முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம்பெருமான் ஈசனருள் பெற்ற ஸ்ரீ வெள்ளை வேட்டி சித்தர் ஜீவசமாதி பீடம்.. ஆலய குடமுழுக்கு விழா

 "மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்

வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும்என்று பேணுவார்;

நம்கலம் கவிழ்ந்தபோது நாறும்என்று போடுவார்

எண்கலந்து நின்றமாயம் என்னமாயம்    ஈசனே....! எம்பெருமான் ஈசனருள் பெற்ற ஸ்ரீ வெள்ளை வேட்டி சித்தர் ஜீவசமாதி பீடம்..  ஆலய குடமுழுக்கு விழா     



               "சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் வ.சூரக்குடி கிராமம் தேசிய நெடுஞ்சாலையருகிலுள்ள தோப்பூரணிப்  பகுதியில் நான்கு தலைமுறைக்கு முன்னால் குறுநில மன்னர் கோட்டையிருந்து வாழ்ந்ததற்கான அடிச்சுவடுகளின் சில அடையாளமுண்டு கோட்டைச்சுவர்களின் அடித்தளப்பகுதிகள் இன்னும் அடையாளச் சின்னங்கள் உள்ளது.

1942 ஆம் ஆண்டிற்கு முன்னர் இராமநாதபுரம் (சிவகங்கை அதாவது 1983 ஆம்  ஆண்டுக்குப் பின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம்) ஜில்லா திருப்பத்தூர் தாலுகாவில் ஆத்தங்குடி கிராமத்திலுள்ள சிவன் கோவிலில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சைவப்பிள்ளை  மணிவாசகம் என்ற மணிமுத்துப் புலவர் தமிழிசை  ஓதுவாராகப் பணிபுரிந்தாதார். சில காலம் கழித்து  வ.சூரக்குடி அருகிலுள்ள தோப்பூரணியில் தற்போது ஸ்ரீ வெள்ளை வேஷ்டி சித்தர் சுவாமிகள் ஆலயம் அமைந்துள்ள பகுதியிலுள்ள இடத்தை விலைக்கு வாங்கி அங்கேயே குடில் அமைத்துத் தங்கினார். பின் பூந்தோட்டம் அமைத்து தினசரி பூக்களைக் கட்டி அருகில் உள்ள சிவ ஆலயங்களுக்கு கொடுத்தும், தனது குடிலில் சிவனுக்கு பூஜைகள் செய்து வந்தார்கள்.

மணிவாசகம் அய்யா  சுற்றுவட்டார மக்களுக்கு சித்த வைத்தியம் மற்றும் இயற்கை வைத்தியம் செய்து நோய்களைக் குணப்படுத்தி வந்துள்ளார் அதனால் மக்களிடம் பிரசித்தமான நிலை அய்யா அவர்கள் தூய வெள்ளை வேஷ்டி எப்போதும் அணிந்திருந்ததால் வெள்ளை வேஷ்டி சித்தர் என்று அப்பகுதி மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார்.

சிவ வழிபாட்டிலும், பொதுத் தொண்டிலும் ஈடுபட்ட அய்யா மணிவாசகம் அவர்கள் 1947 ஆம் ஆண்டில் தற்போது கோயிலுள்ள இடத்திலேயே ஜீவசமாதியடைந்தார்கள்.

காரைக்குடி பர்மா காலனியில் வள்ளுவர் நகரில் குடியிருக்கும் வங்கியில் பணிசெய்து விருப்ப ஓய்விலிருக்கும் செல்லத்துரை கலா தம்பதியினர் 6.5.2007 அன்று ஆத்தங்குடியிலிருந்து காரைக்குடிக்கு குறுக்கு வழியில் தோப்பூரணி வழியாக வந்து கொண்டிருந்தபோது தோப்பூரணி குளக்கரையில்  பிள்ளையார் கோவில் ஆலமரத்தடியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க வ.சூரக்குடியைச் சேர்ந்த பெரியவர் ராமையா என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அந்த முதியவரை செல்லத்துரை-கலா தம்பதியினர் சந்தித்துப் பேசி கொண்டிருக்கும் போது தோப்பூரணியின் சம்பவங்களை அவர்களுக்கு கூறிவிட்டு என்னுடன் வாருங்கள் உங்களுக்கு ஓரு முக்கியமான இடத்திற்கு கூட்டிச்செல்கிறேன் என்று சொல்ல பக்கத்தில் புதர்களடர்ந்த  இடத்திற்கு கூட்டிச் சென்று இங்கே பாருங்கள் என்று அய்யா மணிவாசகம்   என்ற வெள்ளை வேஷ்டி சித்தர் அவர்களின் ஜீவ சமாதியைக் காட்டிய தும் கைகாட்டிய இடத்திலிருந்து 2 அடி உயரமுள்ள சிவலிங்கம் ஜோதி வடிவாக சிவா ரூபத்தில் அவர்களுக்கு காட்சியளித்த பகல் மணி 12.20 லிருந்து 12.40 க்குள் கோடை காலத்தில் ஜோதி வடிவத்திலிருந்து வந்த ஒளி இருவர் கண்களும் கூசும் அளவிற்கு சக்திவாய்ந்ததாக இருந்தது. இந்த நிகழ்ச்சி தம்பதியினர் இருவரையும் மெய்சிலிர்க்க வைத்து அவர்களை பேரானந்தத்தில் ஆழ்த்தியது. அவர்கள் ஜோதியை வழிபட்டு அதே நினைவுடன் வீடு திரும்பினர். அன்று இரவு முழுவதும் தம்பதியினருக்கு ஜோதி வடிவ ஒளி வந்துகொண்டே இருந்தது.

மறுபடியும் 3 நாட்கள் கழித்து தம்பதியினரை அந்த இடத்திற்கு செல்லும்படி ஒர் உள்ளுணர்வு தூண்ட தம்பதியினர் 10 ஜூலை 2007 அன்று தோப்பூரணி வந்தனர். ஜோதி வடிவம் தெரிந்த இடத்தைச் சுற்றி உள்ள முட்புதர்களை ஒரு பணியாளரை வைத்து சுத்தம் செய்தனர். 2 அடி உயரத்தில் காட்சியளித்த சிவலிங்கம் 3 இன்ச் அளவில் சிறிய சிவலிங்கமாகத் தெரிந்தது. சிவலிங்கத்திற்கு தம்பதினர் அபிஷேகம், பூஜை செய்து மஞ்சள்துண்டு கட்டியும் வழிபட்டார்கள். பின்னர் வ.சூரக்குடியின் அப்போதய ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களைச் சந்தித்து இவ்விபரங்களைச் சொல்லி அன்றுமுதல் ஸ்ரீ வெள்ளை வேஷ்டிச் சித்தர் சமாதியில் உள்ள சிவலிங்கத்திற்கு பூஜை புனஸ்காரங்களை இத்தம்பதியினர் செய்து வந்தார்கள்.

முதல் குரு பூஜை 11 நவம்பர் 2007 அன்று ஹோமம் செய்து அன்னதானத்துடன் சிறப்பாக நடத்தப்பட்டது. 2008,2009,2010 ஆம் ஆண்டுகளிலும் தொடர்ந்து குரு பூஜைகள் சித்தர் அய்யாவுக்கு சிறப்பாக நடத்தப்பட்டன.

ஓவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி அன்று இரவு முழு பூஜை, நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆன்மீக அன்பர்கள் உதவியுடன் மார்ச் 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை மதியம் அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

2010 ஆம் ஆண்டு முதல் பௌர்ணமி பூஜை பகலிலும் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பொதுமக்களுக்கு பகல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

2011 ஆம் ஆண்டு முதல் அமாவாசை நாளிலும் பகலிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

தினமும் காலை 8 மணிக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. காலையில் கறந்த பசும்பாலில அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் காலை 11 மணிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரம் அன்று குருபூஜைகள் மே மாதம் 6 ஆம் தேதியன்று வருஷாபிஷேகமும் ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் தரிசனம் செய்ய வருவதற்கு

திருச்சிராப்பள்ளி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடியிலிருந்து சுமார் 7 கி.மீ

தொலைவில் இடது புறத்தில் ஆலமரங்களுக்கிடையில் தோப்பூரணியில் ஸ்ரீ வெள்ளைவேஷ்டி சித்தர் ஆலயம் அமைந்துள்ளது.

பேருந்து வசதி: (காரைக்குடி பழைய பேருந்து நிலையம்) காரைக்குடி நேமத்தான்பட்டி செல்லும் GBS மற்றும் KRM மினி பேருந்துகள்அரைமணிநேரத்திற்கு ஒருமுறை வருகிறது வெள்ளை வேஷ்டி சித்தர கோவில் நிறுத்தமும் கூப்பிடும் தூரத்தில் அய்யாவின் ஆலயம் உன்டு  புதுக்கோட்டையிலிருந்து பள்ளத்தூர் கானாடுகாத்தான் வழியாக வரலாம்.

நினைத்த காரியங்களை முடித்துக்கொடுக்கும் ஸ்ரீ வெள்ளை வேஷ்டி சித்தர் சுவாமிகளை ஒருமுறை நேரில் தரிசித்து சித்தரின் அருளைப் பெற்று வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெறுக.

வெள்ளை வேஷ்டி சித்தர் சுவாமிகள் அறக்கட்டளை, சார்பில் ஆலய புனரமைப்பு நிர்மாணம் செய்து தற்போது குடமுழுக்கு விழாவுக்கு நாள் குறித்து  சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன                     நிர்வாக அறங்காவலர் சார்பில் தொடர்புக்கு தொலைபேசி: 919788105493                         ஸ்ரீ வெள்ளை வேட்டி சித்தர் அய்யா ஜீவ சமாதி பீட ஆலயம் அறநிலையம் அமைத்த ஆற்றல்மிகு அறங்காவலர் வாழ்க பல்லாண்டு! வளர்க தொண்டு! எனயியம்பி....

"பலப்ரதம் பூர்வ ஜென்மாதி பாக்யம் சகஸ்த்த ஆலய பரிபாலனம் புனர் நிர்மானம்  நித்ய சிந்திதம் ராஜ்ய வல்லபம்  அய்யா பணி முடிக்கும் அருட்செல்வரனதுரை செல்லத்துரை தம்பதி சமேத வாசினம் ஜெய விஜயிபவது சத சம்ஸரம்"

-- என அணைவரும் ஆலய புனரமைப்புக்கு ஆதரவுக் கரம் கொடுப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...