முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐந்து தென்னிந்திய மாநிலங்களில்.யுனிசெஃப்புடன் இணைந்து மத்திய சுகாதார அமைச்சகம் நடத்திய அலுவலர்களுக்கான ஆன்லைன் பயிலரங்கு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பத்திரிகை தகவல் அலுவலகம், களவிளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு அலுவலகம், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, தேசிய சுகாதார இயக்கம் ஆகியவற்றின் அலுவலர்களுக்கான ஆன்லைன் பயிலரங்கை மத்திய சுகாதார அமைச்சகம் நடத்தியது



பத்திரிகை தகவல் அலுவலகம், களவிளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு அலுவலகம், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, அகில இந்திய வானொலி செய்திகள், மாநில நோய் தடுப்பு அலுவலர்கள் மற்றும் ஐந்து தென்னிந்திய மாநிலங்களில் (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா) இருந்து தேசிய சுகாதார இயக்கத்தின் தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு பிரிவு ஆகியவற்றின் அலுவலர்களுக்கான ஆன்லைன் பயிலரங்கை யுனிசெஃப்புடன் இணைந்து மத்திய சுகாதார அமைச்சகம் நடத்தியது. சரியான கொவிட் நடத்தை விதிமுறை குறித்த தகவல்களை வலியுறுத்துவதற்காகவும், தடுப்புமருந்து செலுத்திக்கொள்வதை ஊக்குவிப்பதற்கும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து 150-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்ட அமர்வுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு லாவ் அகர்வால் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தகவல் தொடர்பு திட்டமிடுதலில் புதுமையை புகுத்துமாறும், சரியான கொவிட் நடத்தை விதிமுறை குறித்த சமூக பொறுப்பை ஊக்குவிக்குமாறும், தடுப்புமருந்து தயக்கத்தை போக்குவதற்காக அவை குறித்த தவறான தகவல்களை முறியடிக்குமாறும் அலுவலர்களை கேட்டுக்கொண்டார். 

சரியான கொவிட் நடத்தை விதிமுறை குறித்த மக்கள் இயக்கத்தை உருவாக்குமாறும், சமுதாய உதாரணங்களை முன்னிறுத்தியும், கொவிட் வீரர்கள் மற்றும் முன்கள சுகாதாரப் பணியாளர்களின் ஊக்கமளிக்கும் கதைகளை மக்களுக்கு எடுத்து சென்றும், சிறப்பான சமூக பங்களிப்பின் மூலம் உலகின் மிகப்பெரிய தடுப்புமருந்து நிகழ்வுக்கு ஆதரவளிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

தடுப்புமருந்து தயக்கத்தை எதிர்கொள்வதில் பத்திரிகை தகவல் அலுவலகம், தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் ஆக்கப்பூர்வ பங்களிப்பு குறித்து பேசிய அவர், தகவல்கள், காணொலிகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை பத்திரிகை தகவல் அலுவலகம் சரிபார்ப்பதால், தவறான தகவல்கள் தடுக்கப்பட்டு, சரியான தகவல்கள் சரியான நேரத்தில் மக்களை சென்றடைவதாகவும் அவர் கூறினார். தடுப்புமருந்து பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக உள்ளூர் கலாச்சார விஷயங்களை சரியான முறையில் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி பயன்படுத்தி வருவதாக திரு அகர்வால் தெரிவித்தார்.

பொய் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் அதிகளவில் சமூக ஊடகங்களில் உலா வருவதால், சர்வதேச உண்மை சரிபார்த்தல் குழுமத்துடன் இணைந்து 80-க்கும் மேற்பட்ட உண்மை சரிபார்ப்பு செயலிகளுடன் பயனர்களை இணைக்கும் வாட்ஸ் அப் சாட்பாட், தவறான தகவல்களை அடையாளப்படுத்தும் டிவிட்டர் மற்றும் முகநூல் எச்சரிக்கை அமைப்பு ஆகியவை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் அலுவலர்களை அவர் கேட்டுக்கொண்டார். 

தடுப்புமருந்து தயக்கத்தை போக்குவதிலும், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை முறியடிப்பதிலும் ஊடகங்களில் ஆக்கப்பூர்வ பங்கை அங்கீகரித்த அவர், “மக்கள் சோர்வுறலாம், வைரஸ் சோர்வடையாது. நாமும் தொடர்ந்து பணியாற்றி, கொவிட்டுக்கு எதிரான நமது ஒருங்கிணைந்த போரை வலுப்படுத்த வேண்டும்,” என்று திரு அகர்வால் கேட்டுக்கொண்டார்.

ஊடகங்கள் மற்றும் ஊடகத்தினருடன் தொடர்புடைய அனைவருமே சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்றும், சரியான கொவிட் நடத்தை விதிமுறை மற்றும் தடுப்புமருந்து குறித்து மக்களுக்கு அவர்கள் ஊக்கமளிக்கலாம் என்றும் திரு அகர்வால் குறிப்பிட்டார். “மூன்றாவது அலை எப்போது வரும் என்று நம்மிடம் அடிக்கடி கேட்கிறார்கள். நாம் அனுமதிக்கும் போது அது வரும் என்பதே எனது பதில்,” என்று அவர் கூறினார்.

பெருந்தொற்றால் ஏற்படும் மன நல சிக்கல்கள் குறித்த நிகழ்ச்சிகள் மற்றும் தகவல்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தங்களது அனுபவங்கள், மாநிலங்களில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள், சவால்கள், புதுமையான பிரச்சார யோசனைகளை பயிலரங்கில் பங்கேற்றோர் பகிர்ந்து கொண்டனர். மத்திய சுகாதார அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் மற்றும் யுனிசெஃப் பிரதிநிதிகள் இதில்  கலந்துக் கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...