முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் இணை அமைச்சர்

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து அமைச்சரின் பதில்


நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.

அரசமைப்பு சட்டத்தின் படி ‘சுகாதாரம்’ மற்றும் ‘சட்டம் ஒழுங்கு’ மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வருவதால், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கைக் குறித்த தகவல்கள் மத்திய அரசால் பராமரிக்கப்படுவதில்லை.

2021 ஜூன் 18 அன்று நாடு தழுவிய போராடத்தை நடத்திய இந்திய மருத்துவர் சங்கம், வன்முறைகளைத் தடுப்பதற்காகக் கடுமையானச் சட்டங்களை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.

பணியில் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகம் அறிவுறுத்தியது.

மேலும், வன்முறை அச்சமின்றி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் பணியாற்றுவதை உறுதி செய்யுமாறும், வன்முறையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

2020 செப்டம்பர் 28 அன்று பெருந்தொற்று (திருத்த) சட்டம்-2000-ஐ இந்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் கீழ், சுகாதாரப் பணியாளர்கள் மீது வன்முறையில் ஈடுபடுவது பிணையில் வர முடியாத குற்றமாகும். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

தடுப்பு மருந்து வழங்கல் நிலவரம் குறித்த உண்மையின் ஒற்றை ஆதாரமாக விளங்கும் கோவின் தளத்தில் தடுப்பூசி பெற்ற அனைத்து பயனாளிகளின் தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன.

டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான அணுகல் இல்லாத நபர்கள் தடுப்பூசி வழங்கும் மையத்திற்கு நேரடியாக சென்று பதிவு செய்து கொள்ளலாம். ஒரு கைபேசி எண்ணைக் கொண்டு நான்கு பேர் வரை பதிவு செய்து கொள்ளலாம்.

நாட்டின் முக்கியமான துறைகளில் ஒன்றாக சுகாதாரத் துறை விளங்குவதால், அதை ஊக்குவிப்பதற்கான பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பு, ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்‌ஷா திட்டம், மருத்துவக் கல்விக்கான மூன்று திட்டங்கள், ஆயுஷ் அமைச்சகத்தின் முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2021-22-ம் ஆண்டுக்கான இந்திய கொவிட்-19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பு- பகுதி 2-க்கு 2021 ஜூலை 8 அன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2021 ஜூலை 1 முதல் 2022 மார்ச் 31 வரையிலான ஒன்பது மாதங்களில் ரூ 23,123 கோடி மதிப்பில் இது செயல்படுத்தப்படும்.

‘பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள்’ மாநிலப் பிரிவில் இருந்தாலும், பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதரவை தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மத்திய அரசு வழங்கி வருகிறது.

நாட்டின் அனைத்து இடங்களிலும் அத்தியவாசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், மக்களுக்கு ஏற்படும் செலவுகளை குறைப்பதற்காகவும், இலவச மருந்துகள் சேவைத் திட்டத்தை தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் அரசு செயல்படுத்தி வருகிறது.

பொது சுகாதார மையங்களுக்கு இலவசமாக மருந்துகளை வழங்குவதற்காக இத்திட்டட்த்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் கொவிட்-19 பாதிப்பை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. புறநகர். ஊரக மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் கொவிட் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்காக விரிவான வழிகாட்டு நடைமுறைகளை 2021 ஏப்ரல் 16 அன்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டது. சுகாதார உள்கட்டமைப்பும் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய கொவிட்-19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பின் கீழ், கொவிட்-19 பொது சுகாதார சவாலை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதியுதவியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்குவதற்காக 2020 ஏப்ரலில் ரூ 15,000 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


சுகாதார வசதிகளை கிராமப்புறங்களில் மேம்படுத்துவதற்காக தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனனி சிசு சுரக்‌ஷா திட்டத்தின் கிழ் இலவச மருந்துகள், இலவச பரிசோதனை, இலவச ரத்தம் மற்றும் உணவு, இலவச போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. நடமாடும் மருத்துவ மையங்கள் மற்றும் தொலை மருத்துவ சேவைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கொவிட்-19-ஐ எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்காக பிரதமரின் ஏழைகள் நலத் தொகுப்பின் கீழ் ஆயுள் காப்பீட்டு பலன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தனிநபர் விபத்து காப்பீடாக ரூ 50 லட்சம் வழங்கப்படுகிறது.

2021 ஜூலை 15 வரை, மொத்தம் 921 மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குத் தலா ரூ 50 லட்சம் இத்திட்டத்தின் கிழ் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த