எரிசக்தி அமைச்சகம்
கொவிட்-19 பரிசோதனை மற்றும் தடுப்பு மருந்து வழங்கும் முகாமை என்ஹெச்பிசி நடத்தியது
கொவிட்-19-ஐ எதிர்த்துப் போராட பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்த அறைகூவல் மற்றும் மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) மற்றும் திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் இணை அமைச்சர் திரு ஆர் கே சிங்கின் வழிகாட்டுதல்களின் படி, பரிதாபாத்தில் உள்ள தனது கார்ப்பரேட் அலுவலகத்தில் கொவிட்-19 பரிசோதனை மற்றும் தடுப்பு மருந்து வழங்கும் முகாமை 2021 மே 27 அன்று என்ஹெச்பிசி நடத்தியது.
இம்முகாமின் போது, என்ஹெச்பிசி பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 63 பேர் (45 முதல் 60 வயதுக்குள் இருப்பவர்கள்) தங்களது முதல் டோஸ் தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டனர். ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களும் பயனடைந்தனர்.
கருத்துகள்