முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல நாடுகளில் ஆயுஷ் மருந்துகள் பிரபலம்: மத்திய அமைச்சர் தகவல்

ஆயுஷ்  பல நாடுகளில் ஆயுஷ் மருந்துகள் பிரபலம்: மத்திய அமைச்சர் தகவல்








பல நாடுகளில் ஆயுஷ் மருந்துகள் பிரபலமடைந்துள்ளதாக  ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால்  கூறியுள்ளார்.

அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

சுகாதாரம், உடல்தகுதி மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. ஆயுர்வேதம், யோகா போன்றவற்றுக்கான தேவை, சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.  நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,  ஓமன், சவுதி அரேபியா, பஹ்ரைன், மலேசியா, மொரிஷியஸ், ஹங்கேரி, செர்பியா, தான்சானியா, சுவிட்சர்லாந்து, கியூபா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ஆயுர்வேதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ருமேனியா, ஹங்கேரி, லத்வியா, செர்பியா மற்றும் ஸ்லோவேனியாவில் ஆயுர்வேத மருத்துவ முறை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.  வங்கதேசம்,  இலங்கை, மலேசியா, பாகிஸ்தான், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  மற்றும் தான்சானியாவில் யுனானி முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மலேசியாவில் சித்தா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சோவா ரிக்பா மருத்துவ முறை, பூட்டான் மற்றும் மங்கோலியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம்,  பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,  ரஷ்யா மற்றும் தான்சானியாவில் ஹோமியோபதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கானா, சிலி, கொலம்பியா, ருமேனியா, துருக்கி, கனடா ஆகிய நாடுகளிலும் இது ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  ஆயுஷ் மருந்துகள், 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

ஆயுர்வேத மருந்துகளின் தரப்படுத்தல்:

ஆயுர்வேத, சித்தா மற்றும் யுனானி அதிகாரப்பூர்வ விதிமுறை மற்றும் ஒழுங்குமுறை தொகுப்புகளை வெளியிடுவதற்கும், மாற்றியமைப்பதற்கும்  மருந்தியல் ஆணையம் பொறுப்பாகும்.  நாட்டில் ஆயுர்வேத மருந்துகளின் தரப்படுத்தலுக்காக, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையத்தை அரசு நிறுவியுள்ளது. இந்திய ஆயுர்வேத மருந்தகம்  (API), இந்திய சித்த மருந்தகம் (SPI), யுனானி மருந்தகம் (UPI) மற்றும் இந்திய ஹோமியோபதி மருத்தகம்  (HPI) ஆகியவற்றை வெளியிடுவதும், மாற்றியமைப்பதும்  ஆணையத்தின் முதன்மைப் பணி. ஆயுர்வேத, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை, உறுதிப்படுத்த மருந்தியல் தரநிலைகள் அடிப்படை தேவை.

சமீபத்திய ஆண்டுகளில் பாரம்பரிய மருத்துவமுறை அதிகரிப்பு:

ஆயுர்வேத மருந்து வசதிகளை, மக்கள் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது. ஆயுர்வேதாவை ஊக்குவிக்கும் பல திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.  நாட்டின் பல பகுதிகளில் 5 ஆயுர்வேத தேசிய மையங்கள், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ளன. அவை தரமான ஆயுர்வேத மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.

கொரோனா தொற்று பரவல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:

கொவிட்-19 சிகிச்சையில் ஆயுஷ் மருத்துவ முறைகளின் பங்கு குறித்து, பல வித ஆய்வுகளை ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மையங்கள் மற்றும் ஆராய்ச்சி கவுன்சில்கள் நடத்தின.

கொவிட்-19 சிகிச்சைக்கு ஆயுஷ்-64 மற்றும் கபசுர குடிநீர் ஆகியவை அடையாளம் காணப்பட்டன. மிதமான கொவிட் பாதிப்புக்கு, ஆயுஷ்-64 மருந்தின் திறன் மருத்துவ பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டது. சித்தா தயாரிப்பான கபசுர குடிநீர், கொவிட்-19 சிசிகச்சைக்கான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மிதமான கொவிட் பாதிப்பு சிகிச்சைக்கு கபசுர குடிநீர் பயனுள்ளதாக இருந்தது கண்டறியப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.