முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் முதல் உள்நாட்டு மோட்டார் சக்கர நாற்காலி வாகனம்: சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது

இந்தியாவின் முதல் உள்நாட்டு மோட்டார் சக்கர நாற்காலி வாகனம்: சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது


இந்தியாவின் முதல் உள்நாட்டு மோட்டார் சக்கர நாற்காலி வாகனத்தை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் விற்கப்படும் மொத்தம் 3 லட்சம் சக்கர நாற்காலிகளில் 2.5 லட்சம் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றின் விலையும் மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகம்.


இந்தியாவின் முதல் உள்நாட்டு மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி வாகனத்தை, சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது. இதை சாலைகளில் மட்டுமல்ல, சீரற்ற நிலப்பரப்புகளிலும் பயன்படுத்த முடியும்.

நியோபோல்ட் என்று அழைக்கப்படும் இது அதிகபட்சமாக 25 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 கிமீ வரை பயணிக்கிறது. கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, இது சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கு  வசதியான, பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவில் போக்குவரத்துக்கு வழி வகுக்கிறது.

நியோபோல்ட், லித்தியம்-அயன் பேட்டரியால் இயக்கப்படுகிறது.


இதன் உருவாக்கத்தின் போது, சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்,  வாகனம் ஓட்ட முடியாத அளவுக்குக் கை கால்களில் குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளிகளுடன் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினர். தங்கள் அனுபவங்களையும் ஒருங்கிணைத்துத் தொடர்ந்து வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்து வந்தனர்.

இந்த நியோபோல்ட்,  ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை, பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டு, ‘நியோமோஷன்’  என்ற தொழில் முனைவு நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்டது.

நியோமோஷன் நிறுவனம் பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் மற்றும் சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவரும் அந்நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு.ஸ்வாஸ்திக் சௌரவ் டாஷ் ஆகியோரால் தொடங்கப்பட்டது.


ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே அப்படியே எழுந்து நிற்கவும் வகை செய்யும் அரைஸ் என்ற இயந்திரத்தைத் தயாரித்த குழுவிற்கும் பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் தான் தலைமை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவிலேயே முழுமையாகத் தயாரிக்கப்பட்ட இத்தகைய முதல் இயந்திரம் என்பதும் கூடுதல் சிறப்பு.

 இது குறித்து பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் கூறியதாவது:

சிறந்த செயல்பாட்டுடன் குறைந்த விலையில் இத்தகைய இயந்திரங்கள் மூலம், இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் நிலைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது எங்கள் நோக்கம். ஒரு பள்ளியிலோ, அலுவலகத்திலோ கடையிலோ, திரையரங்கத்திலோ சக்கர நாற்காலியுடன் வருபவரைப் பார்ப்பது மிக அரிது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை நான்கு சுவர்களுக்குள்ளேயே மட்டுப்படுத்திக் கொள்ளும் நிலை தான் நிலவுகிறது. இதனால் இவர்களின் சமூக, பொருளாதாரப் பங்களிப்பு தடைபடுகிறது. நியோ  என்னும் புதிய தொழில் முனைவு நிறுவனம், சென்னை ஐஐடி-யில்  உருவானது. உலகத் தரம் வாய்ந்த சக்கர நாற்காலி இயந்திரங்களை சொந்தப் பயன்பாட்டுக்காகவும் உலகத்துக்காகவும் இந்தியாவில் தயாரிக்கும் பணியை இந்நிறுவனம் செய்து வருகிறது.

தனிப்பட்ட பயனரின் தேவைகளுக்கேற்ப, 18 விதமாக மாற்றியமைக் கப்படக்கூடிய சிறப்பு வாய்ந்த இயந்திரம் இது.

“பயனரின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்படும் இந்தியாவின் முதல் சக்கர நாற்காலி இந்த நியோஃப்ளை. இது பயனருக்கு வசதியான, உடலுக்கு இதமான இருக்கையுடனும் நல்ல வேகத் திறனுடனும் எளிதாகக் கையாளும் வசதியுடனும் வடிவமைக் கப்பட்டுள்ளது.

மோட்டாரில் இயங்கும் நியோ போல்ட் (NeoBolt) என்ற  இணைப்பு, இந்த நியோஃபளையைப் பாதுகாப்பான, சாலையில் செல்லத்  தகுதியான வாகனமாக மாற்றுகிறது, இது நாம் பொதுவாக எதிர்கொள்ளும் எந்த வகையான நிலப்பரப்பிலும் எளிதாகச் செல்ல முடியும்-நடைபாதை இல்லாத தெருக்களில் ஓடவும் அல்லது செங்குத்தான சாய்வில் ஏறவும் இது திறன் பெற்றுள்ளது. அதிர்வுகளைத் தாங்கும் சஸ்பென்ஷன்கள் இந்த எளிமையை வழங்குகின்றன.”

இவ்வாறு  பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

நியோமோஷன் நிறுவனத்தின் இணை நிறுவனரும் அதன் முதன்மைச் செயல் அலுவலருமான திரு ஸ்வாஸ்திக் சௌரவ் டாஷ் இது குறித்து கூறியதாவது:

இந்தியாவின் 28 மாநிலங்களில் 600-க்கும் அதிகமான பயனர்களால் நியோஃப்ளை மற்றும் நியோ போல்ட் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எங்களது தனித்துவமான நியோஃபிட் அமைப்பின் மூலம், தேவைக் கேற்ற வடிவமைப்பு முழுவதும் தொலைதூரத்திலிருந்தே செய்யப்பட்டு, பயனருக்குப் பொருத்தமான நியோஃப்ளை அவரின் இல்லம் தேடி வருகிறது.”

தனிப்பட்ட தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலி நியோஃப்ளையின் விலை ரூ. 39,900 மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட இணைப்பான நியோபோல்ட்டின் விலை

ரூ. 55,000. நாங்கள் எளிதான EMI வசதியையும் வழங்குகிறோம். பயனர்கள் தங்கள் ஆர்டர்களை எங்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு,  வெறும் ஆயிரம் ரூபாய்க்கு முன்பதிவு செய்யலாம்.


இவ்வாறு அவர் கூறினார். 

பஞ்சர் ஆகாத டயர்கள், டிஜிட்டல் டாஷ்போர்டு, முகப்பு விளக்கு, சைட் இன்டிகேட்டர்கள், ஒலிப்பான், கண்ணாடி போன்றவை நியோஃப்ளையின் சிறப்பம்சங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த