முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வி.கே.சசிக்கலா நடராஜன் நாளை தமிழக வருகை இலக்கிய நடையில் கட்டியம் கூறிய பழ.கருப்பையா


வி.கே.சசிக்கலா நடராஜன்  நாளை தமிழகம் வர உள்ளார் 









வருகையை முன்னிட்டு கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள நுழைவு வாயில் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியில் கூடுதலாக சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தமிழக எல்லையிலிருந்து சசிகலா தங்கவிருக்கும் தி.நகர் இல்லம் வரை 30 க்கும் மேற்பட்ட இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க அமமுகவினர் திட்டமிட்டுள்ளனர். கிண்டியிலிருந்து ஜெயலலிதா நினைவிடம் சென்றால் மேலும் 17 இடங்களிலும், இல்லையெனில் மேலும் 7 இடங்களிலும் சென்னைக்குள் வரவேற்பு அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது  வருகை காரணமாக  பிரசாரத்தை ரத்து செய்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

வி.கே.சசிகலா நடராஜன்  வருகையை முன்னிட்டு கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்த நிலையில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் பிரச்சாரப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டம் வழியாக சசிகலா நடராஜன்  தமிழகம் வருவதால், அந்த சமயத்தில் அப்பகுதியில் பிரசாரம் மேற்கொண்டால் ஏதேனும் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் முதல்வரின் பிரசாரத் திட்டத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதா விவரம் அறிந்தவர்களின் தகவல்.""வஞ்சினம் கூறுதல்"

வி.கே. சசிகலா நடராஜன்  அன்றைக்கு சமாதியில் சபதம் செய்தததை பார்த்தவர்களுக்கு ஒன்றும் புரிந்திருக்காது. அதற்கு பெயர் வஞ்சினம் கூறுதல்

என்னையோ, என் குடும்பத்தையோ, என் நாட்டையோ அழித்த ஒருவன் மீது நான் போர் தொடுத்து, அவன் முற்றாக அழிந்தபின் மீண்டும் நான் இந்த இடத்திற்கு வருவேன். அப்படி இல்லை என்றால் நான் இன்ன கதிக்கு ஆளாவேன் என்று சமாதியிலோ, தெய்வத்தின் முன்போ, நாட்டின் முன்போ நின்று அறைந்து கூறுவது தான் வஞ்சினம் கூறுதல். 

அது புறநானூற்றில் இருக்கிற, தமிழருடைய அடிப்படை பண்பாடு. அந்தப்பழக்கம் இப்போது இல்லை. அது போர் சமூகத்திற்கு உரிய பண்பாடு. வழிவழியாக போர் செய்கிறவர்களுக்கு இந்த வஞ்சினம் கூறுதல் என்ற பண்பு இருக்கும். வி.கே. சசிகலா நடராஜனுக்கும் அது பழக்கத்திலேயே, இரத்தத்திலேயே இருக்கிறது." என  முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா பேசியுள்ளார்.

பகைவரது மதிலை அழித்த மன்னன் தனது வாளைப் புண்ணிய நீராட்டுவான். முடிசூடித் தானும் புண்ணிய நீராடுவான். முடிபுனைந்த நாளை ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடுவான்.வஞ்சியார் எனப்படும் வஞ்சி மாலை அணிந்த வீரர்கள் பகைவரது நாட்டு எல்லையுள் புகுந்து போருக்கு அடியிடுவர். ஊரை நெருப்பிட்டுக் கொளுத்துவர். ஊர் மனைகளில் கொள்ளையும் இடுவர். கரும்பும், நெல்லும் செழித்த வயல்களில் நெருப்பு மூட்டி அழிப்பர். நீர் தேக்கி வைத்த குளம் முதலியவற்றின் கரைகளை உடைத்துவிடுவர். உழிஞை மறவர் பகைவரது கோட்டைகளை இடித்துத் தரை மட்டமாக்கிக் கழுதை ஏர் கொண்டு உழுவர்; கவடு விதைப்பர். மற்றொரு வகையில் இரு திறத்து மன்னரும் தும்பைப் பூச்சூடி போருக்குச் செல்லுங்கால் போர் ஊருக்குள் நடைபெறாமல் குறிப்பிட்ட ஒரு போர்க்களத்தில் நடைபெறும். இரு திறத்துப் படைகளும் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் இரு திறத்தாருக்குமே மிக்க அழிவு ஏற்படும்படைவீரர்களான மறவர்கள் தம் அரசர் முன்னும் பகை மறவர்களின் முன்னும் நெடுமொழி (தற்பெருமை) கூறிக் கொள்வர். தனது மாமன்னனுக்குத் தன்னுடைய மேம்பாட்டை வீரன் ஒருவன் தானே எடுத்து உரைப்பது நெடுமொழி கூறல் எனப்படும். மன்னர்கள் போர் தொடங்கும் முன் வஞ்சினம் மொழிவர். வஞ்சினம் என்பது 'இன்னது செய்வேன் நான். அவ்வாறு செய்யேனாயின் இன்னன் ஆகுக' என்று வலிய சினத்தில் கூறும் சொல் ஆகும்.சங்க காலத்தில் தமிழர் போர் மரபுகள் அறப்போர் முறையைச் சார்ந்ததே ஆகும். அகம், புறம் என வாழ்வை இரண்டாகப் பகுத்து புறம் என்று போர்முறைகளுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். அவர்களது போர்முறை நேர்மையாக இருந்தது. காலை சூரிய உதயத்தின் போது, முரசறைந்து போர் தொடங்குவர். சூரியன் மறையும் வரை மட்டுமே போர் நடைபெற்றது. பின் முரசறைந்து போரை நிறுத்துவர். எத்துனை நாள் போராயினும் இதுவே வழக்கானது. பகைவர் ஆயுதத்தை இழந்த போதும், போரில் தோற்றோடும் போதும் அவர் மேல் படை செலுத்தாத அறநெறி இருந்தது. அவர்களுக்கு தகுந்த வாய்ப்பளிக்க மறுநாள் போர் செய்தனர். ஓடி ஒளிந்தாரைக் கொல்லாமல் அவர்கள் வரும் வரை காத்திருந்து போர் புரியும் வீரம் இருந்தது. இறந்தோருக்கு இரங்கும் குணம் இருந்தது.இலக்கியத்தில் பதில் தந்த பழ.கருப்பையா கூற்று உண்மை தான் அது பலவாறு வரலாற்றிலும் உண்டு.

அப்பாவின் திடீர் மரணத்தையொட்டி பாண்டிய இளவரசன் நெடுஞ்செழியனுக்கு அரியணை ஏறியே ஆகவேண்டிய அவசர நிலை, பாலகர்கள் அணியும் ஐம்படைத் தாலி எனும் அணிகலனைக் கூட இன்னும் காலிலிருந்து கழற்றியிருக்கவில்லை. அதற்குள் குருவி தலையில் பனங்காய் போல பெரும் அரசப் பொறுப்பு, அவனும் தட்டிக்கழிக்கவில்லை. விளையாட்டுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு வையம் ஆளும் பொறுப்பை துணிச்சலாக ஏற்றுக்கொண்டான்.

மதுரை 

பாண்டிநாட்டு அரியணையில் பச்சிளம் பாலகனா!  எதிரிகளுக்கெல்லாம் கொண்டாட்டம். பட்டொளிவீசிப் பறக்கும் பாண்டியரின் கயற்கொடியை கம்பத்தோடு வெட்டிச்சாய்க்க இதைவிட சிறந்த தருணம் கிடைக்குமா? பாண்டியன் பாலகனாய் இருந்தாலும் அவன் படை பெரிதல்லவா! எனவே ஏழுபேர் சேர்ந்தார்கள். இரண்டு முடியுடை பேரரசர்கள், ஐந்து குறுநில மன்னர்கள்…

சோழ மன்னன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, வேளிர் நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் இப்படி எழுவர்…இந்த எழுவரும் தனக்கு விரோதமாக எழுவர் என்பதை செழியன் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்கவில்லை. ஒற்றர் மூலமாக செய்தி வருகிறது. வெகுண்டெழுகிறான், கண்ணில் தீக்கனல் தெறிக்க புலவர் சான்றோர் முன்னிலையில் வஞ்சினம் கூறுகிறான்.

வஞ்சினம் கூறுதல் என்றால் என்ன? வேறொன்றுமில்லை நம் தமிழ்பட ஹீரோக்கள் இண்டர்வெல்லுக்கு முன்னாக தொடையில் தட்டி சபதமெடுப்பார்களே அதுதான் இது. நான் இதை செய்யவில்லையென்றால் எனக்கு இன்னின்னது நேரட்டும் என்று ஆன்றோர் அவையில் கூறுவதுதான் வஞ்சினம். செழியன் கூறிய வஞ்சினம் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

என்னைப் பழிக்கிறயா, என் மண்ணைப் பழிக்கிறாயா! உன் கூட்டாளிகளோடு சேர்ந்துவா!

உன்னை சிதறடிப்பேன், எல்லோரையும் சிறைப்பிடிப்பேன், என் காலின்கீழ் மடங்கடிப்பேன்

இல்லாவிட்டால்….!

கையாலாகாத காவலனென என் மக்கள் என்னை இகழட்டும், எம் புலவர் இந்த மண்ணைப் பாடாதொழியட்டும்

இரவலர்க்கு வழங்க இயலா வறுமை என்னைப் பிடிக்கட்டும்…

பாண்டியன் பகைவர் சவாலை ஏற்றவுடன் பாண்டியநாடு போர்க்கோலம் பூண்டது, சிறுவனான நெடுஞ்செழியன் தன் குலத்துக்குரிய வேப்பந்தளிரை சூடிக்கொண்டு, முற்றுகை இட்டிருக்கும் பகைவரை தகர்க்கப் போகும் மன்னர்கள் அணியும் மரபுப்படி உழிஞைக் கொடியையும் அணிந்தவனாய் படைக்கு தலைமையேற்க, கயல்கொடி ஏந்தி, போர்முரசொலிக்க நாட்டின் வடக்கு எல்லையை நோக்கி சீறிக்கிளம்பியது பாண்டியர் பெரும்படை.

கிரேக்க ரோமானியப் படைகளையொத்த கட்டுக்கோப்பையும் ஒழுங்குமுறையையும் கொண்ட படை என்று பாண்டியர் படைக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு, வீரர்கள் போர்ச்சீருடை அணிந்திருந்தார்கள். கார்மேகங்கள் மோதி இடியிடிப்பது போல களிறுகளும் இரதங்களும் ஒன்றுடன் ஒன்று மோத சோழ, பாண்டிய நாட்டின் எல்லையருகே மூண்டது அந்தப் பெரும்போர்

ஒரு மதயானையைப் பாலகன் என்று கருதிய பிழை அப்போதுதான் எதிரிகளுக்கு புரிந்தது. நெடுஞ்செழியன் களமாடிய காட்சியைக் கண்ட பாண்டிய வீரர்களே வெலவெலத்துப் போனார்கள். சிறுவன் என்று நினைத்த தம் வேந்தனே வெறிகொண்ட வேங்கைபோல வேட்டையாடுவதைக் காணும்போது இரத்தத்தில் வீரம் செறிந்த பாண்டிய வீரர்களைச் சொல்லவும் வேண்டுமா? எதிரிகளை சிதறடித்தார்கள். எதிரிகள் புறமுதுகிட்டு சோழநாட்டின் எல்லைகளுக்குள் புகுந்தார்கள்.

அந்த இடத்துக்குப் பெயர் தலையாலங்கானம்…

அந்தந்த நாட்டு மன்னர்களே தத்தம் படைக்கு தலைவராக நின்று போரிட்டனர். அதுவரையில் வராமல் தாமதமான பிற படைகளும் வந்து சேரவே, தன்னுடைய எல்லைக்குள்ளே பாண்டியன் படையும் வந்துவிட்டமையால் எப்படியாவது சுற்றி வளைத்துத் தொலைத்துவிடலாம் என்று நம்பினான் சோழன். மற்றவர்களுக்கும் உற்சாகமூட்டினான். ஆனால் அவன் கனவு பலிக்கவில்லை.

பாண்டியன் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதலாவது வேளிர் படையினர் சோர்ந்து போனார்கள். “எவனுக்காகவோ வந்து இவன்கிட்ட நாம ஏன் தர்ம அடி வாங்கணும்?!” என்ற எண்ணம் அவர்களில் பலரை பற்றிப் பிடிக்கவே சோழ மன்னன் கொடுத்த உற்சாக உபதேசங்களையெல்லாம் காதில் வாங்காமல் பின்னங்கால் பிடறியில் அடிக்க படையை விட்டு ஓடிப்போனார்கள். சோழர் படையைத் தவிர கடைசிவரை ஈடுகொடுத்து அடிக்கும் துணிவு வேறு யாருக்கும் வரவில்லை. சேரன் ஆயுதங்களையெல்லாம் போட்டுவிட்டு தலை தப்பியது தம்புரான் புண்ணியம் என்று ஓடி ஒளிந்து கொண்டான்

கடைசியில் சோழனுக்கு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை, கன்னிப்போரில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி செழியனுக்கு! … வீரர்கள் அவனைத் தோளில் தூக்கிவைத்து ஆரவரித்துக் கொண்டாடினர். சோழனும் பிறரும் பணிந்து அளித்த பொருள்களுடனும், அங்கங்கே வாரிக் கொண்ட பண்டங்களுடனும் வீரர்கள் மதுரைக்குத் திரும்ப மாநகரம் விழாக்கோலம் பூண்டது.

ஏற்கனவே அரசனை அணுவணுவாக இரசித்து பாடல் வடிக்கும் புலவர்களை கேட்கவும் வேண்டுமா! மாங்குடி மருதனைத் தலைவராகக் கொண்ட புலவர் சங்கத்தினர் பாண்டியனை தமிழ் மழையில் நனைத்தார்கள். பாடல்களை எழுதிக் குவித்தார்கள். நெடுஞ்செழியனுக்கு “தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்” என்ற புகழ்ப் பெயர் சூட்டப்பட்டது.

போரில் தீரம் காட்டிய வீரர்களுக்கு பரிசுகளையும் பட்டங்களையும் வாரிவழங்கினான் செழியன், படைத்தலைவர்களுக்கு ஏனாதி, நம்பி என்ற சிறப்பு பெயர்கள் சூட்டப்பட்டது. போரில் விவேகம் காட்டி வழிநடத்திய மந்திரிகளுக்கு காவிதி எனும் பட்டம் அளிக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த