முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெகாசஸ் விவகாரத்தில்.. பிரதமரை விசாரிக்க வேண்டுமெனவும் உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டுமெனவும். காங்கிரஸ் கட்சி வலியுறுத்தலும் அரசின் விளக்கமும்

பெகாசஸ் விவகாரத்தில்.. பிரதமரை விசாரிக்க வேண்டுமெனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டுமெனவும். காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்







பெகாசஸ் விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிய நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அதன் முழு விபரம் பார்ப்போம்:

இஸ்ரேல் என்எஸ்ஓ குரூப்  நிறுவனம் பெகாசஸ் எனும் ஸ்பைவேரை உருவாக்கியதைக் கொண்டு ஒருவரது மொபைலை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியும்.

 பெகாசஸ் மூலம் ஒருவர் யாருடன் பேசுகிறார், என்ன பேசுகிறார், எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருதார். எங்குச் செல்கிறாரென அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் கேமரா, மைக் போன்றவற்றைக் கூட இயக்க முடியும்.

 பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தி உலகெங்கும் பல நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், பத்திரிக்கையாளர்கள் எனப் பலரது மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தி கார்டியன், வாஷிங்டன் டைம்ஸ் உள்ளிட்ட 16 ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அரசியல் சாணக்கியர் பாஜகவின் மூத்த தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி  வெளியிடுகிறார்? கடந்த காலத்தில் 

அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சியை கவிழ்ப்பு செய்த 1999 ஆம் ஆண்டு அரசியல் நிகழ்வுகள் பொருந்திப் பார்க்க வேண்டிய நிலையில்

இப்போது நரேந்திரமோடி அரசின் காலை வாரக் காரணமும் பின்னணி என்ன?

ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பல துணை அமைப்புகளில் பாஜக அரசியல் களத்தில் வரும் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மற்றொரு பிரிவான வீராட் ஹிந்து சங்கத்தின் தலைவர் நிர்வாகி பிரதமர் நரேந்திரமோடி- உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணியை  உருவாக்கி இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்து தனக்கான கொள்கை தொடர்பான அனைத்தையும் சாதித்து வரும் நிலையில் தற்போதைய நிலை பாஜகவின் அமைப்பு சார்ந்த கொள்கைப் படி யார் ஒருவரும் தொடர்ச்சியாக இருமுறை மட்டுமே தலைமைப் பதவியை பெறமுடியும்  2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி தருமா அல்லது தராதா என்பது தெரிந்த பின் இவர்களை ஒரு அழுத்தம் காரணமாக வெளியேற்ற அதன் தலைமை முயல்கிறதா? என்பதே இப்போதைய அரசியல் அறிந்த பத்திரிகையாளர்கள் பார்வை இந்தியாவிலும் காங்கிரஸின் அடுத்த ஆட்சிக்கு தயாராக ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகராக  ஐ-பேக் நிறுவனங்கள் சார்பில் களம் காணும் பிரசாந்த் கிஷோர், திரிணாமுல் காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள், 40 செய்தியாளர்கள் உட்பட செல்போன் உளவு பார்க்கப்பட்டதாகச் செய்தி வெளியானது. 

காங்கிரஸ் கட்சியின்  குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலும் மறுத்துள்ள நிலையில், நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் "ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை ஹேக் செய்து உளவு பார்க்கும் பணிகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளனர் என்றும்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு முன் 40 க்கும் மேற்பட்டவர்களின் சொல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், விசாரணை தொடங்குவதற்கு முன்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷா  அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும். அதேபோல பிரதமர் மோடியிடம் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்"எனவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசுகையில், "டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார், ஆனால் கண்காணிப்பு இந்தியாவாக அது எப்படி மாறியுள்ளது என்பதையே நாம் பார்க்கிறோம். என்எஸ்ஓ நிறுவனம் இந்த ஸ்பைவேரை பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராட அரசமைப்புகளால் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகக் கூறுகிறது. ஆனால் இங்கு மோடிக்கு எதிராகப் பேசும் நபர்களைக் குறி வைத்துப் பயன்படுத்துகின்றது.             நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியும் பெகாசஸ் குறித்து கேள்வி எழுப்பியது" என்று அவர் தெரிவித்தார்.





முன்னதாக, நேற்று நாடாளுமன்றத்தில் ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சட்ட விரோதமான முறையில் நாட்டில் யாரையும் உளவு பார்க்கவில்லை என விளக்கமளித்திருந்தார். இருப்பினும், இது தேச பாதுகாப்பு தொடர்பானதென்பதால் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், இனி வரும் நாட்களில் பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் முக்கியமானதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

2021 ஜூலை 18 ஆம் தேதி அன்று வெளியான ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்த பெகாசஸ் உளவு விவகாரம் குறித்த அறிக்கை

பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி சில நபர்களின் தொலைப்பேசிகள் வேவு பார்க்கப்படுவதாக 2021 ஜூலை 18 அன்று வெளியான ஊடக செய்திகள் குறித்து கீழ்காணும் அறிக்கையை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் மக்களவையில் நேற்று வழங்கினார்.

“மாண்புமிகு மக்களவை தலைவர் அவர்களே,

பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி சில நபர்களின் தொலைபேசிகள் வேவு பார்க்கப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து நான் விளக்கமளிக்க விரும்புகிறேன்.

மிகவும் பரபரப்பான செய்தி ஒன்று இணையதளம் ஒன்றில் நேற்றிரவு வெளியிடப்பட்டது.

அந்த செய்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் போகிற போக்கில் வைக்கப்பட்டிருந்தன.

கூட்டமைப்பு ஒன்றுக்கு 50,000 தொலைபேசி எண்களுடன் கூடிய தரவுதளத்துக்கான அணுகல் கிடைத்திருப்பதே இச்செய்திக்கான அடிப்படை. இந்த தொலைப்பேசி எண்களுடன் தொடர்புடைய நபர்கள் உளவு பார்க்கப்படுகிறார்கள் என்பதே குற்றச்சாட்டு ஆகும். அதே சமயம், கீழ்கண்டவாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது: 

“தரவில் இருந்த எண்ணுக்கான தொலைப்பேசி பெகாசஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதா அல்லது ஹேக் செய்வதற்கான முயற்சி செய்யப்பட்டதா என்று தெரிவிக்கப்படவில்லை.

ஹேக் செய்வதற்கான முயற்சி செய்யப்பட்டதா அல்லது வேவு பார்க்கப்பட்டதா என்பதை தொலைப்பேசியை தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தாமல் கூறமுடியாது.”

எனவே, தரவில் எண் இருக்கும் காரணத்தாலேயே வேவு பார்க்கப்பட்டதாக பொருள் கிடையாது என்று அந்த செய்தியே கூறுகிறது.

தேசிய பாதுகாப்பு, குறிப்பாக பொது அவசரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பின் காரணமாக, மத்திய மற்றும் மாநில முகமைகளால் மின்னணு உபகரணங்களை சட்டப்பூர்வமாக கண்காணிப்பதற்கு நன்கு நிறுவப்பட்ட முறை இந்தியாவில் உள்ளது. இந்திய தந்தி சட்டம், 1885-ன் பிரிவு 5(2) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2020-ன் 69-ம் பிரிவின் கீழ் மின்னணு உபகரணங்களை சட்டப்பூர்வமாக கண்காணிப்பதற்கான வேண்டுகோள்கள் வைக்கப்பட வேண்டும்.

மாண்புமிகு மக்களவை தலைவர் அவர்களே,

நிறைவாக நான் கூற விரும்புவது என்னவென்றால்:

பட்டியலில் உள்ள எண்கள் வேவுபார்க்கப்பட்டனவா என்பது கூற இயலாது என்று செய்தியை வெளியிட்டவர் கூறுகிறார்.

வேவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் தொழில்நுட்பத்தின் உரிமையாளர் நிறுவனம் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது.

சட்டப்பூர்வமில்லா வேவுபார்த்தல் நடைபெறாமல் இருப்பதை நமது நாட்டின் நன்கு நிறுவப்பட்ட செயல்முறைகள் உறுதி செய்கின்றன.

மாண்புமிகு மக்களவை தலைவர் அவர்களே,

இந்த விஷயத்தை தர்க்க கண்ணோட்டத்தோடு நாம் அணுகினால், இந்த பரபரப்பில் உண்மை இல்லை என்பது நன்கு புலப்படும்

நன்றி, மாண்புமிகு மக்களவை தலைவர் அவர்களே.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த