முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் கௌரவ விரிவுரையாளரின் உடல் மீட்பு

சென்னை ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் கௌரவ விரிவுரையாளரின் உடல் மீட்பு.         

 அவர் தங்கியிருந்த அறையில் 11 பக்கக் கடிதத்தை காவல்துறை கைப்பற்றினர். ஜாதி ரீதியிலான பாகுபாட்டினால் இந்த மர்ம மரணம் நடந்துள்ளதாயென காவல்துறை ஐஐடி நிர்வாகத்திடம் விசாரணை நடத்துகின்றனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இரகு இஸ்ரோவில் விஞ்ஞனியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரது மகன் உன்னிக்கிருஷ்ணன் நாயர்(வயது 30). கேரளாவில் பி.டெக் படித்து முடித்து சென்னை ஐஐடியில் எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் தற்காலிகதீ திட்ட கௌரவ விரிவுரையாளராக பணியாற்றினார். ஐஐடியில் விடுதி கிடைக்காததால், அனில்குமார், பிரகாஷ் ஆகியோருடன் வேளச்சேரியில் தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஐஐடிக்கு பணிக்கு வந்துள்ளார். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அவரது மோட்டார் பைக்கை வீட்டிலேயே விட்டுள்ளார். மேலும், அவரின் செயின், மோதிரம் ஆகியவையும் அறையிலேயே இருந்தது. பணிக்கு வந்தவர், பிற்பகல் முதல் மாயமானார். வழக்கமாக மாலை நேரங்களில் சென்னை ஐஐடி

வளாகத்திலுள்ள ஹாக்கி மைதானத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை ஹாக்கி பயிற்சியாளர் ராஜூ உடன் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹாக்கி மைதானத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது மைதானத்தின் ஓரம் வாலிபர் ஒருவர் உடல் முழுமையாக தீயில் எரிந்து கரிக்கட்டையாக இறந்து கிடந்ததைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்து, ஐஐடி நிர்வாகத்துக்கு தகவல் தந்ததைத் தொடர்ந்து ஐஐடி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது.

கோட்டூர்புரம் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போது தான் ஐஐடியில் தற்காலிகமாகப் பணியாற்றி வந்த கௌரவ விரிவுரையாளர் உன்னிகிருஷ்ணனை அடையாளம் கண்டனர் பின்  அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சந்தேக மரணம்  என வழக்கு பதிவு செய்து உன்னிக்கிருஷ்ணன் தங்கியிருந்த வீட்டிற்குச்  சென்று சோதனை நடத்தியதில் அவரது படுக்கை அறையில் உன்னிக்கிருஷ்ணன் தனது பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த 11 பக்க கடிதம், லேப்டாப், செல்போன் ஆகியவற்றையும் கைப்பற்றினர். கடிதத்தில் உன்னிக்கிருஷ்ணன் என்ன எழுதியுள்ளார் என்பது குறித்து காவல்துறையினர் சொல்ல மறுத்துவிட்டனர்.

ஆனால், கடிதத்தில் வேலை செய்யும் இடத்தில் அதிகளவில் மன அழுத்தத்துடன் இருந்ததாகவும், பணி செய்ய முடியாத அளவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்ததாக உடன் தங்கி இருந்து அவரது நண்பர்கள்  தெரிவித்தனர். அதேநேரம் உன்னிக்கிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் உள்ள தகவலின் படி காவல்துறை ஐஐடி நிர்வாகத்திடம் விசாரணை நடத்துகின்றனர்.

கேரளாவிலிருந்து சென்னை வந்த உன்னி கிருஷ்ணன் பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சென்னை ஐஐடியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த விபின் வி.விட்டல் என்பவர் சென்னை ஐஐடியில் உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் ஜாதி ரீதியாகப் பாகுபாடு காட்டுவதாகவும், இதனால் அங்கு வேலை செய்ய முடியவில்லை என்று கூறி தனது பதவியை ராஜினமா செய்து அதற்கான கடிதத்தை சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த ப்பரபரப்பு அடங்குவதற்குள் உன்னிகிருஷ்ணன் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்துள்ளார். ஜாதி ரீதியான பாகுபாட்டால் உன்னிக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டாரா வேறு காரணங்கள் உள்ளதா என  தொடர் விசாரணை நடத்தி வரும் காவல்துறை.

 2019 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் படித்த கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் மாணவியின் இறப்புக்கு மத ரீதியான நெருக்கடியே காரணமெனத் தெரியவந்தது தொடர்பாக பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியும் அதற்குத் இப்போது வரை தீர்வு வரவில்லை. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஜாதி  மத ரீதியாக தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் வகையிலும், பணியிலிருந்து ராஜினமா செய்யும் வகையிலும் தொடர் சம்பவங்கள் சென்னை ஐஐடியில் நடந்து வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த