முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் 50,484 வழக்குகள் நிறைவு: மக்களவையில் தகவல்i

 பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்





போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் 50,484 வழக்குகள் நிறைவு: மக்களவையில் தகவல்i

போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் மூலம்,  2021 மே மாதம் வரை  நிலுவையில் இருந்த 50,484 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாக  மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.


அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

இளம் வயதினர் இடையே தற்கொலை எண்ணிக்கை:


தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் படி 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் வாரியாக  14 முதல் 18 வயதினர் மற்றும் 18 முதல் 30 வயதினர் இடையே தற்கொலை எண்ணிக்கை இணைப்பு -1-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இதே ஆண்டுகளில்,  இதே வயதுப் பிரிவினரில் காரணம் மற்றும் பாலின அடிப்படையிலான தற்கொலை எண்ணிக்கை இணைப்பு-2-ல் கொடுக்கப்பட்டுள்ளது.


மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையங்கள்:

மாநில வாரியாக, உருவாக்கப்பட்ட மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையங்கள், தற்போது செயல்பாட்டில் உள்ளவை, குழந்தை பாதுகாப்பு சேவை திட்டத்தின் கீழ் உதவி அளிக்கப்படுபவை போன்ற விவரங்கள் இணைப்பு -1-ல் உள்ளன.   கடந்தாண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்பட்ட நிதி விவரங்கள் இணைப்பு-2-ல் உள்ளன.


குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம்

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அளித்த தகவல் படி, கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் முதல் கடந்த மே 28ம் தேதி வரை பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் விவரம் இணைப்பு ஒன்றில் உள்ளது.

கடந்த நிதியாண்டில், முந்தைய ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்  கீழ் வழங்கப்பட்ட நிதி விவரங்கள் இணைப்பு-2-ல் உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவ பிரதமரின் நலநிதி திட்டத்தை மாண்பு மிகு பிரதமர் அறிவித்துள்ளார். இத்திட்டம் குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு உதவுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்படும். இதை  23 வயது வரை எடுக்க முடியாது. ஆனால் 18 வயதிலிருந்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு படிக்கும் காலத்தில் தனிப்பட்ட தேவைக்கு மாதாந்திர உதவித் தொகை பெற  இந்த தொகுப்பு நிதி பயன்படுத்தப்படும். 23 வயதில் முழுப் பணத்தை பெறலாம்.  இத்திட்டம் குறித்து  pmcaresforchildren.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

ஆதரவற்ற குழந்தைகள் :

நாட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்காக சிறுவர் நீதி (குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 (ஜேஜே சட்டம்) உள்ளது.  இச்சட்டம் ஆதரவற்ற குழந்தைகளின் நலனை உறுதி செய்கிறது. சிக்கலான சூழலில் உள்ள குழந்தைகளுக்கு உதவ, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவையின் கீழ் குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது.  இந்த சட்டத்தையும், திட்டத்தையும் அமல்படுத்த வேண்டிய பொறுப்பு மாநிலங்களைச் சார்ந்தது. குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை உள்ளடக்கிய ‘‘வத்சல்யா திட்டம்’’ 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டது.

குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள்:

குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டத்தின் கீழ் மாநிலம் / யூனியன் பிரதேசம் வாரியாக உள்ள மொத்த குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் அங்கு இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை விவரம் ஆகியவை இணைப்பு -1-ல் உள்ளது.

ஊட்டச்சத்து மறுவாழ்வு :


நாட்டில் இருந்து ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க போஷன் திட்டம் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் 6 வயது குழந்தைகள்,  இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின்  ஊட்டச்சத்து நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பு இணைப்பு-1-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ் துணை ஊட்டச்சத்து திட்டம்:


தர உறுதி, பணி, பொறுப்பாளர்களின் பங்குகள் மற்றும் பொறுப்புகள், தரவு  மேலாண்மை, வெளிப்படைத் தன்மைக்கான போஷன் கண்காணிப்பு, துணை ஊட்டச்சத்து விநியோகத்தில் செயல்திறன் மற்றும் பொறுப்பு ஆகியவற்றுக்கான வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்களுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கியுள்ளது. இதன்படி கொள்முதலுக்ககான வெளிப்படையான நடைமுறையை மாநிலங்கள் அறிமுகம் செய்ய வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வகுத்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.

போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள்:

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (The Protection of Children from Sexual Offences (POCSO) Act,) போஸ்கோ சட்டம் 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.  விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.  இச்சட்டத்தின்படி, சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்த 30 நாட்களுக்குள், குழந்தையின் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும். இதன் விசாரணையை சிறப்பு நீதிமன்றம் கூடிய விரைவில்  அல்லது ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் வகையில் இச்சட்டம் 2019 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.


மத்திய அரசின் திட்டம் மூலம், 389 பிரத்தியேக போஸ்கோ நீதிமன்றங்கள் உட்பட,  1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை நீதித்துறை அமல்படுத்தியது. நீதித்துறை தெரிவித்த தகவல்படி, 640 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள், 338 போஸ்கோ நீதிமன்றங்கள் 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டில் உள்ளன. இவை 2021 மே மாதம் வரை  நிலுவையில் இருந்த 50,484 வழக்குகளை முடித்துள்ளன.

வளர்ப்பு பராமரிப்பு மற்றும் நிதியுதவி :

சிறுவர் நீதி சட்டத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து அமல்படுத்தப்படுகிறது.  இத்திட்டத்தின் விதிமுறைகள் படி, நிறுவனம் சாரா குழந்தை பராமரிப்புக்காக ஒரு குழந்தைக்கு மாதத்தோறும் ரூ.2000/- அளிக்கப்படுகிறது. ஒரு மாவட்டத்துக்கு ரூ.10 லட்சம் வரை இந்த நிதியளிக்கப்படுகிறது.

கொவிட் பாதிப்பு குழந்தைகளுக்கு பாதுகாப்பு:

கொரோனோவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கு சிறார் நீதி சட்ட விதிமுறைகள் படி உடனடி நடவடிக்கை எடுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இளம் பெண்கள் இடையே மாதவிலக்கு சுகாதாரம்:

மாதவிடாய் சுகாதார முறைகளை மேம்படுத்த பல அமைச்சகங்களின் மூலமாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  ராஷ்ட்ரிய கிஷோர் ஸ்வஸ்த்யா கார்யகிரம் திட்டத்தின் கீழ் 10 வயது முதல் 19 வயது இளம் பெண்கள் இடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் மருந்தக துறை,  சுவிதா நேப்கின்களை  ரூ.1க்கு, நாடு முழுவதும் உள்ள பிரதமரின் மக்கள் மருந்தகம் மூலம் விற்பனை செய்கிறது. 

அங்கன்வாடி மையங்கள்:

அங்கன்வாடி மையங்களின் செயல்பாட்டை வலுப்படுத்த மத்திய அரசு 4 அடுக்கு கண்காணிப்பு முறையை உருவாக்கியுள்ளது. மாநில வாரியாக உள்ள அங்கன்வாடி மையங்கள், அவற்றுக்கு வழங்கப்பட்ட நிதி விவரங்கள் இணைப்பு 1 மற்றும் 2-ல் உள்ளன.

போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குகள் :

தேசிய குற்ற ஆவண காப்பகம் வழங்கிய தகவல் படி,  மாநிலங்கள் / யூனியன் பிரதேச வாரியாக உள்ள போஸ்கோ சட்ட வழக்குகள், குற்றப் பத்திரிக்கைகள், தண்டனை அளிக்கப்பட்ட வழக்குகள், தண்டிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விவரங்கள்  இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த