முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து நூலகங்களும் இயங்க அரசு அனுமதித்து அரசாணை

 ஊரடங்கு முடிந்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து நூலகங்களும் இயங்க அரசு அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, வரும் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு  உள்ள நிலையில், தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. முதற்கட்டமாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் நூலகங்கள் இயங்கலாம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு அமைப்புகள் சார்பில் நூலகங்களைத் திறக்கக் கோரிக்கை வைத்துள்ளதாக பொது நூலகத்துறை இயக்குநர் அரசுக்குக் கடிதமெழுதியுள்ளார். நூலகத்துறை இயக்குநரின் கடிதத்தின் பேரில் அரசு பரிசீலித்து, பகுதி நேர நூலகங்கள் தவிர மற்ற நூலகங்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.விவரம்:

கன்னிமரா, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், முழு நேர  கிளை நூலகங்களில் உள்ள புத்தகங்கள் எடுத்துக் கொடுக்கும் பிரிவு, பரிந்துரை புத்தகங்கள் உள்ள பிரிவு, சொந்த புத்தகங்களை படிக்கும் பிரிவுகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

புத்தகங்களை வாசகர்கள் சுற்றுக்கு வழங்கும் பிரிவுகள் கிளை நூலகங்கள், கிராம நூலகங்களில் மட்டும் இயங்கலாம்.

நூலகங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரைதான் செயல்பட வேண்டும்.

கிளை நூலகங்கள், கிராம நூலகங்கள் வழக்கமான பணி நேரமான மதியம் 2 மணிவரை இயங்கலாம்.

பகுதி நேர நூலகங்கள் திறக்க அனுமதியில்லை. அனைத்து நூலகங்களிலும் நாளிதழ்கள் பிரிவுக்கு வாசகர்கள் அனுமதிக்க கூடாது.

நூலகர்கள், நூலகப் பணியாளர்கள் முகக் கவசம் மற்றும் கையுறைகளை அவசியம் அணிய வேண்டும்.

வாசகர்கள் கேட்கும் நூல்களை நூலடுக்குகளிலிருந்து, நூலகப் பணியாளர்கள் தான் எடுத்துக் கொடுக்க வேண்டும்.

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நூலகங்களில் அனுமதியில்லை.

5 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் நூலகத்தில் அனுமதி இல்லை. கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள நூலகங்கள் ஊரடங்கு முடியும் வரை திறக்க அனுமதியில்லை. மேலும் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நபர்கள் அந்த நூலகங்களில் சென்று படிக்க அனுமதியில்லை.

நூலகங்களில் குளிர் சாதன வசதிகளுக்கு அனுமதியில்லை.

சொந்தப் புத்தகங்களை எடுத்து வந்து படிப்போர் தங்கள் புத்தகங்கள் மற்றும் லேப்டாப்களை மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. மேலும் அந்தப் பிரிவிலிருந்து நூலகத்தின் வேறு பிரிவுகளுக்கு எந்தப் பொருளும் எடுத்துச் செல்லக் கூடாது.




புத்தகம் படிக்கும் பிரிவில் குழுவாக அமர்ந்து ஆலோசிக்கவோ விவாதிக்கவோ அனுமதிக்க கூடாது.

நூலகங்களுக்கு வரும் வாசகர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை சிறு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்த பிறகு, நூலகப் பணியாளர்கள் அந்த புத்தகங்களை எடுத்து வந்து கொடுக்க வேண்டும்.

நூலகங்களுக்கு வருவோரில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் புத்தகம் படிக்கும் பிரிவு மற்றும் பரிந்துரை நூல்கள் பிரிவுக்கு அனுமதிக்க வேண்டும். மேற்கண்டவை தவிர அரசு அறிவித்துள்ள கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நூலகங்களில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நூலகங்களுக்கு வருவோர் கண்டிப்பாக தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதிக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சி நூலகங்களிலும் முரசொலி பத்திரிக்கை உட்பட மூன்று தினசரி நாளிதழ் வாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் சண்முகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் 27-05- 2021 ஆம் தேதி நடைபெற்ற காணொளிக்காட்சி அறிவுரையின்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி நூலகத்திற்கும் 01-06-2021 முதல் தினமும் மூன்று தினசரி நாளிதழ்கள் வாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக முரசொலி நாளிதழ் ஒரு வருட சந்தா ஒரு நூலகத்திற்கு ஆயிரத்து 800 ரூபாயை முரசொலி சென்னை என்ற முகவரிக்கு வங்கி வரைவோலையாக பெற்று இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மற்ற இரண்டு நாளிதழ்களை உள்ளூர் முகவர்களிடமிருந்து பெற்று பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டி உள்ளதால் ஊராட்சி ஒன்றிய பொது நிதி கணக்கு எண் ஒன்றிலிருந்து இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும், மேலும் இத்தொகை ஊராட்சிக் கணக்கிலிருந்து பெற்று ஈடுசெய்ய அறிவுறுத்தப்படுகிறதென தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.             தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்கள், ஊர்கள் அனைத்திலும் நூலகங்கள் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் செயல்படுகின்றன.

தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948 ன் படி, நிறுவப்பட்ட பொது நூலகங்களின்  சேவையை  மேம்படுத்தும் நோக்கில்    1972 ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. பொது நூலக இயக்ககக்  கட்டுப்பாட்டின் கீழ் தமிழகமெங்கும் பின்வரும் நூலகங்கள் செயல்படுகின்றன

கன்னிமாரா பொது நூலகம் , அண்ணா நூற்றாண்டு நூலகம் மாவட்ட மைய நூலகங்  32 கிளை நூலகங்கள் 1926 நடமாடும் நூலகங்கள் 14 ஊர்ப்புற நூலகங்க 1915 பகுதி நேர நூலகங்கள் 745 என    மொத்தம் 4634 உள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...