முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது புதிய முதல்வர் யார் ?

 கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பிற்பகலில் தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநரிடம் அளித்துள்ளார். அதன் பின்னர் ஆளுநர் மாளிகைத் தகவல் படி ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது




கர்நாடகாவில்  2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி எடியூரப்பா 4 வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பா.ஜ.,க வில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால் 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்வர் பதவியை பா.ஜ., மேலிடம் வழங்கியது. 'அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும்' என நிபந்தனைகள் விதிக்கப்பட்டதை ஏற்ற எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்று இன்றுடன் ஜூலை 26 ஆம் தேதி முடிய 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

ஜூலை 16 ஆம் தேதி டில்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது 2 ஆண்டுகள் நிறைவடைவதால் நிபந்தனைப்படி முதல்வர் பதவியை விட்டு விலகுமாறு கேட்டுக்கொண்டனர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பாவும் உறுதி அளித்த நிலையில் எடியூரப்பாவின் 2 ஆண்டு சாதனையை கொண்டாடும் விதமாக, நிகழ்ச்சி ஒன்றுக்கு பெங்களூருவில் கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளதில் கலந்து கொண்ட எடியூரப்பா, 'என்னை 7 முறை எம்.எல்.ஏ.,வாகத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி. நான் கட்சி மேலிடத்தின் முடிவை ஏற்றுக் கொள்வேன். கட்சி மேலிடத்தின் முடிவை மீற மாட்டேன். எனக்கு எந்தக் குறையுமில்லை. எனக்கு ஆதரவாக மடாதிபதிகள் மாநாடு நடத்துவது அவசியமற்றது. இன்று பிற்பகலில் ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளேன்' எனக் கண்ணீர் மல்கப் பேசினார். அதன் படியே செய்தார்.ஆளுநர் முதலமைச்சர் ராஜினாமாவை ஏற்றதால் 

கலைந்தது எடியூரப்பா அமைச்சரவை.. கர்நாடக புதிய முதல்வர் யாரெனத் தேர்வு செய்ய கூடுகிறது பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்

பெங்களூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அடுத்த முதல்வர் எப்போது தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகியாயின. எடியூரப்பா சார்ந்த லிங்காயத்து சமுதாய மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

கர்நாடகாவில் சுமார் 17 சதவீதம் லிங்காயத்து மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் எடியூரப்பாவுக்காக மட்டுமே, பாஜகவுக்கு தொடர்ந்து வாக்களித்து வருகிறார்கள். எனவே அவர்களை எதிர்த்துக் கொண்டு பாஜக மேலிடம் எதுவும் செய்துவிட முடியாது. மேலிடம் சொல்வதை கேட்டு நடப்பதாக எடியூரப்பா சொன்னாலும்கூட, லிங்காயத்துகள் பாஜக தலைமைக்கு எதிராக பேட்டிகள் கொடுப்பதற்கு திரைமறைவில் எடியூரப்பா தூண்டுதல் இருப்பதாக சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

முதல்வராக எடியூரப்பா பதவியேற்ற பிறகு, சுமார் 10 முறையாவது அவர் பதவி விலகப் போகிறார் என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் இப்போது அவர் தனது பதவியை நிஜமாகவே ராஜினாமா செய்து விட்டார். இன்று இரண்டாவது வருட கொண்டாட்டங்களில் எடியூரப்பா அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்க கூடிய நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

நேற்று அவரிடம், நீங்கள் நாளை, ராஜினாமா செய்யப் போகிறீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, கட்சி மேலிடத்திடம் இருந்து இதுவரை எனக்கு அந்த மாதிரி தகவல் வரவில்லை. கட்சி மேலிடம் எனக்கு தகவல் தெரிவித்தால் அதன் பிறகு நான் முடிவை அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார். இன்னொரு பக்கம் இரண்டு ஆண்டுகாலம் தனது ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை விளக்கி இன்று மதியம் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதனால் அவர் ராஜினாமா செய்வாரா இல்லையா என தகவல்கள் பேசப்பட்டது இன்றயை செய்தியாளர் சந்திப்பின்போது, தனது ராஜினாமா முடிவை எடியூரப்பா அறிவித்தார். பிறகு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினார். இதையேற்றுக் கொண்டார் ஆளுநர். எனவே எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை கலைந்தது. இருப்பினும் அவர் காபந்து முதல்வராக தொடருகிறார். ஒரு அமைச்சரவையின் தலைவர் முதலமைச்சர் தான். எனவே அவர் பதவி விலகினால், ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகியதாக அர்த்தம். எனவே புதிதாக முதல்வர் பொறுப்பை ஏற்கும்போது, அமைச்சர்களும் புதிதாக பதவி பிரமாணம் செய்து கொள்ள வேண்டியது கட்டாயமுள்ளது 

புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூரில் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மேற்பார்வையாளர் இன்று மாலை தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக தேசிய செயலாளர் சந்தோஷ், அமைச்சர் முருகேஷ் நிரானி உள்ளிட்டோர் பெயர்கள் புதிய முதல்வர் தேர்வுக்கான, உத்தேச பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் அந்த விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...