முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் முதல் உள்நாட்டு மோட்டார் சக்கர நாற்காலி வாகனம்: சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது

இந்தியாவின் முதல் உள்நாட்டு மோட்டார் சக்கர நாற்காலி வாகனம்: சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது


இந்தியாவின் முதல் உள்நாட்டு மோட்டார் சக்கர நாற்காலி வாகனத்தை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் விற்கப்படும் மொத்தம் 3 லட்சம் சக்கர நாற்காலிகளில் 2.5 லட்சம் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றின் விலையும் மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகம்.


இந்தியாவின் முதல் உள்நாட்டு மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி வாகனத்தை, சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது. இதை சாலைகளில் மட்டுமல்ல, சீரற்ற நிலப்பரப்புகளிலும் பயன்படுத்த முடியும்.

நியோபோல்ட் என்று அழைக்கப்படும் இது அதிகபட்சமாக 25 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 கிமீ வரை பயணிக்கிறது. கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, இது சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கு  வசதியான, பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவில் போக்குவரத்துக்கு வழி வகுக்கிறது.

நியோபோல்ட், லித்தியம்-அயன் பேட்டரியால் இயக்கப்படுகிறது.


இதன் உருவாக்கத்தின் போது, சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்,  வாகனம் ஓட்ட முடியாத அளவுக்குக் கை கால்களில் குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளிகளுடன் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினர். தங்கள் அனுபவங்களையும் ஒருங்கிணைத்துத் தொடர்ந்து வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்து வந்தனர்.

இந்த நியோபோல்ட்,  ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை, பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டு, ‘நியோமோஷன்’  என்ற தொழில் முனைவு நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்டது.

நியோமோஷன் நிறுவனம் பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் மற்றும் சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவரும் அந்நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு.ஸ்வாஸ்திக் சௌரவ் டாஷ் ஆகியோரால் தொடங்கப்பட்டது.


ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே அப்படியே எழுந்து நிற்கவும் வகை செய்யும் அரைஸ் என்ற இயந்திரத்தைத் தயாரித்த குழுவிற்கும் பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் தான் தலைமை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவிலேயே முழுமையாகத் தயாரிக்கப்பட்ட இத்தகைய முதல் இயந்திரம் என்பதும் கூடுதல் சிறப்பு.

 இது குறித்து பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் கூறியதாவது:

சிறந்த செயல்பாட்டுடன் குறைந்த விலையில் இத்தகைய இயந்திரங்கள் மூலம், இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் நிலைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது எங்கள் நோக்கம். ஒரு பள்ளியிலோ, அலுவலகத்திலோ கடையிலோ, திரையரங்கத்திலோ சக்கர நாற்காலியுடன் வருபவரைப் பார்ப்பது மிக அரிது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை நான்கு சுவர்களுக்குள்ளேயே மட்டுப்படுத்திக் கொள்ளும் நிலை தான் நிலவுகிறது. இதனால் இவர்களின் சமூக, பொருளாதாரப் பங்களிப்பு தடைபடுகிறது. நியோ  என்னும் புதிய தொழில் முனைவு நிறுவனம், சென்னை ஐஐடி-யில்  உருவானது. உலகத் தரம் வாய்ந்த சக்கர நாற்காலி இயந்திரங்களை சொந்தப் பயன்பாட்டுக்காகவும் உலகத்துக்காகவும் இந்தியாவில் தயாரிக்கும் பணியை இந்நிறுவனம் செய்து வருகிறது.

தனிப்பட்ட பயனரின் தேவைகளுக்கேற்ப, 18 விதமாக மாற்றியமைக் கப்படக்கூடிய சிறப்பு வாய்ந்த இயந்திரம் இது.

“பயனரின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்படும் இந்தியாவின் முதல் சக்கர நாற்காலி இந்த நியோஃப்ளை. இது பயனருக்கு வசதியான, உடலுக்கு இதமான இருக்கையுடனும் நல்ல வேகத் திறனுடனும் எளிதாகக் கையாளும் வசதியுடனும் வடிவமைக் கப்பட்டுள்ளது.

மோட்டாரில் இயங்கும் நியோ போல்ட் (NeoBolt) என்ற  இணைப்பு, இந்த நியோஃபளையைப் பாதுகாப்பான, சாலையில் செல்லத்  தகுதியான வாகனமாக மாற்றுகிறது, இது நாம் பொதுவாக எதிர்கொள்ளும் எந்த வகையான நிலப்பரப்பிலும் எளிதாகச் செல்ல முடியும்-நடைபாதை இல்லாத தெருக்களில் ஓடவும் அல்லது செங்குத்தான சாய்வில் ஏறவும் இது திறன் பெற்றுள்ளது. அதிர்வுகளைத் தாங்கும் சஸ்பென்ஷன்கள் இந்த எளிமையை வழங்குகின்றன.”

இவ்வாறு  பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

நியோமோஷன் நிறுவனத்தின் இணை நிறுவனரும் அதன் முதன்மைச் செயல் அலுவலருமான திரு ஸ்வாஸ்திக் சௌரவ் டாஷ் இது குறித்து கூறியதாவது:

இந்தியாவின் 28 மாநிலங்களில் 600-க்கும் அதிகமான பயனர்களால் நியோஃப்ளை மற்றும் நியோ போல்ட் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எங்களது தனித்துவமான நியோஃபிட் அமைப்பின் மூலம், தேவைக் கேற்ற வடிவமைப்பு முழுவதும் தொலைதூரத்திலிருந்தே செய்யப்பட்டு, பயனருக்குப் பொருத்தமான நியோஃப்ளை அவரின் இல்லம் தேடி வருகிறது.”

தனிப்பட்ட தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலி நியோஃப்ளையின் விலை ரூ. 39,900 மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட இணைப்பான நியோபோல்ட்டின் விலை

ரூ. 55,000. நாங்கள் எளிதான EMI வசதியையும் வழங்குகிறோம். பயனர்கள் தங்கள் ஆர்டர்களை எங்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு,  வெறும் ஆயிரம் ரூபாய்க்கு முன்பதிவு செய்யலாம்.


இவ்வாறு அவர் கூறினார். 

பஞ்சர் ஆகாத டயர்கள், டிஜிட்டல் டாஷ்போர்டு, முகப்பு விளக்கு, சைட் இன்டிகேட்டர்கள், ஒலிப்பான், கண்ணாடி போன்றவை நியோஃப்ளையின் சிறப்பம்சங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...