முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழந்தைகளுக்கு ஏற்படும் கொவிட்-19 பாதிப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் பெரும்பரவலை தவிர்ப்பது எப்படி” இணைய கருத்தரங்கு




 “ஆயுஷ்மான் பாரத் அனைவருக்கும் சுகாதாரம் & குழந்தைகளுக்கு ஏற்படும் கொவிட்-19 பாதிப்பு & எதிர்பார்க்கப்படும் பெரும்பரவலை தவிர்ப்பது எப்படி” என்பது குறித்த இணைய கருத்தரங்கு

 “ஆயுஷ்மான் பாரத் அனைவருக்கும் சுகாதாரம் & குழந்தைகளுக்கு ஏற்படும் கொவிட்-19 பாதிப்பு & எதிர்பார்க்கப்படும் பெரும்பரவலை தவிர்ப்பது எப்படி” என்பது குறித்த இணைய கருத்தரங்கை பத்திரிகை தகவல் அலுவலகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய அரசு, சென்னை உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம், கோயம்புத்தூர், 2021 ஜூன் 11 அன்று நடத்தியது.

திரு நதீம் துஃபைல், துணை இயக்குநர், பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை, இணைய கருத்தரங்கில் பங்கேற்றோரை வரவேற்றார். பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான இணைய கருத்தரங்கு கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கான தடுப்பு மருந்து இன்னும் அறிமுகப்படுத்தப் படாததால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் தொற்றில் இருந்து அவர்களை பாதுகாக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.

அறிமுகவுரையாற்றிய திரு ஜெ காமராஜ், ஐஐஎஸ், இயக்குநர், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், சென்னை, 50 கோடிக்கும் அதிகமான ஏழை மற்றும் தேவையுள்ள மக்களுக்கு மருத்துவ பராமரிப்பை உறுதி செய்து ஆயுஷ்மான் பாரத் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல லட்சக்கணக்கானோருக்கு இத்திட்டம் உதவி, பல்வேறு மட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். சுமார் 16 கோடி பேருக்கு ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளிடையே அதிகரித்து வரும் பாதிப்புகள் கவலை அளிப்பதாகவும், மூன்றாம் அலையை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டுமென்றும் அவர்  கூறினார்.

தொடக்கவுரையை வழங்கிய டாக்டர் மாணிக்கம் ராமசாமி, குடும்பம் ஆரோக்கியமாக விளங்க பெற்றோர்கள் தங்கள் உடல் நலனை பேண வேண்டும் என்றார். சரியான கொவிட் நடத்தை விதிமுறையை பெற்றோர் கட்டாயம் கடைபிடித்து, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்கள் உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இணைய கருத்தரங்கில் பேசிய டாக்டர் நேமிநாதன், நிர்வாக இயக்குநர், கோயம்புத்தூர் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, குழந்தைகளுக்கு ஏற்படும் கொவிட் குறித்த ஆதாரம் சார்ந்த அணுகலை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்றார். நேர்மறை எண்ணத்தோடு இருக்குமாறும், பயப்பட வேண்டாம் என்றும் குழந்தைகளை அவர் கேட்டுக்கொண்டார்.

காய்ச்சல், சளி, இருமல், வறண்ட தொண்டை, சோர்வு, தலைவலி, உடல் வலி, சரியாக உணவு உட்கொள்ளாமல் இருத்தல் மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டுமென்றும், அவ்வாறு இருப்பவர்களை விரைந்து மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பு மருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய அவர், முறையான நடத்தை விதிமுறை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பெற்றோர் மற்றும் குழந்தைகள் தவறாமல் கடைபிடிக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் ஸ்ரீனிவாசன், தலைவர், நுண்ணுயிரியல் துறை, ரத்தினம் கல்வி குழுமம், கோயம்புத்தூர், வீட்டில் அர்த்தமுள்ள செயல்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு உற்சாகமூட்டி, நேர்மறையான மனநிலையை ஏற்படுத்தலாம் என்றார். பல மாதங்களாக வீட்டிலேயே அடைந்து கிடைக்கும் குழந்தைகள் குறைந்தளவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய விஷயங்களை கற்பதற்கு ஊக்கப்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

இணைய கருத்தரங்கில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்த, கள விளம்பர அலுவலகத்தின் துணை இயக்குநர் திருமதி கரீனா பி தெங்கமம், குழந்தைகளுடன் கலந்து கொண்ட பெற்றோருக்கு நன்றி கூறினார்.

நன்றியுரை ஆற்றிய ரத்தினவாணி 90.8 சமூக வானொலியின் (ரத்தினம் கல்லூரி வானொலி) தலைவர் திரு முகேஷ் மோகன்குமார், இணைய கருத்தரங்கின் முக்கிய அம்சங்கள் தங்களது வானொலியில் ஒலிபரப்பப்பட்டு விழிப்புணர்வு உருவாக்கப்படும் என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த