முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மதுரை சித்திரை திருவிழா ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்

 உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மதுரை சித்திரை திருவிழா.








ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், திருத்தேர் உலா மற்றும் நவராட்த்திரி, ஆவணி மூல திருவிழா, தை தெப்பத் திருவிழா, ஆடிப்பூரம் என பல்வேறு விஷேச நாட்களில் மிகச் சிறப்பாக கொண்டாட்டம்

சுந்தரேஸ்வரருக்கு கருவரை மேல் உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரனுக்கு நேர்ந்த கொலை பாவத்தை போக்கும் பொருட்டு பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான். சிவ பெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய கடம்ப வனமான மதுரையில் சுயம்பு லிங்கமாக இருப்பதை தரிசித்த இந்திரன் பாவ விமோசனம் பெற்றார்.

இதனால் இந்திரன் இங்கு விமானத்துடன் கூடிய பெருங்கோயிலை எழுப்ப அது இந்திரன் விமானம் ஆகும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லால் ஆனது. மதுரைக்கு வந்த மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்றும், இந்த ஸ்லத்தினை பூலோக கைலாசம் எனவும் அழைக்கப்படுகின்றது.


மதுரையை ஆண்ட மன்னர் ராஜசேகர பாண்டியன் நடனம் கற்று வந்தார். அவர் சுவாமியை தரிசித்த போது, “இறைவா நான் நடனம் கற்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் காலம் காலமாக வலதுகால் ஊன்றி, இடதுகால் தூக்கி ஆடுகின்றாயே. எனக்காக இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி, கால் மாறி ஆடக் கூடாதா?... அப்படி நீ இதை செய்யாவிட்டால் நான் என் உயிரை இங்கேயே துறப்பேன்” என்றதும்

மன்னனின் வேண்டுகோளை ஏற்ற நடராஜர் தன் இடது காலை ஊன்றி, வலது கால் தூக்கி ஆடியருளினார். நடராஜர் இருக்கும் இடம் பஞ்ச சபைகளுள் ஒன்றான வெள்ளி சபையாகும்.

நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி, ஈசன் தன் சூலாயுதத்தால் பூமியில் ஊன்றி உருவாக்கியது இந்த பொற்றாமரைக்குளம். மேலும் இந்திரன் தான் பூஜிப்பதற்காகப் பொன்னால் ஆன தாமரையைப் பெற்ற ஸ்தலம். இந்த குளத்திற்கு சிவகங்கைகுளம் என்றும் பெயர்.

இந்த குளத்தில் அமாவாசை, கிரகண காலம், மாதப் பிறப்பு உள்ளிட்ட புண்ணிய நாட்களில் நீராடி சுவாமியை தரிசித்தல் வேண்டும்.

ஈசனை மனமுருகிப் பாடிய தேவாரப்பாடலால் பாடப்பெற்ற 274 சிவாலயங்களில் இது 192 வது தேவார ஸ்தலம் ஆகும். அதே போல் 51 வது சக்தி பீடம்

கோயிலிலுள்ள கோபுரங்கள் சங்க காலத்திற்கு முன்பே கட்டப்பட்டது.  சுமார் 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்.அதன் பின்னர் கோயிலில் உள்ள ஒவ்வொரு கோபுரமும் 1168 ஆண்டு முதல் 1175 ஆண்டு வரை சுவாமி கோபுரம் 1216 ஆண்டு முதல் 1228 ஆண்டு வரை கிழக்கு ராஜ கோபுரம் 1627 ஆண்டு முதல் 1628 ஆண்டு வரை அம்மன் சன்னதி கோபுரம் 1315 ஆண்டு முதல் 1347 ஆண்டு வரை மேற்கு இராஜ கோபுரம் 1372 ஆண்டு : சுவாமி சன்னதி கோபுரம் 1374 ஆண்டு : சுவாமி சன்னதி மேலக்கோபுரம் 1452 ஆண்டு : ஆறுகால் மண்டபம் 1526 ஆண்டு : 100 கால் மண்டபம் 1559 ஆண்டு : தெற்கு ராஜ கோபுரம் முக்குருணி விநாயகர் கோபுரம் 1560 ஆண்டு: சுவாமி சன்னதி வடக்குக்கோபுரம் 1562 ஆண்டு : தேரடி மண்டபம் 1563 ஆண்டு : பழைய ஊஞ்சல் மண்டபம், வன்னியடி நடராஜர் மண்டபம் 1554-72 வடக்கு ராஜ கோபுரம் 1564 - 72 வெள்ளிக் அம்பாள் மண்டபம் கொலு மண்டபம் 1569 ஆண்டு : இதர கோபுரம் ஆயிரங்கால் மண்டபம் 53 நாயன்மார்கள் மண்டபம் 1570 ஆண்டு : அம்மன் சன்னதி மேற்கு கோபுரம் 1611 ஆண்டு :வீர வசந்தராயர் மண்டபம் 1513 ஆண்டு : இருட்டு மண்டபம் 1623 ஆண்டு : கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம் 1623 - 59 ஆண்டு : ராயர் கோபுரம், அஷ்ட சக்தி மண்டபம் 1626 -45 ஆண்டு : புது மண்டபம் 1535 ஆண்டு : நகரா மண்டபம் 1645 ஆண்டு முக்குருணி விநாயகர் 1659 ஆண்டு : பேச்சியம்மாள் மண்டபம் 1708 ஆண்டு : மீனாட்சி நாயக்கர் மண்டபம் 1795 ஆண்டு : சேர்வைக்காரர் மண்டபம் ஆயிரங்கால் மண்டபம்: கோயிலின் சுவாமி சன்னதிக்கு இடது புறத்தில் உள்ளது ஆயிரங்கால் மண்டபம். கோயிலின் மற்ற மண்டபங்களை விட மிக பிரமாண்டமாக அளவின் பெரிதாக காணப்படுகின்றது. இதனை 1494 ஆம் ஆண்டில் மதுரையை ஆண்ட முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவரின் அமைச்சரும் தளவாய் பிரதானி அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்ட மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என அழைக்கப்பட்டாலும் உள்ளே 985 தூண்கள் மட்டும் உள்ளன. இதில் 22 தூண் இசை எழுப்பக்கூடிய சிறிய தூண்கள் உள்ளன. இருப்பினும் தூண் சேதமடைந்துவிடக் கூடாது என்பதற்காக பாதுகாக்கப்பட்டு வருகின்றது ஸ்ரீ

ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோலில் சில உப சன்னதிகளைக் கட்ட மன்னர் திருமலை நாயக்கர் முடிவு செய்து, ஊருக்கு வெளியே வண்டியூர் பகுதியில் எடுத்த பின் அது தெப்பக்குளமாக உள்ளது. இங்குமண் எடுக்கும் போது இந்த முக்குறுணி விநாயகரை கண்டு கிடைத்தது.

அதை  கோவிலிலேயே ஸ்ரீ மீனாட்சி சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு இடையே கிளிகூண்டு மண்டபத்துக்கு வடக்கு பகுதியில் தனி சன்னதியில்  வைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி தினத்தில் மிக சிறப்பாக இந்த விநாயகர்  கொண்டாடப்படுகின்றார்

மாசி முதல் ஆடி வரை ஆறு மாதம் அம்பாள் ஸ்ரீ மீனாட்சி ஆட்சி நடைபெறும். ஆவணியில் ஆட்சி பொறுப்பேற்கும் சுந்தரரேஸ்வரர் மாசி மாதம் வரை ஆட்சி நடத்துவார். மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மாசித் திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா அத்துடன் இணைக்கப்பட்டது. அதனால் தான்,சைவ  வைணவக் கலப்பு காரணமாக  ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் தற்போது சித்திரையில் நடக்கிறது.

சித்திரை திருவிழா இந்தாண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றதில். எட்டாம் நாளில் காலை ஊடல் லீலை நடைபெற்றது. அன்றிரவு அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

பரிவட்டம், வேப்பம்பூ மாலை ஸ்ரீ

ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு பாண்டிய பட்டத்து அரசியாக முடி சூட்டுவதற்காக ராயர் கிரீடம் எனப்படும் வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகர் சந்நிதியிலிருந்து செங்கோலும் கொண்டு வரப்படும். அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டப்பட்டு கையில் செங்கோல் தரப்படும். பின்னர் மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்படும்

பல்லாக்கு குதிரையில் பவனி வரும் ஸ்ரீ மீனாட்சி பட்டம் சூடிய ஸ்ரீ மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தருவார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். கொரோனா காலம் என்பதால் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. உள் புறப்பாடு நடைபெறும் போது பக்தர்கள் தரிசிக்க அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.தினம் தினம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை அம்மனுடன் ஆடி வீதிளில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஒன்பதாம் நாளன்று திக் விஜயமும் நடைபெற்றது.

பத்தாம் நாளான இன்றைய தினம் மிக முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம் என்றாலே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. திருக்கல்யாணம் முடிந்து தம்பதி சமேதராக அருள்பாலித்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண உற்சவம்

கோவிலில் உள்ள சேத்தி மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக பல வண்ண மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் உற்சவர் சன்னதியில் இருக்கும் திருவாட்சியில் உள்ள 108 விளக்குகள் ஏற்றப்பட்டன. மீனாட்சி அம்மன் மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டார்.புது மணத்தம்பதிகள்

பட்டுப்புடவை உடுத்தி மணப்பெண்ணாய் காட்சி அளித்தார் மதுரை ஸ்ரீ மீனாட்சி வைரகிரீடம் சூடி, மரகத மூக்குத்தி, வைர மாலை மற்றும் பல வண்ண கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டன. சுந்தரேசுவர பெருமான் வெண்பட்டும், பிரியாவிடை சிவப்பு பட்டும் உடுத்தி மன்னர் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் வழங்ககய கிரீடம் சூடி மணமேடையில் எழுந்தருளினர். பரிவட்டம் காட்டிய படி அந்தண பட்டர்கள்  மணமேடையில் அக்னி வளர்த்து வேதமந்திரங்கள் முழங்க திருமணச் சடங்குகளைச் செய்தனர். அதைத் தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. பின்னர் சுந்தரேசுவரர் பிரதிநிதியாக ஒரு பட்டரும், ஸ்ரீ மீனாட்சியின் பிரதிநிதியாக மற்றொரு பட்டரும் மாலை மாற்றிக் கொண்டனர். சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், அம்மனுக்கு பட்டுப் புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன.

முப்பத்து முக்கோடி தேவர்கள் அன்னையின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஆண்டு தோறும் திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணியசுவாமி, தேவயானி சகிதம், பவளவாய் கனி பெருமாள் ஆகியோர் எழுந்தருளுவார்கள். இந்திரன், குபேரன் உள்ளிட்ட தேவர்கள் புடை சூழ, பவளவாய் கனி பெருமாள், தனது தங்கை மீனாட்சியை தாரைவார்த்துக் கொடுத்து திருமணம் செய்து வைப்பார். இந்த ஆண்டு பவளக்கனிவாய் பெருமாளும், சுப்ரமணிய சுவாமியில் மதுரைக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.