை என்ற பதிலே கிடைத்தது.

"சசிகலா நடராஜனால்  அ.தி.மு.க.,வில் இருந்த போதும் அச் சமூகத்திற்கு தொலைநோக்குத் திட்டம் இல்லாத நிலை  எங்களுக்கு லாபமில்லை;  அவர்கள் வெளியேற்றப்பட்ட காலத்தில் மக்கள் அவர்கள் மீது கருணை காட்டவில்லை. அவர்களால் சமூகத்தில் லாபமும் இல்லை  நஷ்டமுமில்லைஇருந்த போதும் திண்டுக்கல் இடைத்தேர்தல் மாயத்தேவர் வெற்றி பெற்றது முதல்  அ.தி.மு.க.,வுக்கு அவர்களது ஆதரவு தொடரும்' என, தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பாலான இயக்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.


அகில இந்திய தேவர் பேரவை மாநில துணைத் தலைவர் அடைக்கப்பன்

முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுடன், சசிகலா நடராஜன்  இருந்தபோது, எங்கள் சமூகத்தினருக்கு, எந்த பயனும் ஏற்பட்டு விடவில்லை. சசிகலா, அவரது குடும்பத்தினர் நலனுக்காக மட்டுமே செயல்பட்டார் என்று தான், கூற வேண்டும். 1995 நவம்பர், 14 ஆம் தேதி, சென்னை நந்தனத்தில், முத்துராமலிங்க தேவர் சிலை திறக்கப்பட்டது. அப்போதும் முதல்வராக இருந்த ஜெ ஜெயலலிதா, "கள்ளர், மறவர், அகமுடையார் என்றிருப்பது அகற்றப்பட்டு, தேவர் என்ற ஒரே அமைப்பாக கொண்டு வரப்படும்' எனக் கூறினார்.

அதற்கு, தஞ்சாவூர், மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்போது செயல்படுத்த முடியாமல் போய்விட்டது.

நெல்லை மாவட்டத்தில், எம்.பி.சி., மதுரை மாவட்டத்தில், பி.சி., தஞ்சாவூர் மாவட்டத்தில், எம்.பி.சி., என்ற அடிப்படையில், தேவர் சமூகத்தினர் உள்ளனர். அனைவரையும், எம்.பி.சி., பட்டியலில் கொண்டு வரவேண்டும்.

ஜாதிச் சான்றுகளை, அவர்கள் வசிக்கும் மாவட்டத்திலேயே பெறுவதற்கான உத்தரவையும், வழங்க வேண்டும். எனக் கூறினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பேரவை, சேலம் மாவட்டத் தலைவர் பெரியசாமி

ஜெயலலிதாவுக்கு அப்போது, சசிகலாவின் உதவி தேவைப்பட்டது. இப்போது,. தேவர் சமூகத்தினருக்கு உரிய சலுகைகளை அரசு வழங்க வில்லை

அகமுடையார் கல்வி அறக்கட்டளையின் மாநில பொதுச்செயலர் ஸ்டாலின்

கூடியது.

கள்ளர், மறவர், அகமுடையார் என்பதை ஒருங்கிணைத்து, தேவர் என ஒரே பெயராக மாற்றம் செய்ய வேண்டும் அய்யாவு தேவர் , முக்குலத்தோர் உறவின்முறை சங்கத் தலைவர், காரியாபட்டி

முதல்வர் "ஜெ.ஜெயலலிதாவுடன் சசிகலா நடராஜன்  நெருக்கமாக இருந்ததால், அ.தி.மு.க., தேவர் சமுதாயத்திற்கு சாதகமான கட்சி என்ற ஒரு மாயை இருந்தது. என்றார். வருங்காலங்களில் இந்த இனம், ஒரு கட்சிக்கு எதிரியாக பாவிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில், பலரும் பகிரங்கமாக கருத்து தெரிவிக்க முன்வரவில்லை.

செங்குட்டுவன் வாண்டையார்முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை தலைவர் கருத்தாக கடந்த காலங்களில், அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோதோ, இல்லாதபோதோ முக்குலத்தோர் என அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகமுடையார் இன மக்களின் பிரதிநிதியாக, சசிகலா நடராஜன்  குடும்பத்தினரை நினைத்து, மக்கள் செயல்பட்டனர். அதனால், அ.தி.மு.க., முக்குலத்தோர் இன மக்களின் கட்சியாக, தென் மாவட்டங்களில் மட்டுமில்லாமல், மத்திய மாவட்டங்களிலும் ஸ்திரமாக இருந்தது. மற்ற இன மக்கள், மற்ற கட்சிகளை சார்ந்தவர்கள், எந்தவொரு சூழ்நிலையிலும் அ.தி.மு.க.,வை ஒடுக்கப் பயந்தனர். ஜெயலலிதாவுக்கு மற்றும் அ.தி.மு.க.,வுக்கு, மிகப்பெரிய பலமே முக்குலத்து மக்கள் தான். ஆனால், சசிகலா நடராஜன்  குடும்பத்தினர், முக்குலத்தோர் இன மக்களுக்கு, சொல்லிக் கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை. அதனால் மக்கள் அவர் பின்னால் செல்லத் தயக்கம் உண்டு.  அ.தி.மு.க.,வுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. சசிகலா மீதுள்ள கோபத்தில், தேவரின மக்கள் பிரதிநிதிகளை பழிவாங்கக் கூடாது எனக் கூறினார்.

டாக்டர் நா.

சேதுராமன் மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் கருத்தாக ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருந்து, இன்னொரு கட்சியின் உள்விவகாரம் குறித்து கருத்து கூறுவது நாகரிகம் கிடையாது. இருந்தாலும் தேவர் சமூகத்தின் தலைவர் என்ற பெயரில் கருத்து கூறுகிறேன்...அ.தி.மு.க.,வில் தேவர் இனத்தின் ஒரே பிரதிநிதி என, சசிகலா நடராஜன்  காட்டி மற்ற தேவர் அமைப்புகளை அவர் வளரவிடவில்லை. இதில், அதிகம் பாதித்தது நாங்கள் தான். என் கட்சி சார்பில் நான்கு மாவட்டங்களில் மாநாடு நடத்தினேன். அந்த மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளே இல்லாதவாறு, ஒரு குரூப் புகுந்து விலை கொடுத்து வாங்கினர். ஏன்றார். முக்குலத்தோர்  அல்லது தேவர்  எனப்படுவர்கள், தமிழகத்தில் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் வாழுகின்ற இனக்குழுவினராவார்கள் .  முக்குலத்தோர் என்னும் பெயரானது  தமிழக அரசாங்கத்தால், இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.மறவர்கள் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் நீங்கலாக, கருமறவர்கள், இளமறவர்கள்  அப்பனாடு கொண்டையம் கோட்டை மறவர் உட்பட (சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக), செம்பனாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் நீங்கலாககள்ளர், ஈசநாட்டுக் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர்கள் உட்பட (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக), கூத்தப்பால் கள்ளர்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), பிரமலைக் கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் நீங்கலாக), பெரிய சூரியர் கள்ளர்கள் ( திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக)

கள்ளர் குலத் தொண்டைமான்செம்பநாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்பிரமலைக்கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)பிரமலைக்கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)

கந்தர்வக்கோட்டை கள்ளர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை நலத்துறையின் அரசாணை எண்:85, நாள் 29 ஜூலை 2008, எண்:97, நாள் 11 செப்டம்பர் 2008 மற்றும் அரசாணை எண்:37, நாள்: 21 மே 2009

அகமுடையார் (தொழுவ அல்லது துளுவவெள்ளாளர் உட்பட)

,26 ஆண்டுகளின் முக்கிய கோரிக்கையான  கள்ளர்,அகமுடையார், மறவர் சமுதாயங்களை ஒன்றிணைந்து தேவர் என 1994 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா அறிவித்த அரசாணை இப்போது வரை  அமலுக்கு வரவில்லை  உடனடியாக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி ஏழு இனங்கள் இணைத்து  நிறைவேற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததை அப்போது முதல்வர் ஜெ.ஜெயலலிதாவும் அவர் உடனிருந்த தோழி சசிக்கலா நடராஜனும் செய்யவில்லை என்பதே உண்மை. சிவகங்கைச் சீமை என்ற புத்தகம் துர்க்காதாஸ் எஸ் கே ஸ்வாமி என்பவர் எழுதியது அதில் வெள்ளைமருதுவின் மரண வாக்குமூலம் என்ற பகுதியை அனைவரும் ஒருமுறை  படிக்க வேண்டும். இன்று தேவர் என்ற பட்டத்தை தவிர்த்து, மற்றவைகள் அனைத்தும் இன்று சாதியாக நிற்கின்றது. பட்டங்களை சாதியாக மாற்றி, அதை தங்கள் வரலாறாகவும் கூறிவருகின்றனர்.  பட்டங்களை சாதியாக மாற்றி இசைவேளாளர் என முன்பு முதல்வர் மு.கருணாநிதி செய்த காரியம் முன்நிற்க இப்போது அதுவே வரலாறாகி மாறிக்  கூற .பல பெயர்களில் அழைக்கப்படும் நிலை. இப்போது அரசியல் நகர்வாகப் பார்க்கும் நிலை பட்டியல் ஜாதிய  சமூகத்தின் ஏழு உட்பிரிவுகளையும் சேர்த்து,  தேவந்திரகுல வேளாளர் என அழைக்க வேண்டும்' என்ற அச் சமூக மக்களின்  கோரிக்கையினை ஏற்று, வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படுமென பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அறிவிப்பினை நேற்று வெளியிட்டார்.  இந்த நிகழ்வுக்கு இன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமியை விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவருடன் நேரில் சந்தித்து  கதராடை  அணிவித்து நடிகை கௌதமி வாழ்த்துக் கூறியது தேர்தல் காரணமாகவே. இந்த மசோதா மற்றும் அறிவிப்பை வெளியிட்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு டாக்டர். கிருஷ்ணசாமி நன்றியை தெரிவித்தார். விமான நிலையத்தில் ஜான்பாண்டியன் வரவேற்றதும் அரசியல் தான்.நான்கு ஆண்டுக்கு முன் சசிகலாவாக சிறைசென்றார் 

இன்று 

மக்களின் முன் ஒருசாரார்களின் தலைவியாகத் தெரிகிறார் இது மூத்த 

பத்திரிக்கையாளர் கருத்து.கடந்த 2011 ஆம் ஆண்டு பொதுத்  தேர்தல் நடைபெற்ற போது திமுக தான் ஆளும்கட்சி. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள மு. கருணாநிதி செய்த முயற்சிகளை தான் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி தற்போது செய்து கொண்டுள்ளார்...

ஆட்சியின்  இறுதி நாட்களில் அறிவிக்கும்  பல நலத்திட்டங்கள்    சலுகைகள் எல்லாம் மக்களைச் சென்றடையுமா என்பது வினா 

உறுப்புகள் செயலிழந்து கோமா நிலைக்கு சென்ற நோயாளிக்குச் செய்யப்படும் சிகிச்சையைப் போன்று எதுவும் பலனளிக்கப் போவதில்லை என்பது பலமுறை கண்ட தமிழக அரசியலில் உண்மை  நிலை  சாதிதலைவர்கள் அனைவரையும் முக்குலத்தோருக்கு எதிராக அணிதிரட்டி  ஒன்றாக சேர்த்து கொண்டால் அந்த வாக்குகளை அள்ளி விடலாம் என்றால். காலம்சென்ற 

மு.கருணாநிதி இது போன்ற சாதி கூட்டணிகள் அமைத்த போதெல்லாம் பெரும் தோல்வி அடைந்தார் ஆட்சிக்கு வர முடியாமல்  என்பது தான்  வரலாறு.

முக்குலத்தோருக்கு  எதிராக அரசியல் படை திரட்டுவது  போன்ற பிம்பம் தமிழகத்தில்  பரவுகிறது. அதன் பிரதிபலிப்பு தான் இது எனவும் ஒரு விவாதம் நடக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...