உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக் தங்கம் வென்றார்.
ஹங்கேரி நாட்டில் புடோபெஸ்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடைபெற்று வருவதில் இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக் தங்கம் வென்றார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றதில் 73 கிலோ பிரிவில், இந்தியாவின் பிரியா மாலிக் மற்றும் பெலாரஸ் நாட்டின் க்சோனியா படபோவிச் ஆகியோர் மோதினார். துவக்கம் முதலே பிரியா மாலிக் ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளைக் குவித்தார்.
இவரை எதிர்த்த பெலாரஸ் நாட்டின் க்சோனியா படுமோசமாக சோதப்பி, ஒரு புள்ளியைப் கூடப் பெறவில்லை. இதனால், ஆட்டத்தின் முடிவில் 5-0 என்ற கணக்கில் பிரியா மாலிக் வெற்றிபெற்று, தங்கப் பதக்கம் வென்றார்.
கருத்துகள்