முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மின்சார வாகனங்கள், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், வர்த்தகம் மற்றும் நிலையான அபிவிருத்தி குறித்த புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்துகிறது

ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி (IISc) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான என்பிடிஇஎல் (NPTEL - National Programme on Technology Enabled Learning) மின்சார வாகனங்கள், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், வர்த்தகம் மற்றும் நிலையான அபிவிருத்தி குறித்த புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்துகிறது


ஐஐடி, ஐஐஎஸ்சி ஆகியவற்றின் கூட்டு முயற்சியான தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கற்றல் குறித்த தேசிய திட்டம் (என்.பி.டி.இ.எல்), மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஐ.ஓ.டி, வணிக மற்றும் நிலையான மேம்பாட்டுக்கான வடிவமைப்பு, ஆகிய பாடத் திட்டங்களை ஜூலை 2021 செமஸ்டருக்கு ஸ்வயம் தளம் (SWAYAM platform) மூலம் வழங்குகிறது

என்.பி.டி.இ.எல் படிப்புகள் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கின்றன. ஜூலை - டிசம்பர் 2021 செமஸ்டருக்கான சேர்க்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. என்.பி.டி.இ.எல் படிப்புகளின் முதல் தொகுப்பில் சேர கடைசி தேதி 2021 ஆகஸ்ட் 2 ஆகும்.

இது ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எஸ்.சி. பேராசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் https://swayam.gov.in/NPTELமூலம் என்.பி.டி.இ.எல் படிப்புகளில் சேரலாம்.

ஆன்லைன் முறையில் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு  500க்கும் மேற்பட்ட படிப்புகளை, என்.பி.டி.இ.எல் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. யார் வேண்டுமானாலும் எங்கும், எந்த நேரத்திலும் கற்கக்கூடிய சாத்தியம், கற்பித்தல்-கற்றல் செயல்முறையை மாணவர்களை மையமாகக் கொண்டதாகவும், புதுமையானதாகவும் ஆக்கியுள்ளது. இந்த ஆன்லைன் கல்வி முறை COVID-19 தொற்றுக் காலத்தில் மிகவும் பயனளிப்பதாக விளங்குகிறது.

என்.பி.டி.இ.எல்-இன் தனித்துவமான அம்சங்களை எடுத்துரைத்த, ஐ.ஐ.டி மெட்ராஸின் என்.பி.டெல் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன், “ஸ்வயம்-என்.பி.டெல் தற்போது நாடு முழுவதும் பொறியியல், கலை, அறிவியல், வர்த்தகம் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் 4,000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த என்.பி.டி.இ.எல் படிப்புகளில் சேர்கின்றனர். என்.பி.டி.இ.எல் இயங்குதளத்தில் பிரபலமான சில படிப்புகள், பொறியாளர்களுக்கான டேட்டா சயன்ஸ், பைத்தான், C, C++, இல்நிரலாக்கத்திற்கான படிப்புகள், மெஷின் லர்னிங்  அறிமுகம், மென்திறன்கள், ப்ராஜக்ட் ப்ளானிங் அண்ட் கன்ட்ரோல் ஆகியவை அதிக அளவில் விரும்பப்படுகின்றன'' என்று கூறினார்.

என்.பி.டி.இ.எல், MOOCகள் வடிவத்தின் மூலம் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. மாணவர்கள், ஆன்லைனில் வீடியோக்களைப் பார்த்துப் புரிந்து, வாராந்திர/ மாதாந்திர அடிப்படையில் பணிகளைச் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் விரும்பினால் இறுதித் தேர்வுக்கும் பதிவு செய்து கொள்ளலாம். சான்றிதழ் பெற, திட்டமிடப்பட்ட நேரடித் தேர்வில் பங்குபெற குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாணவர்கள் என்.பி.டி.இ.எல் சான்றிதழ் தேர்வை முடித்தவுடன், அவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், தங்கள் கூடுதல் புள்ளிகளை இணைக்குமாறு  கோரலாம்.

பொறியியல், மனிதநேயம், அடிப்படை அறிவியல் மற்றும் மேலாண்மை போன்றவற்றில் பல்வேறு வகையான படிப்புகள் என்.பி.டி.இ.எல் தளங்களில் கிடைக்கின்றன. இது வரை 1.4 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துகொண்டுள்ளனர். என்.பி.டி.இ.எல் வீடியோக்களை இதுவரை ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், YouTube இல் என்.பி.டி.இ.எல் சேனல்கள் 3.1 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளன.

மாணவர்களின் முயற்சிகளை நெறிப்படுத்துவதற்கும், ஒரு துறையில் நிபுணத்துவம் பெற அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும், என்.பி.டி.இ.எல் 'டொமைன் சான்றிதழ்' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ஒரு டொமைன் முக்கிய மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.பி.டி.இ.எல் படிப்புகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. டொமைன் சான்றிதழைப் பெறுவதில் கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை. இப்போது 12 பிரிவுகளில் 51 களங்கள் உள்ளன, மேலும் 85 மாணவர்கள்  NPTEL -இன் டொமைன் சான்றிதழை இது வரை பெற்றுள்ளனர்.

என்.பி.டி.இ.எல் மூலம் பயில, வயது ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. மகாராஷ்டிராவின் நந்தேடில் உள்ள சாவித்ரிபாய் பூலே உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவர் ஹர்ஷ்வர்தன் பாட்டீல், என்.பி.டெல் மூலம் பயின்றவர்களில் மிகவும் இளம் மாணவர். இதில் இவர், எஃபக்டிவ் ரைட்டிங்,  மென்திறன் மேம்பாடு, மன அழுத்த மேலாண்மை, உயிர் வேதியியல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான ஆங்கில மொழி ஆகிய ஐந்து சான்றிதழ் படிப்புகளை முடித்துள்ளார்.

ஆந்திராவின் கடப்பாவைச் சேர்ந்த என்.பி.டெல் மாணவி, சிங்கம் நிர்மலா தேவி, "என்.பி.டெல் மூலம் பைத்தான் படித்தது எனக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பெற மிகவும் உதவியாக இருந்தது. இந்த படிப்பு மூலம், பைத்தானின் கருத்துக்களை என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது, மேலும் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடிந்தது.” என்று கூறுகிறார்.

2003 ஆம் ஆண்டில் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏழு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (பம்பாய், டெல்லி, கான்பூர், கரக்பூர், மெட்ராஸ், குவஹாத்தி மற்றும் ரூர்க்கி) என்பிடெல் தொடங்கப்பட்டது.

சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...