25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ ஆ ப அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ள படி
மதுரை மாநகராட்சியின் ஆணையராக கே.பி.கார்த்திகேயன் நியமனம்
சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ் நியமனம்
திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்திகுமார் நியமனம்
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன் நியமனம்
கோயமுத்தூர் மாநகரா
ட்சி ஆணையராக ராஜகோபால் நியமனம் . சென்னை மாநகராட்சி துணை ஆணையராக சினேகா, பிரசாத், நர்னவாரே மனீஷ் சங்கர்ராவ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட அரசின் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.கூடுதல் ஆட்சியர்கள் மாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவில்,
கடலூர், கூடுதல் கலெக்டர், திட்ட அலுவலராக பவன்குமாரும்
கடலூர் கூடுதல் கலெக்டர்(வருவாய்) ஆக ரஞ்சித் சிங்கும்
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை கூடுதல் இயக்குநராக சரவணனும்
தஞ்சாவூர் கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) திட்ட அலுவலராக ஸ்ரீகாந்தும்
தர்மபுரி கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்பின் திட்ட அலுவலராக வைத்தியநாதனும்
திருவண்ணாமலை கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) ஆக தபிரதாப்பும்
திண்டுக்கல் மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) தினேஷ் குமாரும்
தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டராக சரவணனும்
தமிழக அரசின் துணை செயலராக அனுவும்
சேலம் கூடுதல் கலெக்டராக(வளர்ச்சி) சேக் அப்துல் ரஹ்மானும்
ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) பிரதிக் தயாளும்
தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) சுகபுத்ராவும்
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கூடுதல் இயக்குநராக இளம்பாஹாவத்தும்
சென்னை மாநகராட்சி தெற்கு பிராந்திய துணை கமிஷனராக சிம்ரன்ஜித்சிங்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கருத்துகள்