முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலக மக்கள் தொகை தின இருவார விழாக் கொண்டாட்டம்

அளவான குடும்பங்களே வளமான நாட்டின் அடித்தளம்; தகுதிவாய்ந்த தம்பதியர் அரசின் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சைமுறைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்: மருத்துவர் மலர்விழி.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலகமும், புதுக்கோட்டை மாவட்ட குடும்ப நலத்துறையும் இணைந்து “ உலக மக்கள் தொகை தின இருவார விழாக் கொண்டாட்டம்” குறித்த இணையதளக் கருத்தரங்கை இன்று நடத்தியது.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குநர் டாக்டர் என்.மலர்விழி, “தன்னம்பிக்கையும் தற்சார்பும் கொண்ட நம் நாட்டு மக்களுக்கு நெருக்கடியான சூழலிலும் குடும்ப நலத்திட்ட சேவைகள் வழங்குவதை உறுதி செய்தல்” என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தாண்டு உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டின் மக்கள்தொகை சுமார் 8.25 கோடியாக உள்ளது. நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 17.06 ஆகவும், தமிழகத்தின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.61 ஆகவும் உள்ளது. மேலும் இந்தியாவில் ஆண் – பெண் விகிதம் 943 ஆகவும், தமிழகத்தில் 996 ஆகவும் உள்ளது. மக்கள்தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதனை சரிசெய்யும் பொருட்டு, போதிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் ஒரு பகுதியாக இளம்வயது திருமணத்தைத் தடுத்தல், ஒவ்வொரு குழந்தை பிறப்புக்கும் இடையே போதிய இடைவெளி விடுதல், குடும்ப நலத்திட்டத்தில் ஆண்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துதல், பிரசவம் மற்றும் கருக்கலைப்புக்குப்பின் குடும்பநல முறைகளை அனுசரித்தல் போன்ற தகவல்களை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்வி மருத்துவமனைகள் ஆகியவற்றில் பெண்களுக்கான குடும்பநல அறுவைச் சிகிச்சைகளான டியூபெக்டமி மற்றும் லாப்ராஸ்கோப்பி, காப்பர் டி-375 (5 ஆண்டுகளுக்கு குழந்தை பிறப்பை தடுக்கும்) மற்றும் காப்பர் டி-380ஏ பொருத்துதல் (10 ஆண்டுகளுக்கு குழந்தை பிறப்பை தடுக்கும்) உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகிறது. இவையனைத்தும் பயிற்சி பெற்ற மருத்துவர்களால் ஒரு சில  நிமிடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆண்களுக்கு நிரந்தர கருத்தடை சிகிச்சையான நவீன வாசெக்டமியும் செய்யப்படுகிறது. இந்த இலவச சேவைகளை தகுதி வாய்ந்த தம்பதியர் தயக்கமின்றி   பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இதற்கு அரசு ஊக்கத்தொகையும் தருவதாக குறிப்பிட்டார் மருத்துவர் மலர்விழி.       

தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலக இயக்குநர் ஜெ.காமராஜ் தலைமையுரையாற்றியபோது, கல்வியறிவு, சட்ட திட்டங்களை முறையாகக் கடைபிடிக்கும் அறிவுடைய சமூதாயத்தின் மூலமே நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த முடியும். எனவே நாட்டின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதன் மூலமே கொரோனா போன்ற தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சி மேம்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் கல்வித் தகவல் அலுவலர் இரா.வீராச்சாமி, மாவட்ட விரிவாக்கக் கல்வியாளர் வி.சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலர் கே.ஆனந்த பிரபு வரவேற்புரை ஆற்றினார். கள விளம்பர உதவியாளர் எஸ்.அருண்குமார் நன்றியுரை ஆற்றினார். இந்தக் கருத்தரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...