முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அதிக பொது சரக்குகளுடன் வந்த கப்பலைக் கையாண்டு புதிய சாதனையும் வா.உ.சி வாழ்வில் நடந்த சோதனைகளும்

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 29.08.2021 அன்று அதிக பொது சரக்குகளுடன் வந்த கப்பலைக் கையாண்டு புதியசாதனை படைத்துள்ளது. சிங்கப்பூர்  கொடியுடன் எம்.வி. இன்ஸ் அங்காரா  கப்பல், அரபு நாட்டிலுள்ள மினாசர்க் துறைமுகத்திலிருந்து 93,719 டன் சுண்ணாம்புக் கற்களை செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்திற்காக எடுத்து வந்தது. இதற்கு முன்பு 14.05.2021 அன்று எம்.வி. பேஸ்டியன்ஸ் என்ற கப்பலின் மூலம் 92,935 டன் நிலக்கரி கையாளப்பட்ட சாதனையை முறியடித்தது.



இக்கப்பல் சரக்குதளம் 9-ல் 26.08.2021 அன்று வருகை புரிந்து, நாள் ஒன்றுக்கு 50,000 டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட மூன்று நகரும் பளுதூக்கிகள் மூலம் சரக்குகள் கையாளப்பட்டது. இக்கப்பலின் மொத்த சரக்குகளும் 29.08.2021 அன்று கையாளப்பட்டது. இக்கப்பலின் முகவர்கள் மேக்சன்ஸ் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி மற்றும் சரக்கு கையாளும் முகவர்கள் தூத்துக்குடி செட்டிநாடு லாஜிஸ்டிக்,  ஆகும்.

சிறந்த சாதனைக்கு தனது முழு ஒத்துழைப்பு மற்றும் கடின உழைப்பையும் தந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், சரக்குகள் கையாளும் முகவர்கள், பளுதூக்கி இயந்திரம் இயக்குபவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுதல்களை வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன், இ.ஆ.ப., தெரிவித்தார்.

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டு 2021-22 முதல் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் வளர்ச்சி கண்டு வருகிறது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டில் ஜீலை மாதம் வரை 11.33 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு, 2020 ஆம் நிதியாண்டு ஜீலை வரை கையாண்ட அளவான 10.58 மில்லியன் டன் சரக்குகளை விட 7.14 விழுக்காடு வளர்ச்சி கண்டது. சரக்குப் பெட்டகங்களை பொருத்தவரையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டு ஜீலை மாதம் வரை 2.69 இலட்சம் டிஇயு சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டு, கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 21.07 சதவிகிதம் வளர்ச்சிகண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத் தகவலை வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தது.                                     இப்போது நம் நினைவுக்கு வருகிறது ஒரு நிகழ்வு ...


.வேதியன் பிள்ளைக்கு கோவில்பட்டியிலிருந்து 28 மார்ச் 1929 ல்  வ.உ.சி. எழுதிய கடிதம்:

அன்பார்ந்த தம்பியவர்களே,

நீங்கள் மார்ச் மாதம் 8–உ எழுதியனுப்பிய கடிதம் வரப்பெற்றேன். அதிற்கண்ட செய்திகளைப் பார்க்குந்தோறும் எனக்கும் என் மனைவிக்கும் மிகுந்த துக்கம் உண்டாகிறது.

சென்ற 2,3 வருஷங்களுக்குள் லைப் அஷூரன்ஸ் கம்பெனியிலிருந்து எனக்கு கிடைத்த சுமார் ரூபா இரண்டாயிரமும் செலவாகித் தமிழ்ப் பண்டிதர் சுப்பிரமனியபிள்ளையவர்களிடம் பிராம்சரி நோட்டின் பேரில் வட்டிக்கு ரூபா 250.00 ம் இவ்விடத்திலுள்ள அள. சித. அள. வட்டக்கடையில் 11/4 வட்டிக்கு ரூ 500.00 ம் கடன் வாங்கியிருக்கிறேன். முந்திய கடன்கள் வேறு இருக்கின்றன். எனது வக்கீல் வரும்படி வக்கீல்கள் மிகுதியாலும் லா டெலிட்டுகள் மிகுதியாலும் மிகக் குறைந்து விட்டது.

என் ஸ்வாதார சொத்துக்கள் அடமானக் கடனுக்குட்பட்டிருக்கின்றன. தங்கள் கடிதம் வந்ததும் முதல் வட்டிக்காவது வட்டிக் கடையில் கடன் வாங்கலாமென்று முயற்சித்தேன். என் நிலைமைகளையும், என் முதுமையையும் அறிந்தவர்களாயிருக்கிறபடியால் , எனக்கும் கடன் கொடுக்க இஷ்டமில்லாமல் “பணம் இல்லை” என்ற பொய்க் காரணத்தைச் சொல்லி விட்டனர். நமது மூத்த மகளைச் சென்ற வருஷத்தில் ஒரு B.A.B.L. க்கு பெண் கேட்டனர். ரூ 1500.00 க்கு நகைகள் போட வேண்டுமென்கின்றனர். அதற்குச் சக்தியில்லாமல், அம் மாப்பிள்ளைக்குக் கொடுக்க நான் இசைய வில்லை. இப்பொழுதும் சில மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்கத் தயாராகின்றனர். இப்போது ஞானம்பாளிடமிருக்கிற சுமார் ஆயிரம் ரூபா நகைகளுக்கு மேல் என்னால் போட முடியாதென்பதைத் தெரிந்து என்னிடம் வராமல் இருக்கின்றனர். 3 ரூபா, 2 ரூபா, 1 ரூபாவுக்குச் சில சமயங்களில்  அரிசி வாங்க வேண்டியதாகப் பொருட் கஷ்டம் ஏற்படுகின்றது. இந்த நிலைமையில் நான் என்ன செய்யக் கூடும்.! இது நிறக.

ஒரு வாரத் தமிழ்ப் பத்திரிக்கை தொடங்குவதற்குரிய விளம்பரம் முதலியன வெளிப்படுத்தி இலங்கைக்கும், பர்மாவுக்கும் எனது ஏஜெண்டாகக் தாங்கள் போய்ச்  சந்தாதாரர்களும், நன்கொடைகளும் சேர்த்து வந்து என் பெயரால் பத்திரிக்கையைத் தாங்கள் நடத்தலாமா என்று ஆலோசனை செய்யுங்கள். மேற்படி இரண்டு நாடுகளிலும் என் பெயருக்குக் கொஞ்சம் மதிப்பு உண்டு. அங்கு போவதற்குரிய செலவுக்கு என் செலவோடு செலவாகப் பணம் தருகிறேன். அங்கு தக்க உத்தியோகம் கிடைத்தாலும் , அதனை தாங்கள் பெறலாம். எனக்கு இன்ன செய்வதென்று ஒன்றும் தோன்ற வில்லை. இந்தக் கடிதம் எழுதவும் மனம் இல்லை. தங்கள் கடிதத்திற்கு பதில் எழுதாமல் இருக்கவும் முடியவில்லை. அதனால் இதனை எழுதினேன். நமது சகோதரர் ஸ்ரீமான் C. விருத்தாசலம் பிள்ளையவர்கள் சவுக்கியமாயிருக்கிறார்களா!

கடவுள் துணை

வ.உ.சிதம்பரம் பிள்ளை.

இந்தக் கடிதம் 1960  “ அமுதசுரபி “ மாத இதழில் வெளி வந்ததையடுத்து வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர். ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்கள் தொகுத்த வ.உ.சி. கடிதங்கள் (1902 – 1936)  என்ற பேரில் சேகர் பதிப்பகம் மூலம் 1984 ம் ஆண்டு இந்த நூலினை கொண்டு வந்துள்ளார்.

இந்தக் கடிதத்தினை படித்த என்னால் தாங்க இயலவில்லை. ஒரு பக்கம் சிறைக்குப் போய் வந்ததால் அன்றைய காலத்தின் சமூக புறக்கணிப்பும், தன்னுடைய மகளை வரதட்சனை கொடுக்க முடியாமல் அதற்கு தகுந்த மாப்பிள்ளை கிடைக்கமாட்டார்களா என்ற அவரது எதிர்பார்ப்பு, அவரிடம் பணம் கொடுத்தால் வராது என்பதை அவரது வயோதிகத்தை குறிப்பிடுவது இதற்கிடையேதான் கோவில்பட்டியில் வசித்த காலத்தில் தொல்காப்பியம் – இளம் பூரணம்- பொருளதிகாரம் ( அகத்திணையியல், புறத்திணையியல் 2ம் பதிப்பாக வெளிவருகிறது (1928)), தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் (1928), எந்த மனநிலையில் தமிழுக்கும் பணியாற்றி வந்துள்ளார். பெரியவருடைய இந்த கடிதம் அவர் எழுதிய வெண்பாவை காண்போம்.

வந்த கவி ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்

தந்த சிதம்பரமன தாழ்ந்தின்று சந்தமில் வெண்

பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்

நாச்சொல்லும் தோலும் நலிந்து.

எல்லாரும் கைவிட்டார் ஏந்திழையும் துன்புற்றாள்

வல்லாரும் வல்லுநரும்  மாநிலத்துச் - செல்லா

திவன் பேச் சினியென் றென்னை யிகழ்ந்தார்

என் மெயத் தவன் பூமி நாதன் தடத்து

இந்த கடிதத்தை தட்டச்சிட்டப் போது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. எழுதிய  வெண்பாவும்  மனதிற்குள் வந்து போகும் இப்போது அவர் பெயரில் உள்ள துறைமுகம் செல்வம் கொழிக்கும் நிலையில் இந்த கட்டுரை என்னை எழுதத் தூண்டியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த