தமிழ்நாடு, நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளராக திரு. டி.வெங்கடகிருஷ்ணா பதவியேற்பு
சென்னையில் உள்ள வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி தேசிய வங்கியின் (நபார்டு), தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் தலைமைப் பொது மேலாளராக திரு. டி.வெங்கடகிருஷ்ணா, 2021 செப்டம்பர் 1ஆம் தேதி பதவி ஏற்கிறார். இவர் ஐசிடபிள்யுஏ படிப்புடன், வர்த்தகத்தில் முதுநிலைப் பட்டம், சிஏஐஐபி, நிதிப்பிரிவில் முதுநிலைப் பட்டயப்படிப்பு ஆகியவற்றை முடித்திருப்பவர்.
நபார்டு வங்கிச் சேவையில் இவர் கடந்த 1988ஆம் ஆண்டு இவர் இணைந்தார். மும்பையில் உள்ள தலைமை அலுவலகம் உட்பட, நாடு முழுவதும் உள்ள நபார்டு வங்கி அலுவலகங்களில் இவர் பல பதவிகளை வகித்துள்ளார். தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகத்தின் பொறுப்பை வகிக்கிறார். நபார்டு வங்கி தலைமை அலுவலகத்தின் நிதித்துறையில் இவர் பணியாற்றிய போது, இவர் நிபுணத்துவம் பெற்று கரூவூலம் மற்றும் முதலீட்டுத் துறை ஆகியவற்றைக் கையாள்வதில் முக்கியமானவராக இருந்தார்.
நபார்டு வங்கியின் துணை அமைப்பான, நப்கிசான் அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் இவர் இருந்துள்ளார்.
கருத்துகள்