முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் கௌரவ விரிவுரையாளரின் உடல் மீட்பு

சென்னை ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் கௌரவ விரிவுரையாளரின் உடல் மீட்பு.         

 அவர் தங்கியிருந்த அறையில் 11 பக்கக் கடிதத்தை காவல்துறை கைப்பற்றினர். ஜாதி ரீதியிலான பாகுபாட்டினால் இந்த மர்ம மரணம் நடந்துள்ளதாயென காவல்துறை ஐஐடி நிர்வாகத்திடம் விசாரணை நடத்துகின்றனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இரகு இஸ்ரோவில் விஞ்ஞனியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரது மகன் உன்னிக்கிருஷ்ணன் நாயர்(வயது 30). கேரளாவில் பி.டெக் படித்து முடித்து சென்னை ஐஐடியில் எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் தற்காலிகதீ திட்ட கௌரவ விரிவுரையாளராக பணியாற்றினார். ஐஐடியில் விடுதி கிடைக்காததால், அனில்குமார், பிரகாஷ் ஆகியோருடன் வேளச்சேரியில் தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஐஐடிக்கு பணிக்கு வந்துள்ளார். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அவரது மோட்டார் பைக்கை வீட்டிலேயே விட்டுள்ளார். மேலும், அவரின் செயின், மோதிரம் ஆகியவையும் அறையிலேயே இருந்தது. பணிக்கு வந்தவர், பிற்பகல் முதல் மாயமானார். வழக்கமாக மாலை நேரங்களில் சென்னை ஐஐடி

வளாகத்திலுள்ள ஹாக்கி மைதானத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை ஹாக்கி பயிற்சியாளர் ராஜூ உடன் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹாக்கி மைதானத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது மைதானத்தின் ஓரம் வாலிபர் ஒருவர் உடல் முழுமையாக தீயில் எரிந்து கரிக்கட்டையாக இறந்து கிடந்ததைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்து, ஐஐடி நிர்வாகத்துக்கு தகவல் தந்ததைத் தொடர்ந்து ஐஐடி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது.

கோட்டூர்புரம் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போது தான் ஐஐடியில் தற்காலிகமாகப் பணியாற்றி வந்த கௌரவ விரிவுரையாளர் உன்னிகிருஷ்ணனை அடையாளம் கண்டனர் பின்  அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சந்தேக மரணம்  என வழக்கு பதிவு செய்து உன்னிக்கிருஷ்ணன் தங்கியிருந்த வீட்டிற்குச்  சென்று சோதனை நடத்தியதில் அவரது படுக்கை அறையில் உன்னிக்கிருஷ்ணன் தனது பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த 11 பக்க கடிதம், லேப்டாப், செல்போன் ஆகியவற்றையும் கைப்பற்றினர். கடிதத்தில் உன்னிக்கிருஷ்ணன் என்ன எழுதியுள்ளார் என்பது குறித்து காவல்துறையினர் சொல்ல மறுத்துவிட்டனர்.

ஆனால், கடிதத்தில் வேலை செய்யும் இடத்தில் அதிகளவில் மன அழுத்தத்துடன் இருந்ததாகவும், பணி செய்ய முடியாத அளவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்ததாக உடன் தங்கி இருந்து அவரது நண்பர்கள்  தெரிவித்தனர். அதேநேரம் உன்னிக்கிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் உள்ள தகவலின் படி காவல்துறை ஐஐடி நிர்வாகத்திடம் விசாரணை நடத்துகின்றனர்.

கேரளாவிலிருந்து சென்னை வந்த உன்னி கிருஷ்ணன் பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சென்னை ஐஐடியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த விபின் வி.விட்டல் என்பவர் சென்னை ஐஐடியில் உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் ஜாதி ரீதியாகப் பாகுபாடு காட்டுவதாகவும், இதனால் அங்கு வேலை செய்ய முடியவில்லை என்று கூறி தனது பதவியை ராஜினமா செய்து அதற்கான கடிதத்தை சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த ப்பரபரப்பு அடங்குவதற்குள் உன்னிகிருஷ்ணன் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்துள்ளார். ஜாதி ரீதியான பாகுபாட்டால் உன்னிக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டாரா வேறு காரணங்கள் உள்ளதா என  தொடர் விசாரணை நடத்தி வரும் காவல்துறை.

 2019 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் படித்த கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் மாணவியின் இறப்புக்கு மத ரீதியான நெருக்கடியே காரணமெனத் தெரியவந்தது தொடர்பாக பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியும் அதற்குத் இப்போது வரை தீர்வு வரவில்லை. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஜாதி  மத ரீதியாக தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் வகையிலும், பணியிலிருந்து ராஜினமா செய்யும் வகையிலும் தொடர் சம்பவங்கள் சென்னை ஐஐடியில் நடந்து வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...