முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முனைவர் பா வெங்கட்ராமன் கண்டுபிடிப்பு ஆராய்ச்சி மையத்தின் வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல்

முனைவர் பா வெங்கட்ராமன் அவர்கள் கல்பாக்கத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார்.     


                                அவர் செயிண்ட் ஜோசப் கல்லூரி (திருச்சி) யில் இயற்பியல் முதுகலைப் பட்டம் பெற்று பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 27 ஆம் தொகுதியில் தேர்ச்சி பெற்று கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள கதிரியக்க உலோகவியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராகத் தன் தொழில் வாழ்க்கையை 1984 ஆம் ஆண்டு தொடங்கினார். இந்த மையத்தில் தனிச்சிறப்புற்ற விஞ்ஞானியாகவும், ஹோமி பாபா தேசியப் பல்கலைக்கழகத்தில் முதுனிலைப் பேராசிரியராகவும் பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு மற்றும் மனிதவள மேம்பாடு இவற்றுக்கான குழுவின் இயக்குனாரகவும் இதுகாறும் இருந்து வருகிறார். 37 ஆண்டுகளாக அழிவிலா ஆய்வுச் சோதனையின் இயற்பியல் அடிப்படையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் ஆய்வும் செய்து வருகிறார். அணுசக்தித் துறையில் உள்ள தொழில் நுட்பச் சவால்களுக்கு அழிவிலாச் சோதனையின் மூலம் தீர்வு காணும் திறம் பெற்றவர் இவர். இ கா அ ஆ மையத்தில் நொதுமி (நியூட்ரான்) கொண்டு எடுக்கப்பட்ட முதல் கதிரியக்க நிழற்படம் காமினி (KAMINI) என்ற அணு உலையினைக் கொண்டு இவரால் எடுக்கப்பட்டது. காமினி (KAMINI) என்ற இந்த அணு உலை இந்த ஆராய்ச்சி மையத்தின் வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல் ஆகும். இ கா அ ஆ மையத்தில் எக்ஸ் கதிர்களைக் கொண்டு சாதாரணமாகவும் டிஜிடல் முறையிலும் எடுக்கப்படும் படங்கள் மற்றும், வெப்ப நிலை நிழற்படங்கள் இவற்றை எடுக்கும் கருவிகளை இவரே முதன் முதலில் நிறுவினார். இவர் நிறுவிய அழிவிலாச் சோதனைக் கருவிகளும் முறைகளும் பல்வேறு தொழில் துறைகளிலும் நிறுவனங்களிலும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவரின் திறமைகளும் அறிவியல் ஆய்வுகளும் விண்வெளி ஆராய்ச்சி மையம், இராணுவத் தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பயனளிப்பதாக இருந்து வருகின்றது. இவர் செயற்படுத்திய அழிவிலா ஆய்வு முறைகள் தொல்பொருள் ஆய்வு, பழங்காலச் சின்னங்கள் இவற்றை ஆய்வதற்கு மட்டுமல்லாது, மார்பகப் புற்று நோய் கண்டறியும் ஆய்வுகளுக்கும் பயன் பட்டு வருகின்றன

முனைவர் வெங்கட்ராமன் அவர்கள் இந்திய அணுஆராய்ச்சித்துறையின் உயரிய விருதான, ஹோமி பாபா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப விருதினை 2007ஆம் ஆண்டு பெற்றார். இது தவிர 2008, 2009, 2010, 2011, 2012, 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சாதனைக் குழுவிற்கான பரிசினையும் பெற்றார். 2005 ஆண்டு இந்திய அணுசக்திக் கழகத்தின் தங்கப் பதக்கத்தினையும் பெற்றார். 2001 ஆம் ஆண்டு ISNT-NDT  அகில உலக அங்கீகாரத்தைப் பெற்றார். இந்திய உருக்கிணைப்பு அமைப்பின் கூரிய கருவிப் பரிசினை 2011 ஆம் ஆண்டு வென்றார். இவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் 10க்கும் மேற்பட்ட பல முறைகள் சிறந்த கட்டுரை விருதினைத் தட்டிசென்றன.

இவர் இந்திய அழிவிலா ஆய்வு இயக்கத்தின் கௌரவ உறுப்பினர் பதவியையும், சென்னை அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர் பதவியினையும், ஆசிய பசிபிக் அழிவிலா ஆய்வுக்கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் பதவியினையும், 14காம் ஆசிய பசிபிக் அழிவிலா ஆய்வுக் கருத்தரங்கின் தலைவர் பதவியினையும், அளவறி அகச்சிவப்புக் கதிர் ஆய்வின் ஆசியத் துணைக்குழுவின் முன்னாள் தலைவர் பதவியினையும், அழிவிலா ஆய்விற்கான அமெரிக்க இயக்கத்தின் இந்தியப்பிரிவின் தலைவர் பதவியினையும் பெற்றவர் ஆவார். இவர் பன்னாட்டு ஆய்வுப்பத்திரிக்கைகளிலும் கருத்தரங்கங்களிலும் 300க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் வெளியிட்டுள்ளார். இவற்றுள் என்சைக்லோபிடியா ஆப் மெட்டீரியல் சயன்ஸ் என்கிற இதழில் வெளியான இரண்டு கட்டுரைகளும், தனிப்பொருள் பற்றி வெளியிடப்பட்ட புத்தகக் கட்டுரைகள் இரண்டும், மூன்று புத்தகங்களும் அடங்கும். முனைவர் பல்தேவ் ராஜ் அவர்களுடன் இணைந்து புத்தகத்தொடர்களை நரோசா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

இவர் முனைவர் ஏ கே பாதுரி அவர்களுக்குப் பிறகு, இ கா அ ஆ மையத்தின் இயக்குனாரகப் பொறுப்பேற்றுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...