முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநில பேரிடர் நிவாரண நிதி, கொவிட் மேலாண்மை, சைபர் குற்றங்கள்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்களின் பதில்

உள்துறை அமைச்சகம்   மாநில பேரிடர் நிவாரண நிதி, கொவிட் மேலாண்மை, சைபர் குற்றங்கள்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்களின் பதில்

மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்தியானந்த் ராய், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் பின்வருமாறு:

தேசிய பேரிடர் நிவாரண நிதியின் மேலாண்மை:


















இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280 கீழ் நிதி ஆணையங்களின் பரிந்துரையை ஏற்று மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. குறிப்பிடப்பட்டுள்ள 12 பேரிடர்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான செலவினங்களை எதிர்கொள்வதற்காக மாநில அரசுகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. எனினும் நாட்டில் கொவிட்-19 தொற்றைக் கருத்தில் கொண்டும், அதனை பெருந்தொற்றாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளதாலும், தனிமைப்படுத்தல், அதற்கான நடவடிக்கைகள், மாதிரி சேகரிப்பு, அத்தியாவசிய உபகரணங்களின் கொள்முதல் போன்ற பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து குறைந்த தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக அவர்களுக்கு நிவாரண முகாம், உணவு போன்றவற்றை அளிப்பதற்காகவும் இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. மேலும் பிராணவாயு உற்பத்தி மற்றும் மருத்துவமனைகளில் சேமிப்பு ஆலைகளை அமைக்க அவசரகால ஊர்திகளின் சேவையை வலுப்படுத்தவும் மாநில பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்திக்கொள்ள இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக 2019-20 ஆம் நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் வருடாந்திர ஒதுக்கீட்டில் 35%ஐ மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அளவு, 2020-21 ஆம் நிதி ஆண்டில் 50%ஆக உயர்த்தப்பட்டது. மேலும் தொற்றின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கப்பட்டதைக் கருதி, கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2021-22-ஆம் நிதியாண்டில் 50%ஐ பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பங்காக ரூ. 8873.60 கோடி கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து மாநிலங்களுக்கும் விடுவிக்கப்பட்டது.

பொதுமுடக்க நெறிமுறைகளில் தளர்வு:

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் பெருந்தொற்றினால் ஏற்பட்ட அயர்ச்சி, சரியான நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றாதது, கொரோனா வைரஸ் தொற்றின் மாறுபட்ட வகைகளின் வளர்ச்சி இவற்றின் காரணமாக இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்டது.

நாட்டில் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகப் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து வழங்கி வருகிறது. ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆணையில், மாநிலத்தில் உள்ள நிலைமையைப் பொறுத்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஏப்ரல் 25-ஆம் தேதி வெளியிட்ட அறிவுரைகளை உடனடியாக அமலுக்குக் கொண்டு வருமாறு உத்தரவிடப்பட்டது. ஏப்ரல் 26 மற்றும் 27 தேதியிட்ட கடிதத்தில் அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் முறையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியது. இதையடுத்து 28.6.2021 தேதியில் சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பை வழிகாட்டுதலாகப் பயன்படுத்தி படிப்படியான தொடர்புகளை அறிவிக்குமாறு உள்துறை அமைச்சகம் 29.6.2021 அன்று கேட்டுக்கொண்டது. மேலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கொவிட் சரியான நடத்தை விதிமுறை ஆகிய ஐந்து உத்திகளை பின்பற்றுமாறும் 19.6.2021, 29.6.2021 மற்றும் 14.7.2021 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட கடிதங்களில் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியது. தங்களது மருத்துவ அமைப்பு முறையை வலுப்படுத்துவதற்காக மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை மத்திய அரசு அளித்து வருகிறது. இந்திய கொவிட்-19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பின் கீழ் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ. 15,000 கோடி வழங்கப்பட்டது. இதையடுத்து  இந்திய கொவிட்-19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பு: பகுதி II இன் கீழ் ரூ. 23,123 கோடியை 2021-22 ஆம் நிதியாண்டில் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

காவல் துறையை நவீனமாக்குவதற்கு நிதி ஒதுக்கீடு:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் கீழ் காவல்துறை மற்றும் பொது ஆணை ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் எழுகின்றன. எனினும் மத்திய அரசின் திட்டமான காவல்துறையை நவீனமாக்க மாநிலங்களுக்கு ஆதரவின் கீழ் மாநில அரசுகளுக்கு இந்திய அரசு பல்வேறு ஆதரவுகளை அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மேம்பட்ட ஆயுதங்கள், உளவுப் பிரிவினருக்கானக் கண்காணிப்பு உபகரணங்கள், நவீன தகவல் தொடர்பு சாதனங்கள், பாதுகாப்புப் பயிற்சி, தடயவியல் குற்றங்களுக்கான நவீன கருவிகள் போன்றவற்றை கொள்முதல் செய்ய மத்திய அரசின் உதவி வழங்கப்படுகிறது. தங்களது கேந்திர முன்னுரிமைகள் மற்றும் தேவைகளுக்கு இணங்க முன்மொழிவுகளை அதிகரிக்கும் வாய்ப்பு மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநில காவல் துறையில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. உடலில் அணியும் கேமராக்கள் மற்றும் ட்ரோன்களை காவல்துறையினர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அளிக்கப்படும் நிதியை அதிகரிக்குமாறு உத்தராகண்ட், பஞ்சாப், கேரளா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் கோரிக்கை முன்வைக்கப்பட்டன. எனினும் தற்போது பெரும்பாலான மாநில அரசுகளிடம் ஏற்கனவே அளிக்கப்பட்ட நிதி கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அளிக்கப்படும் நிதியை உரிய காலத்தில் முறையாக பயன்படுத்தும் மாநிலங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவற்றிற்கு கூடுதல் நிதியும் ஒதுக்கப்படும்.

கொரோனா பெருந்தொற்றின் தடுப்பு நடவடிக்கைகள்:

2019-20-ஆம் நிதி ஆண்டில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் கொவிட்- 19 மேலாண்மைக்காக ரூ.1113.21 கோடி மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விடுவிக்கப்பட்டது. இந்திய கொவிட்-19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பின் கீழ் 2020-21ஆம் நிதி ஆண்டில் ரூ. 8257.88 கோடி கொவிட்-19 மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சாதிவாரியான கணக்கெடுப்பு:

கணக்கெடுப்பு அட்டவணை, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து வடிவமைக்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டில் கணக்கெடுப்பை மேற்கொள்வது பற்றிய அரசின் கருத்து 2019 மார்ச் 28 அன்று வெளியிடப்பட்ட அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட்-19 பாதிப்பால் கணக்கெடுக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு ஆணை, 1950 (பட்டியல் இனங்கள்) மற்றும் அரசியல் அமைப்பு ஆணை, 1950 (பட்டியல் பழங்குடியினர்) -இன்படி பட்டியல் இனங்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள சாதிகளும் பழங்குடிகளும் கணக்கெடுப்பில் அவ்வப்போது திருத்தி அமைக்கப்படுகின்றன. அரசியலமைப்பின்படி மக்களவையிலும் சட்டமன்றங்களிலும் பட்டியல் இனங்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினங்களுக்கு அவர்களது மக்கள் தொகையின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பட்டியலின, பட்டியல் பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மத்திய அரசு பணிகளிலும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் அனைத்திலும் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு அஜய்குமார் மிஸ்ரா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் பின்வருமாறு:

சைபர் குற்றங்களின் அதிகரிப்பு:

தங்களது சட்ட அமலாக்க முகமைகள் வாயிலாக சைபர் உள்ளிட்ட குற்றங்களின் தடுப்பு, கண்காணிப்பு மற்றும் விசாரணையை மேற்கொள்வது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முக்கிய பொறுப்பாகும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டபூர்வமான வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாநிலங்களின் திறன் கட்டமைப்பிற்காக பல்வேறு திட்டங்களின் கீழ் ஆலோசனைகள் மற்றும் நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களின் தடுப்புத் திட்டத்தின் கீழ் சைபர் தடயவியல் மற்றும் பயிற்சி ஆய்வகங்கள், இளநிலை சைபர் ஆலோசகர்களுக்கான பயிற்சி மற்றும் அவர்களை பணியமர்த்துவதில் உள்துறை அமைச்சகம் நிதி உதவியை அளிக்கிறது. சைபர் தடயவியல் மற்றும் பயிற்சி ஆய்வகங்கள் 18 மாநிலங்களில் நிறுவப்பட்டுள்ளன. சைபர் குற்றங்கள் சம்பந்தமான புகார்களை வழங்குவதற்காக www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் குற்றப்பதிவு தளத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இணையதளம் வாயிலாக சைபர் குற்றங்களை பதிவு செய்வதில் உதவுவதற்கு 155260 என்ற இலவச தொலைப்பேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...