முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலக மக்கள் தொகை தின இருவார விழாக் கொண்டாட்டம்

அளவான குடும்பங்களே வளமான நாட்டின் அடித்தளம்; தகுதிவாய்ந்த தம்பதியர் அரசின் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சைமுறைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்: மருத்துவர் மலர்விழி.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலகமும், புதுக்கோட்டை மாவட்ட குடும்ப நலத்துறையும் இணைந்து “ உலக மக்கள் தொகை தின இருவார விழாக் கொண்டாட்டம்” குறித்த இணையதளக் கருத்தரங்கை இன்று நடத்தியது.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குநர் டாக்டர் என்.மலர்விழி, “தன்னம்பிக்கையும் தற்சார்பும் கொண்ட நம் நாட்டு மக்களுக்கு நெருக்கடியான சூழலிலும் குடும்ப நலத்திட்ட சேவைகள் வழங்குவதை உறுதி செய்தல்” என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தாண்டு உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டின் மக்கள்தொகை சுமார் 8.25 கோடியாக உள்ளது. நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 17.06 ஆகவும், தமிழகத்தின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.61 ஆகவும் உள்ளது. மேலும் இந்தியாவில் ஆண் – பெண் விகிதம் 943 ஆகவும், தமிழகத்தில் 996 ஆகவும் உள்ளது. மக்கள்தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதனை சரிசெய்யும் பொருட்டு, போதிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் ஒரு பகுதியாக இளம்வயது திருமணத்தைத் தடுத்தல், ஒவ்வொரு குழந்தை பிறப்புக்கும் இடையே போதிய இடைவெளி விடுதல், குடும்ப நலத்திட்டத்தில் ஆண்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துதல், பிரசவம் மற்றும் கருக்கலைப்புக்குப்பின் குடும்பநல முறைகளை அனுசரித்தல் போன்ற தகவல்களை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்வி மருத்துவமனைகள் ஆகியவற்றில் பெண்களுக்கான குடும்பநல அறுவைச் சிகிச்சைகளான டியூபெக்டமி மற்றும் லாப்ராஸ்கோப்பி, காப்பர் டி-375 (5 ஆண்டுகளுக்கு குழந்தை பிறப்பை தடுக்கும்) மற்றும் காப்பர் டி-380ஏ பொருத்துதல் (10 ஆண்டுகளுக்கு குழந்தை பிறப்பை தடுக்கும்) உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகிறது. இவையனைத்தும் பயிற்சி பெற்ற மருத்துவர்களால் ஒரு சில  நிமிடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆண்களுக்கு நிரந்தர கருத்தடை சிகிச்சையான நவீன வாசெக்டமியும் செய்யப்படுகிறது. இந்த இலவச சேவைகளை தகுதி வாய்ந்த தம்பதியர் தயக்கமின்றி   பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இதற்கு அரசு ஊக்கத்தொகையும் தருவதாக குறிப்பிட்டார் மருத்துவர் மலர்விழி.       

தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலக இயக்குநர் ஜெ.காமராஜ் தலைமையுரையாற்றியபோது, கல்வியறிவு, சட்ட திட்டங்களை முறையாகக் கடைபிடிக்கும் அறிவுடைய சமூதாயத்தின் மூலமே நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த முடியும். எனவே நாட்டின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதன் மூலமே கொரோனா போன்ற தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சி மேம்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் கல்வித் தகவல் அலுவலர் இரா.வீராச்சாமி, மாவட்ட விரிவாக்கக் கல்வியாளர் வி.சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலர் கே.ஆனந்த பிரபு வரவேற்புரை ஆற்றினார். கள விளம்பர உதவியாளர் எஸ்.அருண்குமார் நன்றியுரை ஆற்றினார். இந்தக் கருத்தரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த