பிரதமர் அலுவலகம் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற சுமித் அந்திலுக்கு பிரதமர் வாழ்த்து
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற சுமித் அந்திலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் நமது தடகள வீரர்கள் தொடர்ந்து சாதனைப் படைத்து வருகிறார்கள்! பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் சாதனை படைத்த சுமித் அந்திலால் நாடு பெருமை கொள்கிறது.
மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்ற சுமித்துக்கு வாழ்த்துகள். உங்க சமள் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்”, என்று குறிப்பிட்டுள்ளார்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஒரே நாளில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இந்தியாவின் வெற்றி பயணம் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் தொடர்கிறது
பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சுமித் அந்தில் தங்கம் வென்றதை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
“பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதலில் சுமித் அந்தில் தங்கம் வென்ற வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நாட்டுக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. தங்கம் வென்று புதிய உலக சாதனையை படைத்ததற்காக பாராட்டுகள். மேடையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை கேட்ட ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியடைந்தனர். நீங்கள் ஒரு உண்மையான வீரர்,” என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
“பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் நமது தடகள வீரர்கள் தொடர்ந்து சாதனைப் படைத்து வருகிறார்கள்! பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் சாதனை படைத்த சுமித் அந்திலால் நாடு பெருமை கொள்கிறது. மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்ற சுமித்துக்கு வாழ்த்துகள். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கும் நல்வாழ்த்துகள்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
“உலக சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது. பாராலிம்பிக்கில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதற்காக சுமித் அந்திலுக்கு வாழ்த்துகள். மிகச்சிறந்த ஈட்டி எறிதல், ஊக்கமளிக்கும் சாதனை,” என்று விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாகூர் கூறியுள்ளார்.
23 வயதான சுமித் அந்தில், மல்யுத்தத்தில் இருந்து ஈட்டி எறிதலுக்கு 2018-ம் ஆண்டு தான் மாறினார். இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் அவர் பயிற்சி பெற்றார்.
2015-ம் ஆண்டு நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில், இடது காலை இழந்த அவர், செயற்கை காலை பொருத்திக் கொண்டு இந்த சாதனை படைத்துள்ளார்.டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய வீரர் வினோத் குமாரின் பதக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆடவர் வட்டெறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் 3-வது இடம் பிடித்ததால், வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் அவரது உடல் திறனை வகைப்படுத்தியதில் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதனையடுத்து, அவரது வெற்றியை ஆய்வு செய்ய உள்ளதாகவும், பதக்கம் குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என்று டோக்கியோ பாராலிம்பிக் கமிட்டி தெரிவித்து உள்ளது.இந்நிலையில் தொழில்நுட்பக்குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் வினோத்குமார் வெண்கலம் திரும்பப் பெறப்பட்டது.
கருத்துகள்