முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய ரயில்வேயை தனியார்மயப் படுத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை: அமைச்சர்

இரயில்வே அமைச்சகம்  இந்திய ரயில்வேயை தனியார்மயப் படுத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை: அமைச்சர்






நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

இந்திய ரயில்வேயை தனியார்மயப் படுத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை. இடவசதியின்மையால் சுமார் 5 கோடி பயணிகள் 2019-20-ம் ஆண்டு காத்திருப்பு பட்டியலில் இருந்தனர். இந்த இடைவெளியை சமன் செய்வதற்காக, வந்தே பாரத், தேஜாஸ், எல்எச்பி மற்றும் விஸ்டாடோம் உள்ளிட்ட பெட்டிகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை இந்திய ரயில்வே ஏற்கனவே எடுத்து வருகிறது.

அரசு-தனியார் கூட்டு முறையின் கீழ் 12-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் 151 ரயில்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை இந்திய ரயில்வே வரவேற்றிருந்தது. இந்த ரயில்கள் ஏற்கனவே உள்ள ரயில் சேவைகளுக்கு கூடுதலாக இருக்குமே தவிர, தற்போதுள்ள பயணிகள் ரயில் சேவைகள் இதனால் பாதிக்கப்படமாட்டாது. தகவல்களை http://www.indianrailways.gov.in/IndicativeRoutesfor12clusters.pdf.                        எனும் தளத்தில் பார்க்கலாம்.

ஆதர்ஷ் நிலைய திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களின் மேம்பாடு/நவீனமயமாக்கல் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் கீழ் தெற்கு ரயில்வேக்கு 2018-19-ல் ரூ 108.47 கோடியும், 2019-20-ல் ரூ 111.55 கோடியும், 2020-21-ல் ரூ 213.11 கோடியும், 2021-22-ல் 224.57 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1253 ரயில் நிலையங்கள் மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொவிட்-19 பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, 2022 மார்ச் 23 முதல் வழக்கமான பயணிகள் ரயில் சேவைகளை இந்திய ரயில்வே தற்காலிமாக நிறுத்தியது.

மாநில அரசுகளின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன. போக்குவரத்து தேவை அதிகமுள்ள தடங்களில் ‘க்ளோன் ரயில்கள்’ இயக்கப்படுகின்றன. 2021 ஜூலை 26-ன் படி, 22 க்ளோன் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

2019-20 மற்றும் 2020-21 ஆகிய இரண்டு வருடங்களில் ரயில் விபத்துகளின் விளைவாக பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை. 2016-17 முதல் 2020-21 வரையிலான ஐந்து வருடங்களில் விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் வெகுவாக குறைந்துள்ளன.

2019 ஜனவரி 31 அன்று ஆளில்லாத அனைத்து லெவல் கிராசிங்குகளையும் இந்திய ரயில்வே நீக்கியது. மக்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய ரயில்வே எடுத்து வருகிறது.

இந்திய ரயில்வேயின் 5374 ரயில் நிலையங்களில் காத்திருப்பு அறைகள்/கூடங்கள் உள்ளன. மிச்சமிருக்கும் நிலையங்களில் அமர்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான/நவீனமயப்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி நிலைமையின் அடிப்படையில் இவை செய்யப்படுகின்றன.

அகலப்பாதை தடங்களை துரித கதியில் மின்மயமாக்குவதற்கான மிகப்பெரிய திட்டத்தை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. கொங்கன் ரயில்வேயின் 740 ரூட் கிலோமீட்டர் உள்ளிட்ட 64,689 ரூட் கிலோமீட்டருக்கான மொத்த அகலப்பாதை தடங்கள் இந்திய ரயில்வேயில் உள்ளன.

இதில் 71 சதவீதம் ஏற்கனவே மின்மயமாக்கப்பட்டு விட்டன. மிச்சமிருப்பவற்றை மின்மயமாக்குவதற்கான பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. 2016-17-ம் ஆண்டில் இதற்கான ஒதுக்கீடு ரூ 3,396 கோடியாகவும், செலவு ரூ 2,956 கோடியாகவும் இருந்த நிலையில், 2020-21-ம் ஆண்டில் இதற்கான ஒதுக்கீடு ரூ 6,326 கோடியாகவும், செலவு ரூ 6,141 கோடியாகவும் இருந்தது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த