முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாஸ் புயல்: மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக இந்திய முப்படைகளும் தயார் நிலையில்

பாதுகாப்பு அமைச்சகம்

யாஸ் புயல்: மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன



வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் எனும் புயலாக உருவாகி, அடுத்த 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடா மீது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே மே 26 அன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், புயலின் அசைவுகளை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

யாஸ் புயலை எதிர்கொள்வதற்காக கிழக்கு கடற்படை தள தலைமையகம் மற்றும் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா பகுதிகளின் கடற்படை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து இருப்பதோடு மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக அவர்களோடு தொடர்பில் உள்ளனர்.

தயார் நிலையில் ஒரு பகுதியாக, எட்டு வெள்ள நிவாரண குழுக்கள் மற்றும் நான்கு நீச்சல் குழுக்கள் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தயார் நிலையில் உள்ளன. நான்கு கடற்படை கப்பல்கள், மருத்துவ குழுக்கள் மற்றும் இதர குழுவினர் தேவையான உதவிகளை அளிப்பதற்காக ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையோரப் பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர்.

மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்வதற்காகவும், பாதிக்கப்பட்டுள்ள நபர்களை மீட்பதற்காகவும், தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காகவும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் டேகா மற்றும் சென்னைக்கு அருகிலுள்ள ஐஎன்எஸ் ராஜாளி ஆகிய கடற்படைக்கு சொந்தமான விமான நிலையங்களில் கடற்படை விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.               பாதுகாப்பு அமைச்சகம்

யாஸ் புயலை எதிர்கொள்வதற்குத் தயார்நிலையில் ஆயுதப்படைகள்.

வரும் மே 26-ஆம் தேதி கிழக்கு கடற்கரையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் யாஸ் புயலினால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக ஆயுதப்படைகள் முழுவீச்சில் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.‌ மே 23-ஆம் தேதி வரை இந்திய விமானப்படை, 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களையும் 70 டன் சரக்குகளையும் ஜாம்நகர், வாரணாசி, பாட்னா மற்றும் அரக்கோணத்திலிருந்து கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் போர்ட் பிளேயருக்கு ஏற்றிச் சென்றுள்ளது.

16 விமானங்களும், 26 ஹெலிகாப்டர்களும் உடனடித் தேவைக்காகத் தயார் நிலையில் உள்ளன. மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பிரிவின் பத்து படைகள் புவனேஸ்வருக்கும் கொல்கத்தாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளதோடு, ஐந்து குழுக்கள் போர்ட் பிளேயரில் தயார் நிலையில் உள்ளன. கிழக்குக் கடற்படை மற்றும் அந்தமான் நிக்கோபார் கடற்படையைச் சேர்ந்த 8 கப்பல்கள், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவுவதற்கான மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணங்களுடன் தயாராக உள்ளன.‌ நான்கு நீச்சல் குழுக்கள் மற்றும் பத்து வெள்ள நிவாரணக் குழுக்கள், கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் சிலிகாவில் பொது நிர்வாகத்திற்கு குறுகிய காலத்தில் உதவிகளை வழங்குவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளன.

ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதனை எதிர்கொள்வதற்காக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏழு வெள்ள நிவாரண குழுக்களும் இரண்டு நீச்சல் குழுக்களும் வெவ்வேறு பகுதிகளில் தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக, விமானப்படைக்கு சொந்தமான விமானங்களும், ஹெலிகாப்டர்களும் விசாகப்பட்டினம் மற்றும் போர்ட் பிளேயரில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகத் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.

எட்டு வெள்ள நிவாரணக் குழுக்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் மூன்று பொறியாளர் பணிக் குழுக்கள், பொது நிர்வாகத்தின்  அழைப்பிற்காக காத்திருக்கின்றன. பாதிப்பு ஏற்படக்கூடிய மாநிலங்களின் நிர்வாகத்தினருடன் ஆயுதப்படை தொடர்பில் உள்ளது. கொவிட்- 19 சிகிச்சைக்காகவும், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பிராணவாயுவை மருத்துவமனைகளுக்குதடையின்றி கொண்டு செல்வதற்காகவும் சாலை மற்றும் ரயில் இணைப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆயுதப்படை குழுக்கள் பணியாற்றுகின்றன.

புயலினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை எதிர்கொள்ளவும், உயிர்களை பாதுகாக்கவும் ஆயுதப்படை முழு அளவில் தயாராக உள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம்

யாஸ் புயலை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது இந்திய கடலோர காவல் படை

யாஸ் புயலை முன்னிட்டு, இந்திய கடலோர காவல்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

யாஸ் புயல், கிழக்கு கடலோர பகுதியை மே 26ம் தேதி தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு, கடலோர காவல் படை மையங்கள் அனைத்தும் விழிப்புடன் உள்ளன. வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடலோர காவல்படையின், கப்பல்கள், விமானங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

இந்திய கடலோர காவல்படையின் தொலைதூர மையங்கள், வானிலை குறித்த எச்சரிக்கைகளை உள்ளூர் மொழியில் எம்எம்பி ரேடியோ மூலம் கடற் பயணம் மேற்கொள்பவர்களுக்கும், மீனவர்களுக்கும் ஒலிபரப்பி வருகிறது. வங்க கடல் பகுதியில் நுழையும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்க சர்வதேச பாதுகாப்பு வலைதளமும் செயல்படுத்தப்பட்டு ‘நேவ்டெக்ஸ்’ எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

வங்க கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிற்கும் கப்பல்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதி மற்றும் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் கடலோர பகுதிகளிலும், நாள் ஒன்றுக்கு  16 கப்பல்களையும், 3 விமானங்களையும் இந்திய கடலோர காவல்படை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

மேலும், கடலோர காவல் படையின் 31 பேரிடர் மீட்பு குழுக்கள் படகுகள் மற்றும் லைப் ஜாக்கெட்டுகளுடன் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் தயார்நிலையில் உள்ளன.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், தற்போது வரை, 254 படகுகள் பாதுகாப்பாக கரை திரும்புவதை இந்திய கடலோர காவல் படை உறுதி செய்துள்ளது. மேலும் 77 வர்த்தக கப்பல்கள், நங்கூரமிட்டு நிற்கும் கப்பல்களுக்கும் இந்திய கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் யாஸ் புயலை எதிர்கொள்வதற்குத் தயார்நிலையில் ஆயுதப்படைகள்

வரும் மே 26-ஆம் தேதி கிழக்கு கடற்கரையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் யாஸ் புயலினால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக ஆயுதப்படைகள் முழுவீச்சில் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.‌ மே 23-ஆம் தேதி வரை இந்திய விமானப்படை, 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களையும் 70 டன் சரக்குகளையும் ஜாம்நகர், வாரணாசி, பாட்னா மற்றும் அரக்கோணத்திலிருந்து கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் போர்ட் பிளேயருக்கு ஏற்றிச் சென்றுள்ளது.

16 விமானங்களும், 26 ஹெலிகாப்டர்களும் உடனடித் தேவைக்காகத் தயார் நிலையில் உள்ளன. மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பிரிவின் பத்து படைகள் புவனேஸ்வருக்கும் கொல்கத்தாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளதோடு, ஐந்து குழுக்கள் போர்ட் பிளேயரில் தயார் நிலையில் உள்ளன. கிழக்குக் கடற்படை மற்றும் அந்தமான் நிக்கோபார் கடற்படையைச் சேர்ந்த 8 கப்பல்கள், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவுவதற்கான மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணங்களுடன் தயாராக உள்ளன.‌ நான்கு நீச்சல் குழுக்கள் மற்றும் பத்து வெள்ள நிவாரணக் குழுக்கள், கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் சிலிகாவில் பொது நிர்வாகத்திற்கு குறுகிய காலத்தில் உதவிகளை வழங்குவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளன.

ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதனை எதிர்கொள்வதற்காக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏழு வெள்ள நிவாரண குழுக்களும் இரண்டு நீச்சல் குழுக்களும் வெவ்வேறு பகுதிகளில் தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக, விமானப்படைக்கு சொந்தமான விமானங்களும், ஹெலிகாப்டர்களும் விசாகப்பட்டினம் மற்றும் போர்ட் பிளேயரில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகத் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.

எட்டு வெள்ள நிவாரணக் குழுக்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் மூன்று பொறியாளர் பணிக் குழுக்கள், பொது நிர்வாகத்தின்  அழைப்பிற்காக காத்திருக்கின்றன. பாதிப்பு ஏற்படக்கூடிய மாநிலங்களின் நிர்வாகத்தினருடன் ஆயுதப்படை தொடர்பில் உள்ளது. கொவிட்- 19 சிகிச்சைக்காகவும், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பிராணவாயுவை மருத்துவமனைகளுக்குதடையின்றி கொண்டு செல்வதற்காகவும் சாலை மற்றும் ரயில் இணைப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆயுதப்படை குழுக்கள் பணியாற்றுகின்றன.

புயலினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை எதிர்கொள்ளவும், உயிர்களை பாதுகாக்கவும் ஆயுதப்படை முழு அளவில் தயாராக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...