முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்சிராப்பள்ளி மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் 75ஆவது சுதந்திர தின விழா

75ஆவது சுதந்திர தின விழா வெபினாரில் பிரபலமாகாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவு கூறப்பட்டனர்


திருச்சிராப்பள்ளி மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் 75ஆவது சுதந்திர தின விழா

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் சார்பில் நடத்தப்பட்ட 75ஆவது சுதந்திர தின வெபினாரில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக போராடி உயிர் தியாகம் உள்ளிட்ட பல்வேறு தியாகங்களைச் செய்த பிரபலமாகாத தலைவர்கள் நினைவு கூரப்பட்டனர்.

புதுச்சேரி  மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் தனது தலைமையுரையில் இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஆனால் பிரபலமாகாத தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் பங்களிப்பையும் வெளிப்படுத்துவதற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். புகழ்பெற்ற தலைவர்கள், சுதந்திர போராட்டம் நடைபெற்ற இடங்கள், சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் மற்றும் பிரபலமாகாத தலைவர்கள் என்று 4 பிரிவாக சுதந்திரப் போராட்ட வரலாறு பிரித்துப் பார்க்கப்பட வேண்டும் என்று சிவக்குமார் மேலும் தெரிவித்தார். திருச்சியில் உள்ள பொன்மலை ரெயில்வே பணிமனையில் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் போராடிய போது பிரிட்டிஷ் அரசு மலபார் போலிஸ் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பல தொழிலாளர்கள் இறந்து போனார்கள். அவர்கள் வரலாறு நமக்குத் தெரியாமலேயே போய்விட்டது என்று சிவக்குமார் உதாரணம் காட்டினார். வரலாற்றில் ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல நிகழ்வுகள் கவனிக்கப்படாமலேயே போய்விட்டன என்றும் குறிப்பிட்டார். மதுரையைச் சேர்ந்த பெருமாள் பிள்ளை, கோயம்புத்தூரைச் சேர்ந்த ராமசாமி போன்றோர் பிரிட்டிஷாரை எதிர்த்து நடத்திய பேரணியில் பிரிட்டிஷார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனார்கள். இவர்கள் பிரபலமாகாத தலைவர்களாகவே இருக்கின்றார்கள். மதுரையில் கே.பி.ஜானகியம்மாள் சுதந்திரப் போராட்டம் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்துவதற்காக தேவைப்பட்ட செலவிற்கு தனது நகைகளை எல்லாம் விற்று பணம் அளித்தார் என்று குறிப்பிட்ட சிவக்குமார் மாயக்காள் போன்ற பிரபலமாகாத பல பெண் போராட்டவாதிகளையும் உதாரணங்களாக எடுத்துக்காட்டி பேசினார். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் காந்திஜி முன்வைத்த செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தால் உந்துதல் பெற்ற உஷா மேத்தா என்ற இளம்பெண் சுதந்திரப் போராட்டம் குறித்த செய்திகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு வானொலி ஒலிபரப்பையே தலைமறைவாக நடத்திய வரலாற்றையும் சிவக்குமார் எடுத்துரைத்தார்.

திருச்சிராப்பள்ளி களவிளம்பர அலுவலர் திரு கே.தேவிபத்மநாபன் தனது அறிமுக உரையில் உலகின் மிகவும் வெற்றிகரமான மற்றும் மிகப் பெரிய குடியரசு நாடாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டார். இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டை ஒட்டி நாடு முழுவதும் ஆசாதி கா அம்ரித் மகோத்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு தருணங்களில் நமது குடியரசின் குறிக்கோள்களின் வலிமை வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. நமது குடியரசின் கருத்துக்கள் அனைத்தும் அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.  நாம் சுதந்திரமான வாழ்வை மேற்கொள்வதற்கு உகந்த பாதுகாப்பான மற்றும் பாதுகாவல் நிறைந்த தேசத்தை உருவாக்கித் தருவதற்காக இன்னுயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைத்துப் பார்க்க வேண்டிய தருணமாக இந்த கொண்டாட்ட நேரம் உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இன்றைய நாள் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நாளாகும். ஏனெனில் 1945ஆம் ஆண்டு இந்த நாளில்தான் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் பயணித்த விமானம் காணாமல் போனது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றும் மறைவதில்லை; அவர்கள் இளையோரின் மனங்களில் உந்து சக்தியாக வாழ்கிறார்கள். எழுதப்பட்ட வரலாற்றின்படி பார்த்தோம் என்றால் முதலாவது சுதந்திரப் போராட்டம் 1857ல் தொடங்கப்பட்டதாக குறிக்கப்பட்டு இருக்கும். ஆனால் அதற்கு முன்னரே ஜான்சி ராணி போராடியது நமக்குத் தெரியும். பிரிட்டிஷாரை எதிர்த்து 1780லேயே சிவகங்கை அரசி வீரமங்கை வேலுநாச்சியார் போராடி உள்ளார். பிரிட்டிஷாரை எதிர்த்த முதல் அரசியாக இவரே திகழ்கிறார். ராணி வேலுநாச்சியாரின் பெண் தளபதியாக இருந்த குயிலி முதல் தற்கொலை போராளியாக இருந்திருக்கிறார். தன்னைத்தானே தீயிட்டுக் கொண்டு பிரிட்டிஷ் தளவாடங்களுக்குள் குதித்து அதனை அவர் அழித்துள்ளார். திருப்பூரில் கொடிகாத்த குமரன் சாகும் வரை பிரிட்டிஷ் போலிஸாரால் அடிபட்ட போதும் கையில் பிடித்திருந்த தேசியக் கொடியை நழுவவிடவே இல்லை. வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, ஊமைத்துரை, மருது சகோதரர்கள் போன்றோர் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடி உள்ளனர். திருச்சிராப்பள்ளியில் ஏப்ரல் 13, 1930ல் ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி புறப்பட்ட உப்பு சத்தியாக்கிரக பேரணி என்பது பிரிட்டிஷார் சுமத்திய உப்பு வரிக்கு எதிராக தேசிய அளவில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு அங்கமாகும் என்று மேலும் தேவிபத்மநாபன் குறிப்பிட்டார்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் விரிவாக்க நடவடிக்கைகள் துறையின் தலைவர் டாக்டர் வி.ஆனந்த் கிடியோன் தனது சிறப்புரையில் சுதந்திர விழா என்பது ஒரு நாளில் கொண்டாடி முடித்து விட வேண்டிய விழா அல்ல. ஏனெனில் சுதந்திரத்திற்காக பல ஆண்டுகள், பல தலைவர்கள் போராடி உள்ளனர். இத்தகைய சுதந்திரப் போராட்ட தலைவர்கள் அனைவரையும் இளம் தலைமுறையினர் நினைவு கூர்ந்து காலமெல்லாம் அவர்களுடைய தியாகங்களை போற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் விரிவாக்க அலுவலர் டாக்டர் ஆர்.ரவி தனது வாழ்த்துரையில் சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் இருந்து இளைஞர்கள் ஊக்கம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  இந்திய சுதந்திரத்திற்காக விடுதலைப் போராட்ட வீரர்கள் சந்தித்த கொடுமைகளை மாணவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஓய்வு பெற்ற திருச்சி மாவட்ட நேரு யுவகேந்திராவின் இளையோர் ஒருங்கிணைப்பாளர் திரு கே.சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார். சுதந்திரம் பெறுவதற்காக பிரிட்டிஷாரை எதிர்த்து நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக போராடினார்கள். பிரிட்டிஷாரை எதிர்த்து சுதந்திரத்திற்காகப் போராடிய மருது சகோதரர்களை நினைவு கூர்ந்த அவர் ராஜாஜியால் திருச்சிராப்பள்ளியில் தொடங்கப்பட்டு வேதாரண்யத்தில் நிறைவுற்ற உப்பு சத்தியாக்கிரக பேரணி குறித்தும் எடுத்துரைத்தார். உதவிகள் ஏதும் செய்யக் கூடாது என்ற பிரிட்டிஷ் மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆணையை மீறியும் கிராம மக்கள் வழியில் உப்பு சத்தியாக்கிரக போராட்டவாதிகளுக்கு உணவு பொட்டலங்களை மரங்களிலே தொங்கவிட்டு உதவி புரிந்தனர். திருச்சியில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்த பிரபலமாகாத ஜேம்ஸ், நாராயணசாமி நாயுடு மற்றும் நாகமலை தேவர் போன்றோரின் தியாகங்களையும் அவர் எடுத்துரைத்தார்.

ஓய்வு பெற்ற பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துணை இயக்குனர் திரு எம்.தெரஸநாதன் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல இன்னல்களைத் தாங்கி போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை இன்றைய மாணவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

திருச்சி மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் களவிளம்பர உதவியாளர் திரு கே.ரவீந்திரன் வெபினாரை ஒருங்கிணைத்து நடத்தினார். வெபினாரில் கலந்து கொண்ட அனைவருக்கும் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் மின்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...