முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மின்சார வாகனங்கள், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், வர்த்தகம் மற்றும் நிலையான அபிவிருத்தி குறித்த புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்துகிறது

ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி (IISc) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான என்பிடிஇஎல் (NPTEL - National Programme on Technology Enabled Learning) மின்சார வாகனங்கள், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், வர்த்தகம் மற்றும் நிலையான அபிவிருத்தி குறித்த புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்துகிறது


ஐஐடி, ஐஐஎஸ்சி ஆகியவற்றின் கூட்டு முயற்சியான தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கற்றல் குறித்த தேசிய திட்டம் (என்.பி.டி.இ.எல்), மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஐ.ஓ.டி, வணிக மற்றும் நிலையான மேம்பாட்டுக்கான வடிவமைப்பு, ஆகிய பாடத் திட்டங்களை ஜூலை 2021 செமஸ்டருக்கு ஸ்வயம் தளம் (SWAYAM platform) மூலம் வழங்குகிறது

என்.பி.டி.இ.எல் படிப்புகள் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கின்றன. ஜூலை - டிசம்பர் 2021 செமஸ்டருக்கான சேர்க்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. என்.பி.டி.இ.எல் படிப்புகளின் முதல் தொகுப்பில் சேர கடைசி தேதி 2021 ஆகஸ்ட் 2 ஆகும்.

இது ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எஸ்.சி. பேராசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் https://swayam.gov.in/NPTELமூலம் என்.பி.டி.இ.எல் படிப்புகளில் சேரலாம்.

ஆன்லைன் முறையில் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு  500க்கும் மேற்பட்ட படிப்புகளை, என்.பி.டி.இ.எல் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. யார் வேண்டுமானாலும் எங்கும், எந்த நேரத்திலும் கற்கக்கூடிய சாத்தியம், கற்பித்தல்-கற்றல் செயல்முறையை மாணவர்களை மையமாகக் கொண்டதாகவும், புதுமையானதாகவும் ஆக்கியுள்ளது. இந்த ஆன்லைன் கல்வி முறை COVID-19 தொற்றுக் காலத்தில் மிகவும் பயனளிப்பதாக விளங்குகிறது.

என்.பி.டி.இ.எல்-இன் தனித்துவமான அம்சங்களை எடுத்துரைத்த, ஐ.ஐ.டி மெட்ராஸின் என்.பி.டெல் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன், “ஸ்வயம்-என்.பி.டெல் தற்போது நாடு முழுவதும் பொறியியல், கலை, அறிவியல், வர்த்தகம் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் 4,000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த என்.பி.டி.இ.எல் படிப்புகளில் சேர்கின்றனர். என்.பி.டி.இ.எல் இயங்குதளத்தில் பிரபலமான சில படிப்புகள், பொறியாளர்களுக்கான டேட்டா சயன்ஸ், பைத்தான், C, C++, இல்நிரலாக்கத்திற்கான படிப்புகள், மெஷின் லர்னிங்  அறிமுகம், மென்திறன்கள், ப்ராஜக்ட் ப்ளானிங் அண்ட் கன்ட்ரோல் ஆகியவை அதிக அளவில் விரும்பப்படுகின்றன'' என்று கூறினார்.

என்.பி.டி.இ.எல், MOOCகள் வடிவத்தின் மூலம் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. மாணவர்கள், ஆன்லைனில் வீடியோக்களைப் பார்த்துப் புரிந்து, வாராந்திர/ மாதாந்திர அடிப்படையில் பணிகளைச் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் விரும்பினால் இறுதித் தேர்வுக்கும் பதிவு செய்து கொள்ளலாம். சான்றிதழ் பெற, திட்டமிடப்பட்ட நேரடித் தேர்வில் பங்குபெற குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாணவர்கள் என்.பி.டி.இ.எல் சான்றிதழ் தேர்வை முடித்தவுடன், அவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், தங்கள் கூடுதல் புள்ளிகளை இணைக்குமாறு  கோரலாம்.

பொறியியல், மனிதநேயம், அடிப்படை அறிவியல் மற்றும் மேலாண்மை போன்றவற்றில் பல்வேறு வகையான படிப்புகள் என்.பி.டி.இ.எல் தளங்களில் கிடைக்கின்றன. இது வரை 1.4 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துகொண்டுள்ளனர். என்.பி.டி.இ.எல் வீடியோக்களை இதுவரை ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், YouTube இல் என்.பி.டி.இ.எல் சேனல்கள் 3.1 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளன.

மாணவர்களின் முயற்சிகளை நெறிப்படுத்துவதற்கும், ஒரு துறையில் நிபுணத்துவம் பெற அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும், என்.பி.டி.இ.எல் 'டொமைன் சான்றிதழ்' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ஒரு டொமைன் முக்கிய மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.பி.டி.இ.எல் படிப்புகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. டொமைன் சான்றிதழைப் பெறுவதில் கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை. இப்போது 12 பிரிவுகளில் 51 களங்கள் உள்ளன, மேலும் 85 மாணவர்கள்  NPTEL -இன் டொமைன் சான்றிதழை இது வரை பெற்றுள்ளனர்.

என்.பி.டி.இ.எல் மூலம் பயில, வயது ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. மகாராஷ்டிராவின் நந்தேடில் உள்ள சாவித்ரிபாய் பூலே உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவர் ஹர்ஷ்வர்தன் பாட்டீல், என்.பி.டெல் மூலம் பயின்றவர்களில் மிகவும் இளம் மாணவர். இதில் இவர், எஃபக்டிவ் ரைட்டிங்,  மென்திறன் மேம்பாடு, மன அழுத்த மேலாண்மை, உயிர் வேதியியல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான ஆங்கில மொழி ஆகிய ஐந்து சான்றிதழ் படிப்புகளை முடித்துள்ளார்.

ஆந்திராவின் கடப்பாவைச் சேர்ந்த என்.பி.டெல் மாணவி, சிங்கம் நிர்மலா தேவி, "என்.பி.டெல் மூலம் பைத்தான் படித்தது எனக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பெற மிகவும் உதவியாக இருந்தது. இந்த படிப்பு மூலம், பைத்தானின் கருத்துக்களை என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது, மேலும் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடிந்தது.” என்று கூறுகிறார்.

2003 ஆம் ஆண்டில் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏழு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (பம்பாய், டெல்லி, கான்பூர், கரக்பூர், மெட்ராஸ், குவஹாத்தி மற்றும் ரூர்க்கி) என்பிடெல் தொடங்கப்பட்டது.

சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,