முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்று இந்திய பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள் தமிழக முதல்வர் வரவேற்பு


இன்று இந்திய பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்


‘தடுப்பூசிக்காக, எந்த மாநில அரசும்  எதுவும் செலவழிக்க வேண்டாம்.  நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்குமென பிரதமர் கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் இன்று மாலை ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

100 வருடங்களில் மிகவும் மோசமான பெருந்தொற்று இதுவாகும். ஆனால் இந்த நெருக்கடி காலத்தில் நமது நாடு ஒற்றுமையுடன் நின்றது.

மருத்துவமனைகளையும், புதிய சுகாதார உள்கட்டமைப்பையும் அதிகளவில் நாம் நிறுவியுள்ளோம்.

முழு உடல் கவச உடைகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாகட்டும், திரவ மருத்துவப் பிராணவாயுவின் உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டதாகட்டும். அனைத்தையும் நாம் மேற்கொண்டோம்.

மக்களுக்கு உதவ நமது பாதுகாப்பு படைகளை நாம் பயன்படுத்தினோம். அத்தியாவசிய மருந்து பொருட்களின் உற்பத்தி மிகக் குறைந்த காலத்தில் அதிகப்படுத்தப்பட்டது.

தடுப்பூசி மட்டும் தான் கொவிட் தொற்றுக்கு எதிரான ஒரே கேடயம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகளவில் உயிர்களைப் பாதுகாத்து வருகின்றன.

கொவிட் தொற்றுக்கு எதிரானத் தடுப்பூசியை இந்தியா உருவாக்கி இருக்காவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். கடந்த 50-60 ஆண்டுகால வரலாற்றை நோக்கினால், வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசியை இந்தியா பெறுவதற்கு ஒரு தசாப்தம் தேவைப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். தடுப்பூசியைத் தயாரிக்கும் பணி வெளிநாடுகளில் நிறைவடைவது வழக்கம்.

நமது தடுப்பூசித் திட்டத்தின் வேகத்தை அதிகரித்துள்ளோம். ஓராண்டு காலத்திற்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.

கொவிட் தடுப்பூசிகளின் சாத்தியக் கூறுகளை  விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவந்த போதே நமது தடுப்பூசியின் சேமிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்த நாம் தொடங்கிவிட்டோம்.

நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு காரணமாக, ஓராண்டுக்குள், இந்தியா ஒன்றல்ல, இரண்டு கொவிட் தடுப்பூசிகளை உருவாக்கியது.  23 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

கடினமாக உழைக்கும் நமது விஞ்ஞானிகளை நாம் நம்புகிறோம். மாபெரும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் போக்குவரத்து முக்கிய பங்காற்றியுள்ளது. தடுப்பூசியை உருவாக்கும் பணியில் இன்று 7 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மூன்று சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

நாசி வழியாக செலுத்தும் தடுப்பூசிகள் குறித்தும் நாம் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது பாதுகாப்பானதா என்பதை அறிவதற்கான சோதனைகளை நாம் தொடங்கி இருக்கிறோம். வைரசுக்கு எதிரான நாட்டின் போரில் இது பெருமளவு உதவும்.

நமது மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்கள் இரண்டாம் அலையில் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்கள். இரண்டாவது அலை உருவாவதற்கு முன்பே பெரும்பாலான மருத்துவப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.

தொற்றுக்கு எதிராக நமது முன்கள ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படவில்லையெனில் என்ன நிகழ்ந்திருக்கும் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?

ஜூன் 21-ல் இருந்து 18  மற்றும் அதற்கு மேல் உள்ள வயதினருக்கான இலவச தடுப்பு மருந்துகளை மாநிலங்களுக்கு இந்திய அரசு வழங்கும்.

25% சதவீத தடுப்பு மருந்துகளை தனியார் மருத்துவமனைகள் வாங்கிக் கொள்ளலாம். மாநில அரசுகள் வசம் இருந்த 25% தடுப்பூசி சம்பந்தமான பொறுப்புகள், இனி மத்திய அரசால் கவனிக்கப்படும் என்பதை பல்வேறு ஆலோசனைகளுக்குப்  பிறகு முடிவு செய்துள்ளோம்.

தடுப்பூசிக்காக, எந்த மாநில அரசும்  எதுவும் செலவழிக்க வேண்டாம்.  நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசி வழங்கும். நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசு இலவசமாக தடுப்பு மருந்தை வழங்கினாலும்,  கட்டணத்தை செலுத்த விரும்புவோர் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

பிரதமரின் ஏழைகள் நலன் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தீபாவளி வரை நாங்கள் நீட்டித்துள்ளோம். இத்திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி இந்தியர்கள் இலவச ரேஷன் பெறுவர்.

கொவிட் தடுப்பூசிகள் தொடர்பாக விழிப்புணர்வை பரப்பும்படி  மக்களை நான் வலியுறுத்துகிறேன். நாம் நமது பாதுகாப்பை கைவிட முடியாது. பெருந்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை. நமது மொத்த சக்தியையும் பயன்படுத்தி கொவிட்டுக்கு  எதிராக நாம் போராட வேண்டும். வைரசை நாம் கட்டாயம் வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

தடுப்பூசிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு, ஒரு டோசுக்கு ரூ. 150 ஐ அதிகபட்ச சேவை கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் விதிக்க முடியும். அதனை கண்காணிக்கும் பணி மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு பிரதமர்  கூறினார்.

அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வரவேற்பு

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதம் மத்திய அரசு கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று குறிக்கும் இந்தியப் பிரதமர் உரை அறிக்கையை நான் வரவேற்கிறேன். பிரதமரின் அரசாங்கத்தின் முந்தைய நிலைப்பாட்டை மாற்றியமைத்ததையும் நான் பாராட்டுகிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி உடல்நலம் என்பது ஒரு மாநிலப் பொருள் என்று தனது கருத்துக்களில் பல முறை வலியுறுத்தியுள்ளதால், தடுப்பூசிக்கான பதிவு, சரிபார்ப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் முழுமையான கட்டுப்பாடு வழங்கப்படுவது பொருத்தமானது. என தெரிவித்தார்.                        முன்பு பிரதமர் பேசியதற்கும் இப்போது பேசுவதிலும் நாம் காணுவது

முன்பு தடுப்பூசிகளை நாங்கள் சொல்லும் நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கணும்.என்பதில் ஒரு மாற்றம்.

மாநிலங்கள் சொந்த வருவாய் மூலம் தடுப்பூசி வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்றம்..

மாநிலங்கள் வெளிநாட்டு தடுப்பூசிகள் இறக்குமதி செய்யக் கூடாது என்ற கருத்து இப்போது மாற்றம்.

இன்று உரை மூலம்

மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசம் 

வெளிநாட்டு தடுப்பூசிகள் இறக்குமதி செய்யலாம்..

இதன் மூலம் 

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர்  காரணம் குறிப்பாக ஜிஎஸ்டி கவுன்ஸில் அவரது உரை ஒரு அகில இந்திய அளவில் பிரதிபலிக்கும் நிலை. மக்கள் விரும்புவது நடக்கும் போது ஆதரவு வரும்.

‘தடுப்பூசிக்காக, எந்த மாநில அரசும்  எதுவும் செலவழிக்க வேண்டாம்.  நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்குமென பிரதமர் கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் இன்று மாலை ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

100 வருடங்களில் மிகவும் மோசமான பெருந்தொற்று இதுவாகும். ஆனால் இந்த நெருக்கடி காலத்தில் நமது நாடு ஒற்றுமையுடன் நின்றது.

மருத்துவமனைகளையும், புதிய சுகாதார உள்கட்டமைப்பையும் அதிகளவில் நாம் நிறுவியுள்ளோம்.

முழு உடல் கவச உடைகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாகட்டும், திரவ மருத்துவப் பிராணவாயுவின் உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டதாகட்டும். அனைத்தையும் நாம் மேற்கொண்டோம்.

மக்களுக்கு உதவ நமது பாதுகாப்பு படைகளை நாம் பயன்படுத்தினோம். அத்தியாவசிய மருந்து பொருட்களின் உற்பத்தி மிகக் குறைந்த காலத்தில் அதிகப்படுத்தப்பட்டது.

தடுப்பூசி மட்டும் தான் கொவிட் தொற்றுக்கு எதிரான ஒரே கேடயம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகளவில் உயிர்களைப் பாதுகாத்து வருகின்றன.

கொவிட் தொற்றுக்கு எதிரானத் தடுப்பூசியை இந்தியா உருவாக்கி இருக்காவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். கடந்த 50-60 ஆண்டுகால வரலாற்றை நோக்கினால், வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசியை இந்தியா பெறுவதற்கு ஒரு தசாப்தம் தேவைப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். தடுப்பூசியைத் தயாரிக்கும் பணி வெளிநாடுகளில் நிறைவடைவது வழக்கம்.

நமது தடுப்பூசித் திட்டத்தின் வேகத்தை அதிகரித்துள்ளோம். ஓராண்டு காலத்திற்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.

கொவிட் தடுப்பூசிகளின் சாத்தியக் கூறுகளை  விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவந்த போதே நமது தடுப்பூசியின் சேமிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்த நாம் தொடங்கிவிட்டோம்.

நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு காரணமாக, ஓராண்டுக்குள், இந்தியா ஒன்றல்ல, இரண்டு கொவிட் தடுப்பூசிகளை உருவாக்கியது.  23 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

கடினமாக உழைக்கும் நமது விஞ்ஞானிகளை நாம் நம்புகிறோம். மாபெரும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் போக்குவரத்து முக்கிய பங்காற்றியுள்ளது. தடுப்பூசியை உருவாக்கும் பணியில் இன்று 7 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மூன்று சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

நாசி வழியாக செலுத்தும் தடுப்பூசிகள் குறித்தும் நாம் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது பாதுகாப்பானதா என்பதை அறிவதற்கான சோதனைகளை நாம் தொடங்கி இருக்கிறோம். வைரசுக்கு எதிரான நாட்டின் போரில் இது பெருமளவு உதவும்.


நமது மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்கள் இரண்டாம் அலையில் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்கள். இரண்டாவது அலை உருவாவதற்கு முன்பே பெரும்பாலான மருத்துவப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.


தொற்றுக்கு எதிராக நமது முன்கள ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படவில்லையெனில் என்ன நிகழ்ந்திருக்கும் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?


ஜூன் 21-ல் இருந்து 18  மற்றும் அதற்கு மேல் உள்ள வயதினருக்கான இலவச தடுப்பு மருந்துகளை மாநிலங்களுக்கு இந்திய அரசு வழங்கும்.

25% சதவீத தடுப்பு மருந்துகளை தனியார் மருத்துவமனைகள் வாங்கிக் கொள்ளலாம். மாநில அரசுகள் வசம் இருந்த 25% தடுப்பூசி சம்பந்தமான பொறுப்புகள், இனி மத்திய அரசால் கவனிக்கப்படும் என்பதை பல்வேறு ஆலோசனைகளுக்குப்  பிறகு முடிவு செய்துள்ளோம்.

தடுப்பூசிக்காக, எந்த மாநில அரசும்  எதுவும் செலவழிக்க வேண்டாம்.  நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசி வழங்கும். நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசு இலவசமாக தடுப்பு மருந்தை வழங்கினாலும்,  கட்டணத்தை செலுத்த விரும்புவோர் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.


பிரதமரின் ஏழைகள் நலன் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தீபாவளி வரை நாங்கள் நீட்டித்துள்ளோம். இத்திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி இந்தியர்கள் இலவச ரேஷன் பெறுவர்.

கொவிட் தடுப்பூசிகள் தொடர்பாக விழிப்புணர்வை பரப்பும்படி  மக்களை நான் வலியுறுத்துகிறேன். நாம் நமது பாதுகாப்பை கைவிட முடியாது. பெருந்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை. நமது மொத்த சக்தியையும் பயன்படுத்தி கொவிட்டுக்கு  எதிராக நாம் போராட வேண்டும். வைரசை நாம் கட்டாயம் வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

தடுப்பூசிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு, ஒரு டோசுக்கு ரூ. 150 ஐ அதிகபட்ச சேவை கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் விதிக்க முடியும். அதனை கண்காணிக்கும் பணி மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு பிரதமர்  கூறினார்.

அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வரவேற்பு

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதம் மத்திய அரசு கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று குறிக்கும் இந்தியப் பிரதமர் உரை அறிக்கையை நான் வரவேற்கிறேன். பிரதமரின் அரசாங்கத்தின் முந்தைய நிலைப்பாட்டை மாற்றியமைத்ததையும் நான் பாராட்டுகிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி உடல்நலம் என்பது ஒரு மாநிலப் பொருள் என்று தனது கருத்துக்களில் பல முறை வலியுறுத்தியுள்ளதால், தடுப்பூசிக்கான பதிவு, சரிபார்ப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் முழுமையான கட்டுப்பாடு வழங்கப்படுவது பொருத்தமானது. என தெரிவித்தார்.        முன்பு பிரதமர் பேசியதற்கும் இப்போது பேசுவதிலும் நாம் காணுவது

முன்பு தடுப்பூசிகளை நாங்கள் சொல்லும் நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கணும்.என்பதில் ஒரு மாற்றம்.

மாநிலங்கள் சொந்த வருவாய் மூலம் தடுப்பூசி வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்றம்..

மாநிலங்கள் வெளிநாட்டு தடுப்பூசிகள் இறக்குமதி செய்யக் கூடாது என்ற கருத்து இப்போது மாற்றம். இன்று உரை மூலம் மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசம். வெளிநாட்டு தடுப்பூசிகள் இறக்குமதி செய்யலாம்.. இதன் மூலம் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர்  காரணம் குறிப்பாக ஜிஎஸ்டி கவுன்ஸிலில் அவரது உரை ஒரு அகில இந்திய அளவில் பிரதிபலிக்கும் நிலை. மக்கள் விரும்புவது நடக்கும் போது ஆதரவு வரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த