முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்நாடக மாநில பாஜக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு.

 கர்நாடக மாநில பாஜக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு.



கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ததற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய எடியூரப்பா, தன்னை ராஜினாமா செய்யும்படி யாரும் நிர்ப்பந்திக்கவில்லை யென்றும், தானாகவே ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்திருந்திருந்த நிலையில் அடுத்த கர்நாடகா முதல்வராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் எடியூரப்பாவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவராவார் 1960 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி பிறந்த பசவராஜ் பொம்மை. 2008 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். இவரது வளர்ச்சி மிக வேகமாக இருந்தது. பசவராஜ்​ பொம்மை இருமுறை மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஜனதா பரிவார் இயக்கத்திலிருந்து வந்த பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்ஆர் பொம்மை 1988 ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக பதவி வகித்தார். ஆனால் அடுத்த ஆண்டு ஆளுநர் வெங்கடசுப்பையா அந்த அரசைக் கலைத்தார். இதை எதிர்த்து எஸ்ஆர் பொம்மை உச்ச நீதிமன்றத்தை அணுகவே

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இப்போது வரை கட்சி தாவல் தடை சட்டம் மற்றும் மாநில அரசுகளை கலைக்கும் மத்திய அரசின் செயல்களுக்கு எதிராக ஒரு நிலையான தீர்ப்பு  ஒரு அளவுகோலாக மாறியிருக்கிறது. இப்போது கூட உச்சநீதிமன்றத்தில் எஸ்ஆர் பொம்மை வழக்கு முன்னுதாரணமாகக் காட்டப்படுகிறது. ஒரு மாநில அரசை கலைப்பதற்கு என்னென்ன மாதிரியான வழிமுறைகளை கையாள வேண்டும் என்று மிகத் தெளிவான வரைமுறைகளை இந்த வழக்கில் தான் உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது. இதன்பிறகு எஸ்ஆர்​ பொம்மை முன்னால் பிரதமர் எச்.டி. தேவகவுடா தலைமையிலான மத்திய அரசில்  அமைச்சராகப் பதவி வகித்தவர். இப்படிப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் வந்தவர் பசவராஜ் பொம்மை. அனைத்துக் கட்சியினர் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் இடமும் சுமூகமாக பழகுபவர் என்பதால் இவர் முதல் தேர்வாக இருக்கிறார். பெங்களூருவில் இன்றிரவு நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் குழுக்கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பெயரை சட்டசபைங் குழு தலைவராக எடியூரப்பா முன்மொழிந்தார். அதாவது புதிய முதல்வரின் பெயர் எடியூரப்பாவால் அறிவிக்கப்பட்டது. இதை மூத்த அமைச்சர் கோவிந்த கார்ஜோல் வழிமொழிந்ததையடுத்து கர்நாடக பாஜக சட்டசபை குழுத் தலைவராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார். நாளை பிற்பகல் 3.30 மணி அளவில் முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்க உள்ளார். லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த. ஹாவேரி மாவட்டத்தில் இவரது சொந்த ஊர் லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு பாஜக மேலிடத்தால் வற்புறுத்தப்பட்டதையடுத்து நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், லிங்காயத்து மடாதிபதிகள் மற்றும் சமுதாய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் அதிருப்தியை போக்கும் வகையில் அதே சமுதாயத்தைச் சேர்ந்த பசவராஜ் பொம்மை புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த