முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்திய அமைச்சரவை மாலை 6 மணிக்கு விரிவாக்கம்: 43 பேர் பதவியேற்றனர்

மத்திய அமைச்சரவை மாலை 6 மணிக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது: 43 பேர்



பதவியேற்றனர் 












மத்திய அமைச்சரவை இன்று மாலை 6 மணிக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சர்களாக மொத்தம் 43 பேர் பதவியேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி


தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர், மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படவில்லை. முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. அதில் தமிழகத்தின் சார்பில் மாநில தலைவர் எல்.முருகன் அமைச்சரானார்.

இதுதொடர்பாக கடந்த நாட்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பாஜக நிர்வாகிகளுடன் இறுதிக் கட்ட ஆலோசனை நடத்தினர். அமைச்சர்கள் பதவியேற்க ஏற்பாடுகளும் நடந்த நிகழ்வில்.

பதிய அமைச்சரவையில் 13 பேர் வழக்கறிஞர்கள், ஆறு மருத்துவர்கள், இந்தியக் குடிமைப் பணியிலிருந்த ஏழு பேர், உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இது மட்டுமின்றி ஏற்கனவே மத்திய இணை அமைச்சர்களாக உள்ள ஏழு பேர் கேபினேட் அமைச்சர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தற்போது உள் துறை இணை அமைச்சராக உள்ள கிஷன் ரெட்டி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் தற்போது 28 காலி இடங்கள் இருக்கிறது. தற்போது அமைச்சரவையில் பிரதமர் மோடியைத் தவிர்த்து 21 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்களும் உள்ளனர்.

மத்திய அமைச்சர்களாக இருக்கும் சிலர் தங்கள் உடல்நிலையை காரணமாக பதவி விலக விரும்பியவர் ராஜினாமா குடியரசு தலைவர் ஏற்றார். புதிய அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பாக அவர்கள் பதவி விலகியுள்ளனர்.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனும் ராஜினாமா செய்துள்ளார்.

அவர்கள் நிர்வகித்து வந்த துறைகளுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதுமட்டுமல்லாமல் சில மத்திய அமைச்சர்கள் மாற்றப்பட்டு அந்த இடங்களுக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர்.குடியரசுத் தலைவர் செயலகம் பிரதமரின் அறிவுரையை ஏற்று, கீழ்காணும் அமைச்சர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக் கொண்டார் 

             1.     திரு டி வி சதானந்த கவுடா

             2.     திரு ரவி சங்கர் பிரசாத்

             3.     திரு தாவர் சந்த் கெலோட்

             4.     திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்'

             5.     டாக்டர் ஹர்ஷ் வர்தன்

             6.     திரு பிரகாஷ் ஜவடேகர்

             7.     திரு சந்தோஷ் குமார் கங்குவார்

             8.     திரு பாபுல் சுப்ரியோ

             9.     திரு தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ்

           10.    திரு ரத்தன்லால் கட்டாரியா

           11.    திரு பிரதாப் சந்திர சாரங்கி

           12.    சுஷ்ரி தேபஶ்ரீ சௌந்தர்                       

இது குடியரசுத் தலைவர் செயலகம் தகவல

மொத்தம் 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் பலர் புதுமுகங்களாகும்.  இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் 4 பேர், முன்னாள் மாநில அமைச்சர்கள் 18 பேர், வழக்கறிஞர்கள் 13 பேர், மருத்துவர்கள் 6 பேர், இன்ஜினியர்கள் 5 பேர், முன்னாள் அரசு அதிகாரிகள் 7 பேர் இடம் பெற்றுள்ளார்கள். அதன் விபரம்:





புதிய அமைச்சர்களின் பட்டியலாகும்.

தமிழ்நாட்டின் எல். முருகனை அமைச்சராக்கியதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சொல்லும் செய்தி தெளிவானது.  இது நாள் வரை அதிகாரம் கிடைக்காத சமூகங்களுக்கு பதவிகளைத் தருவதன் மூலமும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலமும் பாரதிய ஜனதாவின் வாக்கு வங்கியை உறுதி செய்வது ஒரு முதன்மை உத்தி.  0.பன்னீர் செல்வத்தின் மகனுக்கு பதவியை மறுத்திருப்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு சிறந்த செய்தி சொல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 

பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன், வி.பி. துரைசாமி ஆகியோருக்கு கட்சி, ஆட்சிகளில் பொறுப்பு தருவதன் மூலம் தனது இலக்கை நோக்கி பிஜேபி மெல்ல முன்னேறுவதைப் போன்றே தோன்றுகிறது.  இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அவர்கள் செய்த இந்த உத்தி கை கொடுத்திருக்கிறது. 
இன்னமும் சமூக நீதியை கொள்கை அளவில் மட்டுமே பேசிக்கொண்டு, அதிகாரத்தை பகிர்ந்தளிக்காமல் ஆற்றிக் கொண்டிருந்தால் நிலைமை ஒரு நாள் எல்லை மீறிப் போக வாய்ப்பு இருக்கிறது. 

அருந்ததியர் இட ஒதுக்கீடு பற்றி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் எல். முருகன் அமைச்சராகி இருக்கிறார். அதிமுகவை எம் ஜி ஆர் உருவாக்கி அதில் அதிக அளவில் சேர்த்த மக்கள் மதுரை வீரன் படம் பார்த்த கொங்கு மக்களின் ஒரு பிரிவானவர்கள் அவர்களே அப்போது அதிமுக ஆட்சியில் அமர மேற்கு மாகாணத்தில் காரணமாக அமைந்தவர்கள் அதே பாணியில் எல்.முருகன் மத்திய இணை அமைச்சர் ஆனார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...