முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதில் இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்   வர்த்தக நோக்கங்களுக்காக இ-வின் தரவுகளைத் தவறாகப்



பயன்படுத்துவதைத் தவிர்ப்பதில் மத்திய அரசு உறுதி



“முழுமையான அரசின் அணுகுமுறையின்” கீழ் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல்  தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஆதரவளித்து வருகிறது. நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசிகள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேமிப்பு உள்ளிட்ட விநியோக சங்கிலியை சீரமைக்கும் பணிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மின்னணு புலனறிதல் இணைப்பு தடுப்பூசி முறையின் (இ-வின்) இருப்புநிலை மற்றும் வெப்பநிலை தரவு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதியுள்ள கடிதம் பற்றி ஒரு சில ஊடகங்கள் விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளன.

வணிக நோக்கத்திற்காக, பல்வேறு முகமைகள் இந்தத் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காகவே, இ-வின் மூலம் பெறப்படும் தரவுகள் மற்றும் தடுப்பூசிகளின் இருப்பு பற்றிய தகவல்களையும், அவை சேமிக்கப்படும் வெப்பநிலை பற்றிய தகவல்களையும் வெளியிடுவதற்கு முன்பு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அனுமதியை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பெறவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உலகளாவிய தடுப்பூசித் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு தடுப்பூசிகளுக்கான குறிப்பிட்ட பயன்பாட்டு நிலவரம் தொடர்பான முக்கிய தகவல்களும், ஒவ்வொரு தடுப்பூசியை சேமிப்பதற்கு தேவையான வெப்பநிலை தொடர்பான தரவுகளும் ஏராளமான தடுப்பூசிகள் மற்றும் குளிர் சாதன உபகரணங்களின் ஆராய்ச்சி சம்பந்தமான விஷயங்களில் தவறாகப் பயன்படுத்தப்படலாம்.

உலகளாவிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் ஆறு வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளுக்கு இ-வின் என்ற மின்னணு தளத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பயன்படுத்துகிறது. தடுப்பூசியின் கையிருப்பு மற்றும் சேமிப்பு, வெப்பநிலை தொடர்பான இ-வின் தரவுகளை வெளியிடுவதற்கு சுகாதார அமைச்சகத்தின் முன்அனுமதி அவசியம்.

கொவிட்-19 தடுப்பூசிகளின் கையிருப்பு, பயன்பாடு மற்றும் மீதமுள்ளவை குறித்தத் தகவல்கள் கோவின் தளத்தில்  பதிவேற்றம் செய்யப்படுவதுடன், வாராந்திர ஊடக சந்திப்பு மற்றும் அன்றாட செய்தி அறிக்கைகளின் வாயிலாக ஊடகத்திற்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படைத்தன்மையுடன் இந்தத் தகவல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

முறையில்லா வர்த்தக நோக்கங்களுக்காக இது போன்ற உணர்வுப்பூர்வமான தரவுகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் நோக்கத்துடனேயே மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியது.

கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதில் இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. எனவேதான் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த முறையில் தடுப்பூசி தளவாடங்கள் பற்றி பயனாளிகளுக்குத் தெரிவிப்பதற்காக கோவின் தளம் உருவாக்கப்பட்டது. சீரான இடைவெளியில் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பதே இதன் நோக்கமாகும்.சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் 146-வது நாள்: 24.58 கோடி டோஸ்கள் இது வரை வழங்கப்பட்டுள்ளன

இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 24.58 கோடிக்கும் (24,58,47,212) அதிகமான தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி உள்ளது.

18-44 வயது பிரிவில் 18,64,234 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 77,136 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் இன்று பெற்றனர், 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 3,58,49,328 பேர் முதல் டோசையும், 4,84,740 நபர்கள் இரண்டாம் டோசையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இதுவரை பெற்றுள்ளனர்.

பிகார், தில்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கொவிட் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 2007665 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 5265 நபர்கள் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 50340 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்.

தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் 146-வது நாளில் (2021 ஜூன் 10), 30,32,675 டோஸ்கள் வழங்கப்பட்டன. இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 27,33,087 பேருக்கு முதல் டோசும், 2,99,588 நபர்களுக்கு இரண்டாவது டோசும் வழங்கப்பட்டன. இறுதி அறிக்கைகள் இன்றிரவு நிறைவு செய்யப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...