முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்று இந்திய பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள் தமிழக முதல்வர் வரவேற்பு


இன்று இந்திய பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்


‘தடுப்பூசிக்காக, எந்த மாநில அரசும்  எதுவும் செலவழிக்க வேண்டாம்.  நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்குமென பிரதமர் கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் இன்று மாலை ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

100 வருடங்களில் மிகவும் மோசமான பெருந்தொற்று இதுவாகும். ஆனால் இந்த நெருக்கடி காலத்தில் நமது நாடு ஒற்றுமையுடன் நின்றது.

மருத்துவமனைகளையும், புதிய சுகாதார உள்கட்டமைப்பையும் அதிகளவில் நாம் நிறுவியுள்ளோம்.

முழு உடல் கவச உடைகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாகட்டும், திரவ மருத்துவப் பிராணவாயுவின் உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டதாகட்டும். அனைத்தையும் நாம் மேற்கொண்டோம்.

மக்களுக்கு உதவ நமது பாதுகாப்பு படைகளை நாம் பயன்படுத்தினோம். அத்தியாவசிய மருந்து பொருட்களின் உற்பத்தி மிகக் குறைந்த காலத்தில் அதிகப்படுத்தப்பட்டது.

தடுப்பூசி மட்டும் தான் கொவிட் தொற்றுக்கு எதிரான ஒரே கேடயம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகளவில் உயிர்களைப் பாதுகாத்து வருகின்றன.

கொவிட் தொற்றுக்கு எதிரானத் தடுப்பூசியை இந்தியா உருவாக்கி இருக்காவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். கடந்த 50-60 ஆண்டுகால வரலாற்றை நோக்கினால், வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசியை இந்தியா பெறுவதற்கு ஒரு தசாப்தம் தேவைப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். தடுப்பூசியைத் தயாரிக்கும் பணி வெளிநாடுகளில் நிறைவடைவது வழக்கம்.

நமது தடுப்பூசித் திட்டத்தின் வேகத்தை அதிகரித்துள்ளோம். ஓராண்டு காலத்திற்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.

கொவிட் தடுப்பூசிகளின் சாத்தியக் கூறுகளை  விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவந்த போதே நமது தடுப்பூசியின் சேமிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்த நாம் தொடங்கிவிட்டோம்.

நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு காரணமாக, ஓராண்டுக்குள், இந்தியா ஒன்றல்ல, இரண்டு கொவிட் தடுப்பூசிகளை உருவாக்கியது.  23 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

கடினமாக உழைக்கும் நமது விஞ்ஞானிகளை நாம் நம்புகிறோம். மாபெரும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் போக்குவரத்து முக்கிய பங்காற்றியுள்ளது. தடுப்பூசியை உருவாக்கும் பணியில் இன்று 7 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மூன்று சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

நாசி வழியாக செலுத்தும் தடுப்பூசிகள் குறித்தும் நாம் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது பாதுகாப்பானதா என்பதை அறிவதற்கான சோதனைகளை நாம் தொடங்கி இருக்கிறோம். வைரசுக்கு எதிரான நாட்டின் போரில் இது பெருமளவு உதவும்.

நமது மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்கள் இரண்டாம் அலையில் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்கள். இரண்டாவது அலை உருவாவதற்கு முன்பே பெரும்பாலான மருத்துவப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.

தொற்றுக்கு எதிராக நமது முன்கள ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படவில்லையெனில் என்ன நிகழ்ந்திருக்கும் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?

ஜூன் 21-ல் இருந்து 18  மற்றும் அதற்கு மேல் உள்ள வயதினருக்கான இலவச தடுப்பு மருந்துகளை மாநிலங்களுக்கு இந்திய அரசு வழங்கும்.

25% சதவீத தடுப்பு மருந்துகளை தனியார் மருத்துவமனைகள் வாங்கிக் கொள்ளலாம். மாநில அரசுகள் வசம் இருந்த 25% தடுப்பூசி சம்பந்தமான பொறுப்புகள், இனி மத்திய அரசால் கவனிக்கப்படும் என்பதை பல்வேறு ஆலோசனைகளுக்குப்  பிறகு முடிவு செய்துள்ளோம்.

தடுப்பூசிக்காக, எந்த மாநில அரசும்  எதுவும் செலவழிக்க வேண்டாம்.  நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசி வழங்கும். நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசு இலவசமாக தடுப்பு மருந்தை வழங்கினாலும்,  கட்டணத்தை செலுத்த விரும்புவோர் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

பிரதமரின் ஏழைகள் நலன் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தீபாவளி வரை நாங்கள் நீட்டித்துள்ளோம். இத்திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி இந்தியர்கள் இலவச ரேஷன் பெறுவர்.

கொவிட் தடுப்பூசிகள் தொடர்பாக விழிப்புணர்வை பரப்பும்படி  மக்களை நான் வலியுறுத்துகிறேன். நாம் நமது பாதுகாப்பை கைவிட முடியாது. பெருந்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை. நமது மொத்த சக்தியையும் பயன்படுத்தி கொவிட்டுக்கு  எதிராக நாம் போராட வேண்டும். வைரசை நாம் கட்டாயம் வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

தடுப்பூசிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு, ஒரு டோசுக்கு ரூ. 150 ஐ அதிகபட்ச சேவை கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் விதிக்க முடியும். அதனை கண்காணிக்கும் பணி மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு பிரதமர்  கூறினார்.

அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வரவேற்பு

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதம் மத்திய அரசு கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று குறிக்கும் இந்தியப் பிரதமர் உரை அறிக்கையை நான் வரவேற்கிறேன். பிரதமரின் அரசாங்கத்தின் முந்தைய நிலைப்பாட்டை மாற்றியமைத்ததையும் நான் பாராட்டுகிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி உடல்நலம் என்பது ஒரு மாநிலப் பொருள் என்று தனது கருத்துக்களில் பல முறை வலியுறுத்தியுள்ளதால், தடுப்பூசிக்கான பதிவு, சரிபார்ப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் முழுமையான கட்டுப்பாடு வழங்கப்படுவது பொருத்தமானது. என தெரிவித்தார்.                        முன்பு பிரதமர் பேசியதற்கும் இப்போது பேசுவதிலும் நாம் காணுவது

முன்பு தடுப்பூசிகளை நாங்கள் சொல்லும் நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கணும்.என்பதில் ஒரு மாற்றம்.

மாநிலங்கள் சொந்த வருவாய் மூலம் தடுப்பூசி வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்றம்..

மாநிலங்கள் வெளிநாட்டு தடுப்பூசிகள் இறக்குமதி செய்யக் கூடாது என்ற கருத்து இப்போது மாற்றம்.

இன்று உரை மூலம்

மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசம் 

வெளிநாட்டு தடுப்பூசிகள் இறக்குமதி செய்யலாம்..

இதன் மூலம் 

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர்  காரணம் குறிப்பாக ஜிஎஸ்டி கவுன்ஸில் அவரது உரை ஒரு அகில இந்திய அளவில் பிரதிபலிக்கும் நிலை. மக்கள் விரும்புவது நடக்கும் போது ஆதரவு வரும்.

‘தடுப்பூசிக்காக, எந்த மாநில அரசும்  எதுவும் செலவழிக்க வேண்டாம்.  நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்குமென பிரதமர் கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் இன்று மாலை ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

100 வருடங்களில் மிகவும் மோசமான பெருந்தொற்று இதுவாகும். ஆனால் இந்த நெருக்கடி காலத்தில் நமது நாடு ஒற்றுமையுடன் நின்றது.

மருத்துவமனைகளையும், புதிய சுகாதார உள்கட்டமைப்பையும் அதிகளவில் நாம் நிறுவியுள்ளோம்.

முழு உடல் கவச உடைகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாகட்டும், திரவ மருத்துவப் பிராணவாயுவின் உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டதாகட்டும். அனைத்தையும் நாம் மேற்கொண்டோம்.

மக்களுக்கு உதவ நமது பாதுகாப்பு படைகளை நாம் பயன்படுத்தினோம். அத்தியாவசிய மருந்து பொருட்களின் உற்பத்தி மிகக் குறைந்த காலத்தில் அதிகப்படுத்தப்பட்டது.

தடுப்பூசி மட்டும் தான் கொவிட் தொற்றுக்கு எதிரான ஒரே கேடயம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகளவில் உயிர்களைப் பாதுகாத்து வருகின்றன.

கொவிட் தொற்றுக்கு எதிரானத் தடுப்பூசியை இந்தியா உருவாக்கி இருக்காவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். கடந்த 50-60 ஆண்டுகால வரலாற்றை நோக்கினால், வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசியை இந்தியா பெறுவதற்கு ஒரு தசாப்தம் தேவைப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். தடுப்பூசியைத் தயாரிக்கும் பணி வெளிநாடுகளில் நிறைவடைவது வழக்கம்.

நமது தடுப்பூசித் திட்டத்தின் வேகத்தை அதிகரித்துள்ளோம். ஓராண்டு காலத்திற்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.

கொவிட் தடுப்பூசிகளின் சாத்தியக் கூறுகளை  விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவந்த போதே நமது தடுப்பூசியின் சேமிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்த நாம் தொடங்கிவிட்டோம்.

நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு காரணமாக, ஓராண்டுக்குள், இந்தியா ஒன்றல்ல, இரண்டு கொவிட் தடுப்பூசிகளை உருவாக்கியது.  23 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

கடினமாக உழைக்கும் நமது விஞ்ஞானிகளை நாம் நம்புகிறோம். மாபெரும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் போக்குவரத்து முக்கிய பங்காற்றியுள்ளது. தடுப்பூசியை உருவாக்கும் பணியில் இன்று 7 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மூன்று சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

நாசி வழியாக செலுத்தும் தடுப்பூசிகள் குறித்தும் நாம் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது பாதுகாப்பானதா என்பதை அறிவதற்கான சோதனைகளை நாம் தொடங்கி இருக்கிறோம். வைரசுக்கு எதிரான நாட்டின் போரில் இது பெருமளவு உதவும்.


நமது மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்கள் இரண்டாம் அலையில் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்கள். இரண்டாவது அலை உருவாவதற்கு முன்பே பெரும்பாலான மருத்துவப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.


தொற்றுக்கு எதிராக நமது முன்கள ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படவில்லையெனில் என்ன நிகழ்ந்திருக்கும் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?


ஜூன் 21-ல் இருந்து 18  மற்றும் அதற்கு மேல் உள்ள வயதினருக்கான இலவச தடுப்பு மருந்துகளை மாநிலங்களுக்கு இந்திய அரசு வழங்கும்.

25% சதவீத தடுப்பு மருந்துகளை தனியார் மருத்துவமனைகள் வாங்கிக் கொள்ளலாம். மாநில அரசுகள் வசம் இருந்த 25% தடுப்பூசி சம்பந்தமான பொறுப்புகள், இனி மத்திய அரசால் கவனிக்கப்படும் என்பதை பல்வேறு ஆலோசனைகளுக்குப்  பிறகு முடிவு செய்துள்ளோம்.

தடுப்பூசிக்காக, எந்த மாநில அரசும்  எதுவும் செலவழிக்க வேண்டாம்.  நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசி வழங்கும். நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசு இலவசமாக தடுப்பு மருந்தை வழங்கினாலும்,  கட்டணத்தை செலுத்த விரும்புவோர் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.


பிரதமரின் ஏழைகள் நலன் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தீபாவளி வரை நாங்கள் நீட்டித்துள்ளோம். இத்திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி இந்தியர்கள் இலவச ரேஷன் பெறுவர்.

கொவிட் தடுப்பூசிகள் தொடர்பாக விழிப்புணர்வை பரப்பும்படி  மக்களை நான் வலியுறுத்துகிறேன். நாம் நமது பாதுகாப்பை கைவிட முடியாது. பெருந்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை. நமது மொத்த சக்தியையும் பயன்படுத்தி கொவிட்டுக்கு  எதிராக நாம் போராட வேண்டும். வைரசை நாம் கட்டாயம் வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

தடுப்பூசிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு, ஒரு டோசுக்கு ரூ. 150 ஐ அதிகபட்ச சேவை கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் விதிக்க முடியும். அதனை கண்காணிக்கும் பணி மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு பிரதமர்  கூறினார்.

அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வரவேற்பு

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதம் மத்திய அரசு கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று குறிக்கும் இந்தியப் பிரதமர் உரை அறிக்கையை நான் வரவேற்கிறேன். பிரதமரின் அரசாங்கத்தின் முந்தைய நிலைப்பாட்டை மாற்றியமைத்ததையும் நான் பாராட்டுகிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி உடல்நலம் என்பது ஒரு மாநிலப் பொருள் என்று தனது கருத்துக்களில் பல முறை வலியுறுத்தியுள்ளதால், தடுப்பூசிக்கான பதிவு, சரிபார்ப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் முழுமையான கட்டுப்பாடு வழங்கப்படுவது பொருத்தமானது. என தெரிவித்தார்.        முன்பு பிரதமர் பேசியதற்கும் இப்போது பேசுவதிலும் நாம் காணுவது

முன்பு தடுப்பூசிகளை நாங்கள் சொல்லும் நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கணும்.என்பதில் ஒரு மாற்றம்.

மாநிலங்கள் சொந்த வருவாய் மூலம் தடுப்பூசி வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்றம்..

மாநிலங்கள் வெளிநாட்டு தடுப்பூசிகள் இறக்குமதி செய்யக் கூடாது என்ற கருத்து இப்போது மாற்றம். இன்று உரை மூலம் மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசம். வெளிநாட்டு தடுப்பூசிகள் இறக்குமதி செய்யலாம்.. இதன் மூலம் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர்  காரணம் குறிப்பாக ஜிஎஸ்டி கவுன்ஸிலில் அவரது உரை ஒரு அகில இந்திய அளவில் பிரதிபலிக்கும் நிலை. மக்கள் விரும்புவது நடக்கும் போது ஆதரவு வரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...