முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐந்து தென்னிந்திய மாநிலங்களில்.யுனிசெஃப்புடன் இணைந்து மத்திய சுகாதார அமைச்சகம் நடத்திய அலுவலர்களுக்கான ஆன்லைன் பயிலரங்கு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பத்திரிகை தகவல் அலுவலகம், களவிளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு அலுவலகம், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, தேசிய சுகாதார இயக்கம் ஆகியவற்றின் அலுவலர்களுக்கான ஆன்லைன் பயிலரங்கை மத்திய சுகாதார அமைச்சகம் நடத்தியது



பத்திரிகை தகவல் அலுவலகம், களவிளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு அலுவலகம், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, அகில இந்திய வானொலி செய்திகள், மாநில நோய் தடுப்பு அலுவலர்கள் மற்றும் ஐந்து தென்னிந்திய மாநிலங்களில் (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா) இருந்து தேசிய சுகாதார இயக்கத்தின் தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு பிரிவு ஆகியவற்றின் அலுவலர்களுக்கான ஆன்லைன் பயிலரங்கை யுனிசெஃப்புடன் இணைந்து மத்திய சுகாதார அமைச்சகம் நடத்தியது. சரியான கொவிட் நடத்தை விதிமுறை குறித்த தகவல்களை வலியுறுத்துவதற்காகவும், தடுப்புமருந்து செலுத்திக்கொள்வதை ஊக்குவிப்பதற்கும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து 150-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்ட அமர்வுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு லாவ் அகர்வால் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தகவல் தொடர்பு திட்டமிடுதலில் புதுமையை புகுத்துமாறும், சரியான கொவிட் நடத்தை விதிமுறை குறித்த சமூக பொறுப்பை ஊக்குவிக்குமாறும், தடுப்புமருந்து தயக்கத்தை போக்குவதற்காக அவை குறித்த தவறான தகவல்களை முறியடிக்குமாறும் அலுவலர்களை கேட்டுக்கொண்டார். 

சரியான கொவிட் நடத்தை விதிமுறை குறித்த மக்கள் இயக்கத்தை உருவாக்குமாறும், சமுதாய உதாரணங்களை முன்னிறுத்தியும், கொவிட் வீரர்கள் மற்றும் முன்கள சுகாதாரப் பணியாளர்களின் ஊக்கமளிக்கும் கதைகளை மக்களுக்கு எடுத்து சென்றும், சிறப்பான சமூக பங்களிப்பின் மூலம் உலகின் மிகப்பெரிய தடுப்புமருந்து நிகழ்வுக்கு ஆதரவளிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

தடுப்புமருந்து தயக்கத்தை எதிர்கொள்வதில் பத்திரிகை தகவல் அலுவலகம், தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் ஆக்கப்பூர்வ பங்களிப்பு குறித்து பேசிய அவர், தகவல்கள், காணொலிகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை பத்திரிகை தகவல் அலுவலகம் சரிபார்ப்பதால், தவறான தகவல்கள் தடுக்கப்பட்டு, சரியான தகவல்கள் சரியான நேரத்தில் மக்களை சென்றடைவதாகவும் அவர் கூறினார். தடுப்புமருந்து பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக உள்ளூர் கலாச்சார விஷயங்களை சரியான முறையில் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி பயன்படுத்தி வருவதாக திரு அகர்வால் தெரிவித்தார்.

பொய் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் அதிகளவில் சமூக ஊடகங்களில் உலா வருவதால், சர்வதேச உண்மை சரிபார்த்தல் குழுமத்துடன் இணைந்து 80-க்கும் மேற்பட்ட உண்மை சரிபார்ப்பு செயலிகளுடன் பயனர்களை இணைக்கும் வாட்ஸ் அப் சாட்பாட், தவறான தகவல்களை அடையாளப்படுத்தும் டிவிட்டர் மற்றும் முகநூல் எச்சரிக்கை அமைப்பு ஆகியவை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் அலுவலர்களை அவர் கேட்டுக்கொண்டார். 

தடுப்புமருந்து தயக்கத்தை போக்குவதிலும், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை முறியடிப்பதிலும் ஊடகங்களில் ஆக்கப்பூர்வ பங்கை அங்கீகரித்த அவர், “மக்கள் சோர்வுறலாம், வைரஸ் சோர்வடையாது. நாமும் தொடர்ந்து பணியாற்றி, கொவிட்டுக்கு எதிரான நமது ஒருங்கிணைந்த போரை வலுப்படுத்த வேண்டும்,” என்று திரு அகர்வால் கேட்டுக்கொண்டார்.

ஊடகங்கள் மற்றும் ஊடகத்தினருடன் தொடர்புடைய அனைவருமே சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்றும், சரியான கொவிட் நடத்தை விதிமுறை மற்றும் தடுப்புமருந்து குறித்து மக்களுக்கு அவர்கள் ஊக்கமளிக்கலாம் என்றும் திரு அகர்வால் குறிப்பிட்டார். “மூன்றாவது அலை எப்போது வரும் என்று நம்மிடம் அடிக்கடி கேட்கிறார்கள். நாம் அனுமதிக்கும் போது அது வரும் என்பதே எனது பதில்,” என்று அவர் கூறினார்.

பெருந்தொற்றால் ஏற்படும் மன நல சிக்கல்கள் குறித்த நிகழ்ச்சிகள் மற்றும் தகவல்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தங்களது அனுபவங்கள், மாநிலங்களில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள், சவால்கள், புதுமையான பிரச்சார யோசனைகளை பயிலரங்கில் பங்கேற்றோர் பகிர்ந்து கொண்டனர். மத்திய சுகாதார அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் மற்றும் யுனிசெஃப் பிரதிநிதிகள் இதில்  கலந்துக் கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த