முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முனைவர் பா வெங்கட்ராமன் கண்டுபிடிப்பு ஆராய்ச்சி மையத்தின் வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல்

முனைவர் பா வெங்கட்ராமன் அவர்கள் கல்பாக்கத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார்.     


                                அவர் செயிண்ட் ஜோசப் கல்லூரி (திருச்சி) யில் இயற்பியல் முதுகலைப் பட்டம் பெற்று பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 27 ஆம் தொகுதியில் தேர்ச்சி பெற்று கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள கதிரியக்க உலோகவியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராகத் தன் தொழில் வாழ்க்கையை 1984 ஆம் ஆண்டு தொடங்கினார். இந்த மையத்தில் தனிச்சிறப்புற்ற விஞ்ஞானியாகவும், ஹோமி பாபா தேசியப் பல்கலைக்கழகத்தில் முதுனிலைப் பேராசிரியராகவும் பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு மற்றும் மனிதவள மேம்பாடு இவற்றுக்கான குழுவின் இயக்குனாரகவும் இதுகாறும் இருந்து வருகிறார். 37 ஆண்டுகளாக அழிவிலா ஆய்வுச் சோதனையின் இயற்பியல் அடிப்படையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் ஆய்வும் செய்து வருகிறார். அணுசக்தித் துறையில் உள்ள தொழில் நுட்பச் சவால்களுக்கு அழிவிலாச் சோதனையின் மூலம் தீர்வு காணும் திறம் பெற்றவர் இவர். இ கா அ ஆ மையத்தில் நொதுமி (நியூட்ரான்) கொண்டு எடுக்கப்பட்ட முதல் கதிரியக்க நிழற்படம் காமினி (KAMINI) என்ற அணு உலையினைக் கொண்டு இவரால் எடுக்கப்பட்டது. காமினி (KAMINI) என்ற இந்த அணு உலை இந்த ஆராய்ச்சி மையத்தின் வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல் ஆகும். இ கா அ ஆ மையத்தில் எக்ஸ் கதிர்களைக் கொண்டு சாதாரணமாகவும் டிஜிடல் முறையிலும் எடுக்கப்படும் படங்கள் மற்றும், வெப்ப நிலை நிழற்படங்கள் இவற்றை எடுக்கும் கருவிகளை இவரே முதன் முதலில் நிறுவினார். இவர் நிறுவிய அழிவிலாச் சோதனைக் கருவிகளும் முறைகளும் பல்வேறு தொழில் துறைகளிலும் நிறுவனங்களிலும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவரின் திறமைகளும் அறிவியல் ஆய்வுகளும் விண்வெளி ஆராய்ச்சி மையம், இராணுவத் தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பயனளிப்பதாக இருந்து வருகின்றது. இவர் செயற்படுத்திய அழிவிலா ஆய்வு முறைகள் தொல்பொருள் ஆய்வு, பழங்காலச் சின்னங்கள் இவற்றை ஆய்வதற்கு மட்டுமல்லாது, மார்பகப் புற்று நோய் கண்டறியும் ஆய்வுகளுக்கும் பயன் பட்டு வருகின்றன

முனைவர் வெங்கட்ராமன் அவர்கள் இந்திய அணுஆராய்ச்சித்துறையின் உயரிய விருதான, ஹோமி பாபா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப விருதினை 2007ஆம் ஆண்டு பெற்றார். இது தவிர 2008, 2009, 2010, 2011, 2012, 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சாதனைக் குழுவிற்கான பரிசினையும் பெற்றார். 2005 ஆண்டு இந்திய அணுசக்திக் கழகத்தின் தங்கப் பதக்கத்தினையும் பெற்றார். 2001 ஆம் ஆண்டு ISNT-NDT  அகில உலக அங்கீகாரத்தைப் பெற்றார். இந்திய உருக்கிணைப்பு அமைப்பின் கூரிய கருவிப் பரிசினை 2011 ஆம் ஆண்டு வென்றார். இவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் 10க்கும் மேற்பட்ட பல முறைகள் சிறந்த கட்டுரை விருதினைத் தட்டிசென்றன.

இவர் இந்திய அழிவிலா ஆய்வு இயக்கத்தின் கௌரவ உறுப்பினர் பதவியையும், சென்னை அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர் பதவியினையும், ஆசிய பசிபிக் அழிவிலா ஆய்வுக்கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் பதவியினையும், 14காம் ஆசிய பசிபிக் அழிவிலா ஆய்வுக் கருத்தரங்கின் தலைவர் பதவியினையும், அளவறி அகச்சிவப்புக் கதிர் ஆய்வின் ஆசியத் துணைக்குழுவின் முன்னாள் தலைவர் பதவியினையும், அழிவிலா ஆய்விற்கான அமெரிக்க இயக்கத்தின் இந்தியப்பிரிவின் தலைவர் பதவியினையும் பெற்றவர் ஆவார். இவர் பன்னாட்டு ஆய்வுப்பத்திரிக்கைகளிலும் கருத்தரங்கங்களிலும் 300க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் வெளியிட்டுள்ளார். இவற்றுள் என்சைக்லோபிடியா ஆப் மெட்டீரியல் சயன்ஸ் என்கிற இதழில் வெளியான இரண்டு கட்டுரைகளும், தனிப்பொருள் பற்றி வெளியிடப்பட்ட புத்தகக் கட்டுரைகள் இரண்டும், மூன்று புத்தகங்களும் அடங்கும். முனைவர் பல்தேவ் ராஜ் அவர்களுடன் இணைந்து புத்தகத்தொடர்களை நரோசா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

இவர் முனைவர் ஏ கே பாதுரி அவர்களுக்குப் பிறகு, இ கா அ ஆ மையத்தின் இயக்குனாரகப் பொறுப்பேற்றுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த