நிலக்கரி அமைச்சகம் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிலக்கரி எடுப்பது அதிகரிப்பு
2020-2021 நிதியாண்டின் கடைசி காலாண்டில் நாட்டில் நிலக்கரி சுரங்கங்களிலிருந்து மின்சார உற்பத்திக்காக நிலக்கரி எடுப்பது அதற்கு முந்தைய மூன்று காலாண்டுகளை விட அதிகரித்துள்ளது. கடந்த 2020-2021 நிதியாண்டின் நான்கு காலாண்டில் நாட்டில் நிலக்கரி எடுத்து வரப்பட்ட விபரம் பின்வருமாறு-
ஏப்ரல்- ஜூன் 144.343
ஜூலை- செப்டம்பர் 158.466
அக்டோபர்- டிசம்பர் 186.821
ஜனவரி- மார்ச் 201.258
இவை அனைத்து மில்லியன் டன்களில் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) தகவல்படி, 2020-2021 நிதியாண்டில் நிலக்கரி சார்ந்த மின்சார உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும், 2021-2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிலக்கரி சார்ந்த மின்சார உற்பத்தி கடந்தாண்டு அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 29 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இந்த தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு.பிரஹலாத் ஜோஷி இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்