முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது இடங்களில் மரம் நடுவதற்கு வனத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியீடு.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் 


அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவது மற்றும் மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து பசுமை கமிட்டி தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பொது இடங்களில் மரம் நடுவதற்கும் அதை முறைப்படுத்தவும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.       




        அனைத்து உயிரினங்கள் வாழ்வதற்கும், வளர்வதற்கும் ஆரோக்கியமான கண்சுற்றுச்சூழல் அவசியமானதாகும். ஒரு மாநிலத்தின் நீடித்த முன்னேற்றமானது பொருளாதார வளர்ச்சி சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல் என்ற மூன்றின் அடிப்படையில் அமையும். இயற்கை ஆதாரங்களின் மீதான அதிக நெருக்கடியால் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது ஒரு மிகப் பெரிய சவாலாக உள்ளது. மனித இனத்தின் செயல்பாடுகளால் நீடித்த வாழ்க்கை முறையில் வளர்ந்து வரும் நெருக்கடியான உலகம் வெப்பமயமாதல், சூழல் மாசடைதல், சுத்தமான நீர் தட்டுப்பாடு மற்றும் உயிரின அழிவு போன்றவற்றை குறைக்க தேவையான நடவடிக்கை அவசியமாகிறது.

மனிதனின் எதிர்காலம் தாவரம், விலங்குகள் மற்றும் உயிர் சூழல் அமைப்பு ஆகியவற்றோடு தவிர்க்க இயலாக நிலையில் இணைந்துள்ளது.

எனவே சூழலியல் சமன்பெற நிலம், நீர், காடுகள் மற்றும் பல்லுயிரினப் பெருக்கம் ஆகியவற்றை பாதுகாத்து மேம்படுத்துதல் அவசியமாகும். சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை சமாளிப்பதற்காக நதிநீர் மற்றும் ஏரிகளில் மாசு தடுப்பு, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை பெருமளவில் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

வனங்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சூழலியல் பாதுகாப்பு, நீர் மற்றும் உணவு பாதுகாப்பு போன்றவற்றை வழங்குவதுடன், வனத்தையொட்டி வாழும் மக்களுக்கு தேவையான வாழ்வாதார பாதுகாப்பினையும் வழங்குகிறது. வனங்களிலுள்ள மருத்துவ தாவரங்கள், பாரம்பரிய மருத்துவ முறைகளை சார்ந்து வாழும் பல லட்சம் மக்களுக்கு சுகாதாரப்பாதுகாப்பினை அளிக்கிறது. உயிரின புவி வேதியியல் சுழற்சியில், குறிப்பாக கரிம மற்றும் நீர் சுழற்சியில் வனம் முக்கிய பங்கு வகிக்கிறது. கரியமில வாயுவினை உறிஞ்சம் ஆற்றலுடைய வனங்கள், தட்பவெப்ப மாறதலை தடுப்பதில் முக்கியத்துவம் பெற்று, மனித இனம் உயிர் வாழ நேரடி பங்காற்றுகிறது.

வளமான காடுகளைக் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் கடற்கரை பிரதேசங்களை தமிழ்நாடு இயற்கையாகப் பெற்றுள்ளது. குறும் பரப்பு உயிரினங்கள் நிறைந்த பெரு மையமாகவும், உலகில் உயிரிப்பன்மை மிகுந்த 25 பேரிடங்களுள் ஒன்றாகவும் திகழும் மேற்கு தொடர்ச்சி மலை, தமிழகத்தில் பெரிய அளவில் வியப்பித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்குள் மிகவும் அதிகமாக பூக்கும் தாவரங்களை கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் விளங்குவதால், நாட்டின் இந்த வனத்தினைப் பாதுகாக்கும் பொறுப்பு அதற்கு உள்ளது. தமிழக வனங்கள் பெருமளவில் மருத்துவ குணங்களைக் கொண்ட தாவரங்களையும், வனம் சார்ந்து பயிரிடப்படும் தாவர வகைகளையும் தன்னிடத்தே கொண்டுள்ளதால் அவற்றைப் பாதுகாப்பது முக்கியத்துவம் பெறுகின்றது. மேற்கு தொடர்ச்சி மலையினை சார்ந்த 14 வகையான குறும்பரப்புக்கு உரித்தான பாலூட்டி இனங்களும், தீபகற்ப இந்திய பகுதியிலுள்ள 5 வகையான குரங்கினங்களும் தமிழகத்தில் உள்ளன. மேலும், தமிழகத்தில தேசிய பாரம்பரிய விலங்குகளான யானை மற்றும் புலி ஆகியன குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. அவற்றின் எண்ணிக்கையும் தற்போது பெருகி வருகிறது. என்பது அரசின் கொள்கை திட்டமாக தற்போது அரசாணை வெளியீடு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...